அனைத்தையும் நாடி  இத்தனை நோய்கள் குணமாகுமா ? பேரீச்சம் பழங்களின் நன்மைகள்

இத்தனை நோய்கள் குணமாகுமா ? பேரீச்சம் பழங்களின் நன்மைகள்

2020 Nov 23

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குருதிச் சோகை, கண் பார்வை குறைபாடு, மலச்சிக்கல் மற்றும் இரும்புச் சத்து குறைப்பாடு போன்றவற்றின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனை குணப்படுத்துவது காலப்போக்கில் சவாலான ஒன்றாக மாறிவிடுகிறது. இவ்வாறான பாதிப்புக்கள் உடலில் ஏற்படாதவாறு பாதுகாப்பதோடு இவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகும் போது அவற்றிலிருந்து குணமடையவும் ஈச்சபழம் பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு அப்பிள் சாப்பிடுவதால் வைத்தியரிடம் போக வேண்டிய தேவை ஏற்படாது என்பார்கள். அதுப் போல் தினமும் குறைந்தது இரண்டு ஈச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் குருதி சம்பந்தமான நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஈச்சம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில இதோ! உங்களுக்காக,

ஈச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமே காணப்படுவதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இரும்புச் சத்தோடு விட்டமின் A மற்றும் கல்சியமும் (சுண்ணாம்புச் சத்து) அடங்கியுள்ளது.

குருதி சம்பந்தமான குறைப்பாடுகள் உள்ளவர்கள் தினமும் ஈச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் குருதி விருத்தியடையும்.

ஈச்சம்பழத்திலுள்ள கல்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மூட்டு தேய்மானம் மற்றும் வலுவிழப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில் அதிகமான குருதி வெளியேறுகிறது. இச்சமயத்தில் அந்த குருதியிழப்பினை ஈடு செய்வதற்கு ஈச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்து உதவுகிறது.

சக்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் அதிகளவான இனிப்பினை உட்கொள்ள முடிவதில்லை. இதனால் இனிப்பினை சுவைக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ள சக்கரை நோயாளிகள் ஈச்சம்பழத்தினை சுவைக்கலாம். இதிலுள்ள இனிப்பு அவர்களுக்கு எந்த பாதக விளைவையும் ஏற்படுத்தாது.

மலச்சிக்கல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மூன்று வேளை உணவு சாப்பிடும் முன் ஈச்சம்பழங்கள் சிலவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெறலாம்.

விட்டமின் A குறைபாட்டே கண் சம்பந்தமான நோய்கள் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்பட காரணமாகிறது. கண்பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் கண்புரை மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்கவும் ஈச்சம்பழம் உதவுகிறது.

இவ்வாறாக உடலில் எலும்பு, தசை, குருதி மற்றும் கண் போன்றவற்றினை சீராக பேணி காக்க உதவும் ஈச்சம்பழத்தினை முடிந்த வரை தினமும் குறைந்தது இரண்டு வீதம் உட்கொண்டு நோய்கள் வரும் முன் நம்மை நாமே காத்துக் கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php