கலை கலாசாரத்தை நாடி சிகிரியாவும் சர்ச்சைகளும்..

சிகிரியாவும் சர்ச்சைகளும்..

2021 May 9

சிகிரியா மலைக்குன்று மற்றும் அதன் ஓவியங்கள், இலங்கையின் இருப்பிடத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதாக வித்துட்டுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும். இது உலகின் 8 ஆவது அதிசயமாக திகழ்வதோடு ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட சிறந்த மத்திய நகரமாகவும் போற்றப்படுகிறது.

இலங்கை இராசதானியின் அரசனாக விளங்கிய துட்டகைமுனு மன்னன், அவனது 2வது மனைவியின் பிள்ளையான காசியப்பனை மகுடம் சூட்டாமல் தனது மற்றொரு மகனான முகலனை அரசனாக்குவதில் மும்முரம் காட்டி வந்தார். இதனை அறிந்த காசியப்பன், தனது தந்தையை கொலை செய்து ஆட்சி பீடம் ஏறினான். இதனை கண்டு அஞ்சிய முகலன் இந்தியாவிற்கு தப்பி ஓடி தன் உயிரை காப்பாற்றிகொண்டான். இலங்கையை விட்டு சென்றாலும் இச் சிம்மாசனத்திற்கு எப்போதும் ஆபத்து இருக்கும் எனக் கருதி, எதிரிகளின் படையெடுப்புகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, இத்தகைய பாதுகாப்பு மிக்கதோர் கோட்டை ஒன்று கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் சிலர் இது காசியபப்பனின் தந்தையான துட்டகைமுனு காலத்திலேயே கட்டப்பட்டதாகவும் அவரின் இறப்பின் பின்னர் இது காசியப்பனால் மீள்நிர்மாணிக்கப்பட்டு தலைநகரமாக முடி சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

தந்தையை நேரடியாக கொலை செய்யாவிடினும் இறப்பிற்கு மறைமுகமான காரணமாக விளங்கிய காசியப்பன், குற்ற உணர்வுடன் இருந்ததோடு மக்களின் பயங்கர எதிர்ப்புக்கு ஆளானான். இந்தியாவிற்கு தப்பிச்சென்ற முகலன் காசியப்பனுக்கு எதிராக படை திரட்டி சிகிரியாவை கைப்பற்றினான். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் காசியப்பன் தன் குரல்வளையை கத்தியால் வெட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து முகலன் அநுராதபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்ததுடன், சிகிரியா மலைக்குன்று புத்த மதத்தை கற்பிக்கும் பாசறையாக விளங்கியது. பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் 1831ஆம் ஆண்டு பிரித்தானியா படையின் மேஜராக விளங்கிய ஜொனதன் போப்ஸ் என்பவரினால், அவர் பொலன்னறுவையில் இருந்து வரும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதியில், கலை அம்சம் அனைத்தும் பொருந்திய இக் குகை கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் படிக் கற்கள் எதுவும் இல்லாமையினால் உச்சியில் என்ன இருந்தது என்பதை அறிவதற்கு பல வருடங்கள் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே, மேலத்தேய நாடுகளுக்கு சிகிரியாவின் கலை அம்சம் பற்றிய செய்திகள் பரவ ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு, UNESCO இன் பாரம்பரியமிக்க புராதன தளங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது. இவ் வரலாறுகளை நாம் சிறு வயது முதல் பல மூலங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இனி சிகிரியாவின் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் பற்றி சற்று ஆராய்வோம்.

இதன் அடிப்படியையில் சிகிரியா கோட்டையை கட்டியது லங்காதிபதி ராவணேஷ்வரன் என்று அழைக்கப்படும் ராவணன் என்று ‘ராவணன் வதன்’ என்ற புத்தகத்தில் கூறப்படுவதோடு, 1600 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சில தொல்பொருள் ஆய்வாளர்களினால் கூறப்படுகின்றது. மேலும் இவை ராவணின் தந்தை விஷ்னவாஸ் காலத்தில் கட்டப்பட்டதாகவும் சில ஆதாரங்கள் உள்ளன. இக் கோட்டையானது, 30 மில்லியனிற்கும் அதிகமான செங்கற்களை கொண்டு அமையப்பெற்றதோடு, மிக அரிய வகையான மாபிள்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ் மாபிள்களின் நிறை ஏறத்தாள 20 கிலோ கிராம் என்றும், இவை இலங்கையில் இருந்து பெறப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது. சிகிரியா குகையின் படிகள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப் பெற்றதாகவும் அதற்கு முன்பு ஏறுவதற்கு எவ் வகையான வழிமுறைகளும் கையாளப்படவில்லை என்றே பலரால் கூறப்படுகின்றது. ஆகையால் இப் பாரிய பளிங்குகள் மற்றும் மில்லியன் கணக்கான செங்கற்கள் எவ்வாறு மேலே கொண்டு செல்லப்பட்டன என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை. எனினும் இதனை கட்டுவதற்கு தேவையான களிமண் மற்றும் மூலப்பொருட்கள் அங்கு இருந்ததாகவும், பளிங்குகள் மற்றும் தொழிலாளர்கள் ராவணின் புஷ்பக விமானத்தின் உதவியுடன் மலை உச்சிக்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அக்காலத்தில் புஷ்பக விமானத்தை தரையிறக்க, நான்கு தரையிருக்கும் நிலையங்கள் உலகில் அமைக்கப்பெற்றதாகவும், அதில் ஒன்று சிகிரியா குன்று என்றும் கூறப்படுகின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் சிகிரியா குன்றுக்கு அண்மையில் பிதுரங்கல என்ற மலை நிறுவப்பட்டதாகவும், இவை இரண்டினதும் உயரம் 660 அடி எனவும், அதன் வடிவம் புஷ்பக விமானத்தின் வடிவத்தை ஒத்து அமையப்பெற்றுள்ளதோடு, இது எதிரிகளை திசைதிருப்பும் யுக்தியாகவும் கருதப்படுகிறது. மேலும் ராவணன் இரவு நேரங்களிலேயே அதிகமாக இங்கு வருவதாகவும், அதன் அடிப்படையில் சிகிரியா குகை ஒளியூட்டப்பட்டதற்கான பல எச்சங்கள் இன்னும் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிகிரியா கலை அம்சத்திற்கும் அதன் கட்டுமான யுக்திகளிற்கும் பெயர்பெற்ற ஓர் இடமாகும். இங்கு 500க்கும் மேற்பட்ட குகை ஓவியங்கள் கண்ணாடி போன்ற பளிங்குகளில் வரையப்பட்டுள்ளன. இவை இயற்கையாக கிடைக்கும் தேன், சாம்பல் மற்றும் மரப்பட்டைகளை கொண்டு வரையப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ் ஓவியங்கள் அனைத்தும் இந்தியாவில் இருக்கும் அஜந்தா ஓவியத்தின் இயல்புகளை கொண்டுள்ளதோடு, சிகிரியா ஓவியத்தில் இருக்கும் பெண்கள் ராவணன் காலத்தில் பணி புரியும் பெண்கள் எனக்கருதப்படும் எக்ஸாஸ் இனத்தை ஒத்தவர்கள் எனவும் சான்றுதல்கள் நிரூபிக்கின்றன. இக் குகைக்கு பிரதான நுழைவாயில் தவிர்ந்து மேலும் மூன்று துணை வாயில்கள் காணப்படுவதோடு, அவை இரு சிறு குன்றுகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளன. இக் குன்று வழியாக இருவர் மாத்திரமே ஒரு தருணத்தில் நுழைய முடியும் என்பதோடு, அக்காலத்தில் இத் துணை வாயில்களை காப்பதற்கு 10 வீரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிரியாவின் பிரதான நுழைவாயிலில், மூன்று விரல்களைக் கொண்ட சிங்கத்தின் பாதங்கள் காணப்படுகின்றது. முற்காலத்தில் இவை நான்கு விரல்களை கொண்டிருந்ததாகவும், அது தமிழ் வரலாற்றில் பிரபலமாக கருதப்பட்ட ‘யாளி’ என்ற மிருகத்தின் பாதத்தின் ஒத்த வடிவத்தை கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

21ஆம் நூற்றாண்டில் கூட சிகிரியாவை ஒத்த நீர்ப்பாசண அதிசயங்களை நிழத்துவது கடினம். இங்கு 90x68x7 அடி பரிமாணத்தைக்கொண்ட ஓர் குளம் உள்ளது. இக்குளமானது கோடைக் காலத்தில் வற்றிப்போகாமலும் மழைக்காலத்தில் நிரம்பி வழியாமலும் இருக்கும் என்பதே, அதன் சிறப்பியல்பாகும். மேலும் இக் குளம் Scooping தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அகழப்பட்டதாகவும், இதில் 3500 Ton களிற்கும் அதிகமான Granite பெறப்பட்டதாகவும் கணிக்கப்படுகிறது. மேலும் அதன் வாயில்களில் பல சிறு குளங்கள் அமைந்துள்ளன. இதற்கு தேவையான நீர் சிகிரியாவிற்கு அருகாமையில் இருக்கும், ‘வாவ’ என்ற ஏரியிலிருந்து பெறப்படுகின்றது. அதில் சில, தரைமட்டத்திலும் 4 அடி ஆழத்திலும், எதிரிகளை திசைதிருப்புவதற்கு பயன்பட்டுள்ளது. மேலும் இக் குகை உச்சியில் 2295 Ton கொண்ட பாரியதோர் பாரை ஒன்று இருப்பதாகவும் அவை சிறு கற் தூண்களில் மேல் வைக்கப்பட்டுள்ளதாகவும், ராவணனால் மாத்திரமே இவ்வகையாக மேலே வைக்க முடியும் எனவும், எதிரிகள் வரும் பட்சத்தில் தூணை தட்டிவிடுவதன் மூலம் எதிரிகளின் மேல் அவை விழுந்து எதிரிகள் தாக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php