அனைத்தையும் நாடி  கடும்போக்குடைய கண்டிப்பான பெற்றோரை கையாள்வது எப்படி?

கடும்போக்குடைய கண்டிப்பான பெற்றோரை கையாள்வது எப்படி?

2021 Jun 6

நீங்கள்  பொது இடங்களில்  உங்கள் பெற்றோருடன்  நடக்கும் போது, உங்கள் முன்னிலையில் நீங்கள் காதல் கொண்ட நபர் தோன்றும் போது, அவரை  கண்டு திகைத்து இவர் என்னுடைய நண்பர் அல்லது என் நண்பரின் உறவினர் என்றவாறு பொய்யாக அறிமுகம் செய்த அனுபவம் உள்ளதா? 

இல்லையெனில், ஏதேனும் ஒரு நடுநிசி நேர களியாட், கொண்டாட்ட நிகழ்விற்காக வேண்டி  நண்பரது வீட்டில் இரவு பொழுதை கழிப்பதாக பொய் கூறிய அனுபவம் உள்ளதா? நிச்சயமாக எனக்கு இத்தகைய அனுபவம் நிறையவே உள்ளது. நான் எனது பெற்றோரை ஏமாற்றுவதற்காக இவ்வாறான காரியங்களை செய்யவில்லை. 2000 ஆண்டுகளின் ஆரம்ப காலங்களின் பிறந்த நாம் இவ்வாறான விடயங்களை எம் பெற்றோருடன் இலகுவாக பறிமாறிக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது, ஒரு மனிதன், தான் செய்த பிழைகளில் இருந்தே ஒழுங்கான அனுபவத்தை பயில்கின்றான். ஆம், அவ்வாறே இளமை காலத்தில் அனுபவிக்க வேண்டிய விடங்களை அனுபவித்து விட வேண்டும். இந்த குறிப்பிட்ட வயதில் வாழ்வின் இரசனையை புரியாமல், பிறகு எந்த வயதில் வாழ்க்கையை அனுபவிப்பது? ஆம் பெற்றோர்கள் எம் மீது அளவு கடந்த நம்பிக்கையையும் அக்கறையையும் கொண்டுள்ளார்கள்தான். ஆகையால் எமக்காக ஏராளமான வரையறைகளை விதிக்கிறார்கள். எனினும் இங்கு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளியின் காரணமாகவே பெற்றோர்கள் கடும்போக்குவாதிகளாக உருமாறுகின்றனர்.

உங்களது அயல்வீட்டிலிருக்கும் ஒரு 24 வயது அக்காவாக, ஒரு சகோதரியாக  என்னை எண்ணிக் கொள்ளுங்கள். நான் இத்தகைய கடுமையான போக்குடைய பெற்றோரை எவ்வாறு சமாளிப்பதென சில குறிப்புக்களை உங்களுடன் பகிர போகிறேன்.

தீவிரமான  நெருக்கமான கலந்துரையாடலின் போது 

குறிப்பிட்ட இந்த கலந்துரையாடலிற்கு முன்னதாகவே அந்த கலந்துரையாடலில் எத்தகைய கேள்விகள் எழும் என்று எண்ணிக் கொண்டு அதற்காக நாம் எவ்வாறு தயாராக போகின்றோம் என்ற மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் இருக்கையினை மனதிற் கொண்டு உங்களது கலந்துரையாடலும் கேள்விக்கான விடைகளும் அமையவேண்டும்.

நீங்கள் தனியாக சுற்றுலா ஒன்று செல்ல அனுமதி கேட்கும் போது, பெற்றோர்கள் வழமையாக பாடும் பாடல் பல்லவியாக யாருடன் செல்கிறாள்? யார் யார் உன்னுடன் வருகிறார்கள்? யார் வாகனத்தை செலுத்துகிறார்? போன்ற கேள்விகளை அவர்கள் கட்டாயம் கேட்பார்கள். ஆகவே இத்தகைய கேள்விகளுக்கு  துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாக்கள் போல பதில் கூற நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதேவேளையில் நீங்கள் கூறும் அதே பதில்களை உங்கள் நண்பர்களும் தேவை ஏற்படின் ஒப்பிக்க தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

அவர்களுடன் அமர்ந்து கதையுங்கள்

ஒரு முடிவினை எடுத்த பின் அதனை பெற்றோருக்கு தெரிவிக்கும் தருணத்தின் போது அன்றைய நாளில் அவர்களது மனநிலை எவ்வாறு உள்ளதென அவதானியுங்கள். பின்னர் அவர்களிடம் சென்று அமர்ந்து நீங்கள் எடுத்த முடிவினை தைரியமாக கூறுங்கள். உங்களது முடிவினை தெரிவிக்கும் போது “நான் இவ்வாறு உணர்கிறேன்”, “நான் நினைக்கிறேன்” போன்ற வார்த்தைகளை தவிர்த்து, தீர்க்கமாகவும் உறுதியாகவும் கதையுங்கள். 

உதாரணமாக சுற்றுலா ஒன்றுக்கு அனுமதி கோரும் போது, ‘இந்த ஹோட்டல் உகந்ததா?’ என்று வினவினால், ஆம் நிச்சயமாக.. நாம் நிறைய இடங்களில் விசாரித்தே இந்த ஹோட்டலினை பதிவு செய்தோம். குறிப்பாக உங்களது நட்பு வட்டாரத்தில் பெற்றோரின் நன்மதிப்பை வென்ற நண்பர் ஒருவர் நிச்சயமாக இருப்பார். அத்தகைய நண்பரை  முன்னிலைப் படுத்தி, இந்த சுற்றுலாவிற்கான சகல முன் ஏற்பாடுகளை அவர்தான் செய்தார் என்று கூறுவதன் மூலமாக, பெற்றோரின் நம்பிக்கைக்கு வலுவூட்டலாம். அது மட்டுமல்ல பெண்கள் அனைவருக்கும் பிரத்தியேக பெரிய அறை பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் நிச்சயமாக உறங்க செல்லும் முன்னர் ஜன்னல்கள் மூடி உள்ளதா என்பதை சரி பார்த்து விட்டே நிச்சயமாக செல்வோம் என்று அவர்கள் கேள்விகளை தொடுக்க  முன்னரே நாம் விளக்கத்துடன் பதில் கூறுவதால்,  தேவையற்ற முரண்பாடுகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும்.

மரியாதையுடன் அவர்களுடன் சொல்லாடுதல்

ஒரு கட்டத்தில் உங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டால், நீங்கள் ஒரு போதும் பின் வாங்கக் கூடாது. மாறாக நான் அந்த அனுமதி கோரிய விடயத்திற்கு தகுதியுடையவள் என்றும், ஏன் எனக்கான அனுமதி மறுக்கப்பட்டது அதற்கான காரணத்தை கூறும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டறிய வேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஒரு இரவு போசண விருந்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளீர்கள். பின்னர் நீங்கள் சற்று தாமதித்து விட்டிற்கு வர அனுமதி கோருகின்றீர்கள். எனினும் பெற்றோர்கள் மறுக்கின்றனர். இத்தகைய நேரங்களில், பெற்றோர்களிடம் ‘ஆம் எனக்கு தெரியும்’, தாமதித்து வீடு வருவது பாதுகாப்பானதல்ல.. எனினும் நான் வழமையாக அப்படி வருவதில்லையே! என்றாவது ஒரு நாள் தான் இவ்வாறு வருகின்றேன்.. நிச்சயமாக நான் பாதுகாப்பாக என் நண்பருடன் வருவேன் என்று கூறி, உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து விளக்கி அனுமதி பெற வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்டாலும், அதை முழுமையாக வழங்கப்பட்ட அனுமதி என எடுத்துக் கொள்ளக் கூடாது

இதுவே மிக முக்கியமான கட்டமாகும். ஏன் எனில், அன்றைய தினம் நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு வந்து சேர்வேன் என உறுதியளித்தீர்கள். எனினும் சில வேளைகளில் மது அருந்தி விட்டு வீடு வந்து சேர வேண்டிய குறிப்பிட்ட நேரத்தை கடந்து வீட்டீர்களாயின், அன்றைய தினம் நீங்கள் வீடு திரும்ப எத்தணிக்காதீர்கள். ஏன் எனின் இத்தகைய செயல்கள் அவர்களது நம்பிக்கையை தகர்க்க கூடியவையாகும்.

ஆகவே இத்தகைய சில குறிப்புக்கள் கடும்போக்கு குணங்களை சமாளிக்க கூடிய வகையில் அமையும் என நம்புகின்றேன். இனிமேல் நாம் அனைவரும் சுதந்திர பறவைகளாக இவ்வுலகில் வலம் வருவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php