அனைத்தையும் நாடி  இலங்கையின் ஐந்து வகையான சமூக ஊடக பாவனையாளர்கள்.

இலங்கையின் ஐந்து வகையான சமூக ஊடக பாவனையாளர்கள்.

2021 Jul 25

இன்றைய நவீன தொடர்பாடல் உலகத்தில் சமூக ஊடகங்களில் கணக்கினை கொண்டிராத மக்களை அடையாளம் கானுவது மிகவும் கடினமான ஒரு விடயம்.
நாளொன்றில் Twitter, Facebook, Instagram, Snap chat என பல்வேறு சமூக ஊடகங்களில் எமது விரல்கள் சங்கமித்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் குழந்தை ஒன்று பிறந்தவுடன் குழந்தையின் பிறப்புச்சான்றிதலின் வெளியீட்டுக்கு மு Facebook account திறந்த சம்பவங்கள் ஏராளம். அதேவேளையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் அண்மையில் Instagram இணைந்து தனது அன்பையும் ஆசீர்வாதத்தையும்  பகிர்கிறார் என்பது இக் காலத்தில் இயல்பான விடயமே.
மேலும் சமூக ஊடகங்களின் மூலமாக பல்வேறு ஆக்கத்திறன் மிக்க ஆளுமையாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

அதேவேளையில் பொதுவாகவே சமூக ஊடகங்களில் இயல்பான பண்புகள் மற்றும் குறிபிட்ட வார்த்தை பிரயோகங்கள் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. ஆகவே எமது கண்ணோட்டத்தில் இலங்கை மக்களினால் பொதுவாக பின்பற்றப்படும் பண்புகளை அதேவேளையில் அதிகம் பகிறப்படும் நடவடிக்கைகள் சற்று அவதானத்தில் கொண்டு வர முயற்சித்தோம்.

  1. ஐயோ  என்னால் அது இயலாது.

நம் நண்பர்களின் வட்டத்தில் பொதுவாக ஒரு நாளில்  நடைபறும் அனைத்து விடயங்களையும் பகிரக் கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக தனது அறையை சுத்தம் செய்வது தொடக்கம் தனது நண்பன் அல்லது நண்பியிடம் ஏற்பட்ட முரண்பாடுகளை பகிரக்கூடியவர்களாக இருப்பார்கள். இத்தைகய நண்பர்களுடன் அமர்ந்து உனக்கு என்ன தான் பிரச்சனை என்ற கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் நிச்சயமாக எழுந்திருக்கும். இத்தைகய விடயங்கள அவர்கள் பதிவிடுவதற்கான காரணம், அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்ப்பதற்காகவே அவர்கள் இத்தைகய செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

2. அதிகமான பதிவுகளை பதிவிடும் சமூக ஊடக அங்கத்தவர்களும் அவர்களினால் பாதிக்கப்பட்டவர்கள்.

பார்ப்பவர்களை அதிகம் வெறுப்பிற்கு உள்ளாக்குவது போல் வேண்டுமென்றே அதிகம் பதிவிடுவார்கள். உதாரணமாக, “I ate hamsters for breakfast.” “நான் ஒரு நாயை நாளை திருமனம் செய்யப் போகின்றேன்.” இவ்வாறு பதிவிடுபவர்கள் விநோதம் என எண்ணி, பதிவிடும் சில பதிவுகள் பார்ப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

3. இல்லை இல்லை இவர் எனது தங்கச்சி/ அண்ணா போன்றவர்.

ஆம். நிச்சயமாக சகல காதலும் ஏதோ ஒரு நட்பு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. ஆயினும் இன்றைய காலத்தில் ஆண், பெண் இருபாலாரும் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்கள். அதேவேளையில் சமூக ஊடகங்களில் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் பார்பவர்களை அவர்கள் இருவரும் காதலர்கள் என எண்னுவதற்கு வழி வகுக்குகின்றது. எனினும் அவர்கள் பதிவிட்ட பதிவுகளின் அடிப்படையில்  நீங்கள் இருவரும் காதலர்களா என வினவினால் “இல்லவே இல்லை. அவர் எனக்கு ஒரு அண்ணனை போன்றவர், அல்லது அவள் என்னுடைய தங்கை போல ஒருத்தி” என பதில் கூறுவார்கள்.  மேலும் “இவர் என்னுடைய சிறந்த நண்பர்” என்று பதில் கூறுவார்கள்.

4. நான் அனைவருடனும் இணைந்தே இருப்பேன்.

ஆம். நிச்சயமாக இத்தகைய விடயங்கள் மனதிற்கு நெருடலாகத் தான் சில வேளைகளில் உணருவேன். ஏன் எனின் ஏதேனும் இரவு விருந்திற்கு சென்றால் நிச்சயமாக ஒரு நிழற் படத்தை எடுத்து சமூக ஊடகங்களில் அனைவரையும் Tag செய்து பதிவிடுவேன். எனினும் அப் பதிவினை கவனிக்கும் சிலர் நான் ஏதோ பந்தாவிற்காக செய்கின்றேன் என்று எண்ணுகிறார்கள். எனினும் நான் பதிவிடும்  நிழற்படங்கள் என் ஞாபகத்திற்காக மட்டுமே என்பதை நான் மட்டுமே அறிவேன்.

5. ஆகா ஆகா இந்த  கிரிக்கட் meme யை பார்.

இன்றைய காலகட்டத்தின் கிரிக்கட் பெரிதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. எனினும் நான் கிரிக்கட் பற்றி meme share செய்பவர்களை கணக்கில் கொள்ளவில்லை. இருப்பினும் நான் இன்றைய காலகட்டத்தில் கிரிக்கட் மீது உண்மையான காதல்களை கொண்ட  ரசிகர்களை பற்றித்தான் பேச போகின்றேன். ஆம் 2010 ல் நான் ஒரு மேலத்தேய இசைக் குழுவின் மீது அன்பு கொண்டிருந்தேன். அதன் காரணமாக அவர்களை பற்றி அதிகமான விடயங்களை share செய்திருக்கின்றேன். அதே போன்று நான் கிரிக்கட் மீது அன்பு கொண்ட இலங்கையர்களும் இன்றைய கிரிக்கட் நிலைமையை கண்டு பரிதவித்து meme share செய்கின்றேன். ஒரு கட்டத்தில் ரசிக்கும் படியாக meme கள் இருந்தாலும் இப்போது சலிப்பு தட்டிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இத்தகைய விடயங்களை தவிர்த்து கொள்ள Facebook ல் unfollow செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது அதேவேளையில் எமது நண்பர்களது பட்டியலில் இருந்தும் நம்மிடம் சேராத நபர்களை unfriend செய்யும் வாய்ப்பும் உள்ளது

உண்மையாகவே சமூக ஊடகங்கள் என்பது மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவே  உருவாக்கப்பட்டது. எனினும்  இன்றைய  காலகட்டத்தில்  பல்வேறு ரீதியில் சமூக ஊடகமானது தவறான முறையில் உபயோகிக்கப்படுகின்றது. எனினும் இந்த விடயம் தொடர்பில் அதிகளவில் நாம் கவலையடைய தேவையில்லை. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழ மொழிக்கேற்ப அளவுடன் சமூக ஊடகத்தை கையாண்டால் அனைத்து விடயங்களும் இனிதாய் அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php