மனிதர்களை நாடி நிறவாதம் பற்றி பேசுகிறார் பிரபல மொடல் ஜீனு மஹாதேவன்.

நிறவாதம் பற்றி பேசுகிறார் பிரபல மொடல் ஜீனு மஹாதேவன்.

2021 Jul 26

மொடல் ஜீனு மகாதேவன் 2017 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இப்போது இவர் ஆண்களுடைய fashion weekற்காக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் .

இலங்கைப் பாரம்பரியத்துடன் கூடிய நோர்வே நாட்டைச் சேர்ந்த ஜீனு 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பஸ் ஒன்றில் ஒஸ்லோவில் உள்ள வீட்டுக்குச் செல்கின்ற போது தான் ஒரு மொடல் என கண்டுபிடித்துள்ளார். மொடலிங் என்பது ஒரு துறையாகவோ அல்லது தொழிலாகவோ அவருடைய மனதில் எப்போதுமே கடந்ததில்லை. ஓர் கணனி விஞ்ஞானியாக அல்லது வானியல் சம்பந்தமான தொழிலில் ஈடுபடவே அவர் விரும்பினார். இவர் தற்போது Versace , Givenchy , Alexander Mc Queen , Burberry போன்ற நிறுவனங்களுக்கு எல்லாம் மொடல் ஆக வேலை செய்கிறார். நீளம் கில் மற்றும் லட்சுமி மேனன் உட்பட பேஷன் தொழிலில் சாதித்துக்கொண்டிருக்கின்ற நிறைய தெற்காசியாவைச் சேர்ந்த ஆட்களில் ஜீனுவும் ஒருவர் தான். எனவே அவர் இப்போது மொடலிங் தொழில் வரலாற்றில் என்ன முகம் கொடுத்தார் என்பதை பற்றி இப்போது அவர் பேசியிருக்கிறார்.

முதல் சில நேரங்களில் அவர் அந்த இடத்தில் பொருத்தமில்லாதது போல் உணர்ந்தார். மேலும் “அங்கே கூடியளவு வெள்ளை நிறத்தவர்களும், குறைந்தளவு கருப்பு நிறத்தவர்களும் இருந்தார்கள், அத்தோடு நானும் இருந்தேன். எனவே நான் செல்லும் இடமெல்லாம் தனித்து நிற்பது போலவே உணர்ந்தேன்” என்றும் அதற்கு அவசியமில்லை என்றும் அவர் ஒரு பிரிட்டிஷ் வெளியீட்டிற்கு சொன்னார்.

இலங்கை மக்கள் உட்பட , தெற்காசிய சமூகத்திலிருந்து எந்தளவு தனிமைப்படுத்தல் மற்றும் பின்னடைவை சந்தித்தார் என்பதை அவர் விவரித்தார்.

வெள்ளை மற்றும் சாதாரண நிறமுடைய தோல்களைக்கொண்ட சருமத்தின் மீதான தெற்காசியாவினுடைய ஆவேசம் எப்போதுமே எமது சமுதாயத்தில் ஒரு அழுத்தமான பிரச்சினையாக இருக்கின்றது. அத்தோடு இது எங்கள் சாதாரண நிற கிரீம் விளம்பரங்களில் பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை
மொடல்ஸ் மற்றும் நடிகர்கள் மிகவும் சாதாரண நிற தோல்களை கொண்டிருந்தால் அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக கருதப்படுகிறார்கள் . அந்தப் பிரச்சினை பற்றி அடிக்கடி பேசப்படாவிட்டாலும் கூட அது சமூகத்தில் மறைக்கப்பட்ட கருத்துக்கள் மூலம், நடவடிக்கைகள் மற்றும் எண்ணங்களில் இன்றும் நடைமுறையில் முன்னொரு போதும் இல்லாத அளவில் காணப்படுகிறது.

சர்வதேச மொடலிங் தொழிலில் முக்கியமான புள்ளியை உருவாக்கிக் கொண்டிருந்த ஜீனுவுக்கு இந்த நிகழ்வினுடைய பாரதூரமான விளைவு எல்லா வழியிலும் போய் சேர்ந்தது. கருப்பு நிறத்தோலையுடைய oru ஆன் மொடலாக இருக்கக் கூடாது என்று நம்பிய இந்திய மற்றும் இலங்கை மக்களினால் விமர்சனம் , நிறவாதம் மற்றும் எதிர்மறைக்கருத்துகளுக்கு அவர் முகம் கொடுத்தார்.

என்னுடைய பெற்றோர் முதலில் கொஞ்சம் பின்வாங்கினார்கள். ஏனெனில் என்னை யாரும் ஒரு மொடல் மெடீரியல் ஆக எடுக்க மாட்டார்கள் என்று, ஆனால் இப்போது எல்லாம் சரியாக இருக்கின்றது.

உண்மையில், ஜீனுவுக்கு கூடியளவு ஆதரவு கிடைத்தது ஐரோப்பிய பிரண்ட்ஸ் மற்றும் அங்குள்ள மக்களுடையதுமாகும். அவருடைய கருத்தானது நிறவாதம் முன்னையதைவிட தற்போது தெற்காசியாவில் கூடுதலாகவே இருக்கின்றது . ஆனால் அடுத்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெற்காசியாவில் சற்று குறைந்த வேகத்திலே காணப்படுகின்றது என்பதாகும் .

நாங்களும் Jeenu போல் வர வேண்டும் என உணர்ந்த, குறிப்பாக இளம் கருப்பு நிற ஆசியா மக்களிடம் இருந்து வந்த நிறைய தனிப்பட்ட செய்திகளை Jeenu ஒப்பு கொண்டார். Jeenu போன்ற உத்வேகம் கொண்ட மனிதர்களோடு இணைந்து எல்லைகளை கடப்பது என்பது மாடலிங் உலகத்தில் தெற்கு ஆசியாவை இன்னும் பிரகாசிக்க செய்யும் நேரத்திற்கு வழி செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php