அழகை நாடி பொன்னிற அழகுடன் மினுமினுப்பான சருமப் பொலிவினை தரும் தக்காளி

பொன்னிற அழகுடன் மினுமினுப்பான சருமப் பொலிவினை தரும் தக்காளி

2022 Aug 26

புத்துணர்வு கொடுக்கும் தக்காளியின் அழகுக் குறிப்புகள்!!

அழகு என்பது பலராலும் விரும்பப்படும் ஒன்றாகும் பச்சிளங் குழந்தை தொடக்கம் பல்லுப்போன கிழவி வரை அழகை விரும்பாதோர் எவரும் இல்லை ஒவ்வொருவரும் தமது அழகினை ஆளுமையின் வெளிப்பாடாக நினைத்தும் பெருமிதம் கொள்கிறார்கள் என்பது எவரும் மறுப்பதற்கில்லை.

தற்போதைய நவீன காலத்தில் திரைப்படங்கள் சினிமாக்களின் ஊடுவருவலால் அதில் காணப்படும் நடிகர்களைப் போன்று தாமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று போலிவிளம்பரங்களை நம்பி கிறீம்களை வேண்டி பணத்தையும் செலவளித்து அழகை கெடுக்கும் தன்மையும் காணப்படுகின்றது. செயற்கை அழகு என்றுமே நிலையில்லை

உடனே அழகாகி விட வேண்டும், வெள்ளையாகி விட வேண்டும் என்று ஆசைப்படும் உங்களுக்கான பதிவுதான் இது இயற்கையான முறையில் எந்த செலவுமின்றி வீட்டில் இலகுவாக கிடைக்கக் கூடிய தக்காளியைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை எவ்வாறு அழகாக வைத்திடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா!!!!

தக்காளியை பார்க்க எப்படி அழகா இருக்கிறதோ அதேபோல நம்மை ஆரோக்கியமாக்குவதற்கும், அழகுகாக்குவதற்குமான தன்மைகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தக்காளியில் இருக்கும் லைகோபீன் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடியது. தக்காளியிலுள்ள லைகோபின் உங்கள் சருமம் முதிர்ச்சியடையாமல் சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கிறது. தக்காளியிலுள்ள புரதம்,மினரல் மற்றும் நார்ச்சத்துக்கள் சரும மற்றும் கூந்தல் அழகிற்கு அவசியாமனதாகிறது. தக்காளியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன அழகு நன்மைகளை பெறலாம் என்று உங்களுக்குத் தெரியுமா!

தக்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. உங்கள் தோல்களை பளபளக்க செய்கிறது. தக்காளியை தினமும் முகத்திற்கு பயன்படுத்தலாம் எந்த பக்கவிளைவும் இல்லை எந்த நேரமும் பயன்படுத்தலாம். நீங்கள் வரண்ட சருமம் உள்ளவர்களா? இல்லை எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவரா!! எந்த வகையாக சருமத்தினரும் பயன்படுத்தக்கூடியதாக தக்காளி இருக்கிறது.பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றாக நீங்கிகருமைநிறம் மறைந்து முகப்பொலிவினை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கருவளையம் தோன்றி விடும். இதனால் முகம் ஒருவவிதமாகவும் கழுத்துப்பகுதி இன்னொரு விதமாகவும் இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்குமா! தக்காளி தருகின்றது இதற்கான உடனடித் தீர்வு தக்காளியை சிறிதளவு சீனியுடன் சேர்த்து பேஸ்ட் செய்து போட்டு விரல்களால் நன்றாக முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் வெறும் பத்து நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரினால் கழுவினால் தக்கநிறம் போன்று சருமத்தின் பளபளப்பினை நீங்கள் பெற்றுவிடலாம்.

முகப்பரு மற்றும் சரும துளைகள், பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளி சாற்றை முகத்தில் தடவி வந்தால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும். சருமமும் அழகாகும். தக்காளியை மிக்ஸியில் பசையாக அரைத்து மசித்து அதனுடன் மூன்று டீஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை பருக்களால் குழிகளாக இருக்கும் சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் காயவைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகத்தில் இருக்கும் குழிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.

நீங்கள் வெயிலில் அதிகம் சுற்றுவதால் உங்கள் சருமம் கருமையடைந்திருக்கும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது மனஉழைச்சல் ஏற்படும். அப்படியெனில் கவலையை விடுங்கள்

தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுடன் வீட்டில் இயற்கையாக கிடைக்கும் உடனடி கற்றாழை துண்டை சேர்த்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். அதோடுகூட முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.

எண்ணெய் பசை சருமவகை கொண்டவர்கள் செயற்கை முறையில் கிடைக்கும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் தக்காளியை பயன்படுத்தினால் நீண்ட மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத சருமம் உங்களுக்கு கிடைக்கும். எண்ணெய் பசை நீங்க தக்காளியில் கடலை மாவு அல்லது சிறிது முல்தானி மிட்டி சேர்த்து தினமும் முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நல்ல பலனை பெற முடியும் என்பதை நீங்களே அறியலாம்.

தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.
தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
நன்கு கனிந்த 2 தக்காளிப்பழம் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறைந்து சருமம் பொலிவடையும்.

ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும்.வாரம் இருமுறை இதுபோன்று செய்து வந்தாலே போதும்.முகம் பிரகாசிக்கும்.

1 தேக்கரண்டி தக்காளிச் சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை உடனடியாக அவதாளிக்கலாம்.

முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், தக்காளிச் சாறை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து சாதரண நீரில் முகத்தில் கழுவலாம். இதனால் முகத்தின் நுண்துளைகளில் ஊடேறும் சாறு, முகத்தின் நுண்துளைகள் திறப்பதை தடுக்கிறது. கரும்புள்ளிகளையும் நீக்கிவிடும்.
காலை எழுந்த உடன் ஒரு தக்காளியுடன் மஞ்சள் மற்றும புதினா சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவலாம். அதன் பின்னர் அவை காய்ந்த உடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இவை முகத்தை புத்துணர்வோடு இருக்க வைப்பதுடன், தோலை மிருதுவாகவும் மாற்றும்.

அதே போல தக்காளியுடன் மோரைக்கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் கழுவலாம். இவை சூரிய ஒளி மூலம் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும். அதே போல முதுமையில் ஏற்படும் தோல் சார்ந்த பிரச்னைகளுக்கும் தக்காளி தீர்வாக இருக்கிறது.

டிலானி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php