அனைத்தையும் நாடி  என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

2022 Sep 5

உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும் சூழல்களுக்கு ஒத்து வாழக் கூடியவர்களாக திகழ்கிறோம். அதே சமயத்தில் சட்ட திட்டங்களை கடைபிடிக்க தவறுபவர்களாகவும் இருக்கிறோம். அதற்கான காரணங்கள் நியாயம் தீர்க்க கூடியவையாக இல்லாவிடினும் அவை நல்ல கதைகளை உருவாக்கியுள்ளன. அவ்வாறு இலங்கையர்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கைது செய்யப்பட்டமைக்கான சில காரணங்களை பார்ப்போம்.

கைக்குலுக்கியமைக்காக இலங்கையர் கைது செய்யப்பட்டார்!

பெண் ஒருவரை தகாத முறையில் தொட்டமைக்காக மத்திய கிழக்கு நாடொன்றில் புலம்பெயர்ந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தனது பக்கத்து வீட்டின் வாகன ஓட்டுநர் தன்னை தகாத முறையில் தொட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த நபர் தான் நட்பு ரீதியாக வாழ்த்து கூறுவதற்காக கைகளை குலுக்கியதாக தன் தரப்பு வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை அந்த இலங்கையர் கூறுவது உண்மையாக இருந்தால் இது கைது செய்யப்படுவதற்கான காரணமாக தோன்றவில்லை. எது எவ்வாறிருப்பினும் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்தில் உள்ளவர்கள் போல் நடந்து கொள்ளுங்கள்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமைக்காக இளைஞர் கைது!

செய்யப்பட்டார்.2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியின் இணையத்தளத்த-
தை ஹெக் செய்து தனது பல்கலைகழக நுழைவுத் தேர்விற்கான திகதியை மாற்றக்கூடாது என கோரிய மாணவன் கைது செய்யப்பட்டார். இலங்கை இளைஞர்களை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் பல்கலைகழக தேர்வு திகதிகள் ஏப்ரல் மாத சிங்கள புத்தாண்டு காலத்திற்கு மாற்றப்படுமானால் உடனடி ஜனாதிபதி தேர்தலை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியின் இணையத்தளத்தில் அந்த இளைஞர் பதிவேற்றினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் கைது!

2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த எட்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். உண்மையில் அவர்கள் முகாமில் இருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின் அவர்கள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர் பின்னர் அவர்களின் உடல்நிலை மோசமாக இருந்தமையால் விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1982 இல் இலங்கையர் ஒருவர் ஹைஜேக்கில் ஈடுபட்டார்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது விசாவை தொலைத்துவிட்டு, இத்தாலிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புதிய விசாவை மறுத்துள்ளார். புதிய விசா கிடைக்க ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதை அறிந்ததும் தான் அவ்வளவு காலம் தனது மனைவி மற்றும் மகனை விட்டு விலகி இருக்க நேரும் என எண்ணி மனம் நொந்து போனார். ஒரு இத்தாலிய விமானத்தை கடத்திச் சென்று பின்னர் இத்தாலிய அரசாங்கத்திற்கு தனது கோரிக்கைகளை நேரடியாகத் தெரிவித்து விமானியை பாங்காக்கிற்கு திசைதிருப்ப வைப்பதே அவரது செயற்திட்டமாக இருந்தது. அவருடைய கோரிக்கைகள் அவ்வளவு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. அவரது மனைவி மற்றும் மகனுடன் மீண்டும் இணைய வேண்டும் மற்றும் முந்நூறாயிரம் டாலர்கள் அவ்வளவு தான். ஆமாம்! வெறும் முந்நூறாயிரம் டொலர்கள்! அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
மலக்குடலில் 1 கிலோ தங்கத்துடன் இலங்கையர் கைது!

கடத்தல் மிகவும் மோசமானது. ஆனால் நமது இலங்கையர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 2017 செப்டம்பரில் 2 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் நகைகளை மலக்குடலில் மறைத்து கடத்த முயன்றதாக இலங்கை அதிகாரிகள் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவர் இந்தியாவிற்க்கு கடத்த முயற்சித்துள்ளார். மேலும் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்ததை வைத்து தான் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

போலி மருத்துவ சான்றிதழ்களுடன் இலங்கையர் கைது!

இந்த வழக்கு 2018 இல் சைப்ரஸில் நடந்தது வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு உதவுவதற்காக மூன்றாம் தரப்பினருக்கு போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கியதற்காக இரண்டு சைப்ரஸ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று நான் முன்பு கூறியது நினைவிருக்கிறது அல்லவா? எப்படியோ இந்த வழக்குடன் தொடர்புடையவர் என நாற்பத்தாறு வயதுடைய இலங்கையர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

தனது குழந்தைக்கு பீர் குடிக்க கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.!

இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கையை சேர்ந்த ஒருவர் தனது ஒரு வயது மகனுடன் பீர் போத்தலை பகிர்ந்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதை வீடியோவாக பதிவு செய்தமைக்காக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த சிறு குழந்தை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்ட அதே நேரத்தில் அவரது 40 வயதான தந்தை மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் குழந்தைக்கு கொடுமை செய்த குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் எவ்வளவு தீவிரமானதோ அதே அளவு கைது செய்வதற்கு தகுதியான பைத்தியக்காரத்தனமானதும் தான்.
குடிபோதையிலிருந்த ஓட்டுநர் கைது!

முதலில் பார்க்கும் போது இது ஒன்றும் வழமைக்கு மாறான விடயம் அல்லாதது போல் தோன்றலாம். உண்மையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்பது கவனம் செலுத்தி தீர்க்கப்பட வேண்டிய ஓர் விடயம் தான். இங்கு அந்த இலங்கையர் ஓட்டியது கான்க்ரீட் மிக்ஸரை என கண்டறியாத வரை. கிங் ஃபஹத் பின் அப்துல்லஜிஸ் மோட்டார்வேயில் கவனக்குறைவாக ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநரை பற்றி பலர் உள்துறை அமைச்சின் செயற்பாட்டு அலுவலகத்திற்கு முறையிட்ட பின்னே தான் இந்த இலங்யைர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தவறு தான் ஆனால் கான்க்ரிட் மிக்ஸரை ஓட்டுவது வேறு கதை.

இலங்கையர்கள் கைதாகிய க்ரேஸியான காரணங்கள் பற்றி பார்த்தோம். அடுத்த முறை நீங்களும் செய்திகளை பார்க்கும் போது வேறு புதிய க்ரேஸியான காரணங்களுக்காக கைதாகுகின்ற வழக்குகளை பற்றி அவதானியுங்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php