2022 Dec 11
AIESEC தற்போது நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டமான ‘Amplifier 2022’ ஐ நடத்துகிறது. இது இளைஞர்களின் உள்ளார்ந்த தலைமைத்துவ பண்புகளை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.
சர்வதேச ரீதியில் நடாத்தப்படும் பயிற்சிகள் மற்றும் தன்னார்வ வாய்ப்புகள் மூலம் இளைஞர்கள் தங்களின் தலைமைத்துவ திறனை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளத்தின் ஒரு பகுதி இலங்கையின் AIESEC
110 க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கியுள்ள AIESEC, 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இது அரசு சார்பற்ற இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். இது முற்றுமுழுதாக இளைஞர்களுக்காக இளைஞர்களினால் நடத்தபடுகிறது.
1995 ஆம் ஆண்டு AIESEC Sri Lanka வை தங்களுடைய அங்கீகாரம் பெற்ற உறுப்பு நாடாக AIESEC International அறிவித்தது.
இது வெற்றிகரமாக ஈடுபட்டு, சிறந்த எதிர்காலத்திற்காக உலகை வடிவமைக்கும் வகையில் சிறந்த பிரதிபலனை எதிர்பார்த்து
இந்நிலையில் மற்றுமொரு பாடநெறிக்கான ஆரம்ப நிகழ்வாகிய Amplifier 2022, கடந்த டிசம்பர் மாதம் 4 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலை கல்வியை முடித்தவர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
குறித்த பாடநெறி ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. Amplifier 2022 முற்றுமுழுதாக இளைஞர்களின் முன்னேற்றத்தினையே நோக்கமாக கொண்டுள்ளது.
Amplifier 2022இன் பயிற்சி விபரங்கள்,
பயிற்சி 01 – டிசம்பர் 11, 2022
பயிற்சி 02 – டிசம்பர் 14, 2022
பயிற்சி பட்டறை – டிசம்பர் 18, 2022
மதிப்பீட்டு நாள் 01 – டிசம்பர் 21, 2022
மதிப்பீட்டு நாள் 02 – ஜனவரி 8, 2023
திறந்த விவாதம் மற்றும் விருது வழங்கும் விழா – ஜனவரி 15, 2023
முதலாவது பயிற்சியானது, இளைஞர்கள் தங்களின் மாறுபட்ட சிந்தனைகளின் ஊடாக சவால்களை எதிர்கொண்டு அனுபவங்களை பெறுவது தொடர்பில் நிகழும்.
இரண்டாவது பயிற்சி அமர்வு, சக உறுப்பினர்கள், சமூகம் மற்றும் பொது மக்களுக்கு ஒரு நல்ல தலைவராக குரல் கொடுக்க வழிவகுக்கும். இரண்டு கட்ட மதிப்பீடும் நிகழும். முதலில், தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முவைப்பர். இரண்டாவது தங்களுடைய எண்ணங்களை பிறருடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்வர்.
சமூகத்தில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திறந்த விவாதப்போட்டியுடனும் அவர்களை அங்கீகரிப்பதற்கான விருது வழங்கும் விழாவுடனும் குறித்த பயிற்சி முடிவு பெரும்.
இந்நிகழ்ச்சி, நாளைய இலங்கையின் வலிமையான தலைவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகின்றோம். உலகப் பிரச்சினைகளில் பங்கெடுத்து அதனை தீர்ப்பது, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் கலாச்சார விழிப்புணர்வு ஆகியவற்றில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், AIESEC இல் சேரவும்!