அனைத்தையும் நாடி  நவீன கண்டுபிடிப்புகளும் | நோய்களும்

நவீன கண்டுபிடிப்புகளும் | நோய்களும்

2020 Jul 9

இன்றைய நவீன யுகத்தில் சர்க்கரை வியாதியுடனும் புற்று நோயுடனும் குழந்தைகள் பிறக்கும் செய்திகளை கேள்வியுறுகிறோம். அதே சமயம் 120 வயது வரை வாழ்ந்து மடிந்த முத்தவர்களின் ஆரோக்கியமான வரலாற்றினையும் கேள்வியுறுகிறோம். இவ்வாறான செய்திகளுக்கான காரணம் தான் என்ன? என்றாவது சிந்தித்துள்ளோமா…? அதற்கெல்லாம் நமக்கு நேரம் கிடையாது.

அவ்வளவு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறோம் அந்த ஓட்டத்தில் நம் ஆயுள் கரைவதையும் மறந்து விடுகிறோம்.

இவ்வாறன துரதிஷ்ட வசமான சூழலுக்கு நாம் உருவாக்கிய தொழிநுட்பம் நம்மை ஆட்சி செய்ய தொடங்கியமையும் ஓர் காரணமாகும்.

கையடக்க தொலைப்பேசி

காலை எழுந்தது முதல் மாலை வரை கையடக்க தொலைப்பேசியுடன் உரையாடும் இளைஞர்களே அதிகம். உண்ணும் போது கூட தொலைப்பேசி ஓர் கையிலும் மறு கைகள் உணவின் மேலும் என வாழ்கிறோம். இவ்வாறாக 24 மணி நேரமும் தொலைப்பேசி உபயோகிப்பதால் கண்கள் மற்றும் மூளையின் செல்கள் பாதிப்படைந்து எளிதில் பார்வைக் குறைபாடு, ஞாபக மறதி போன்றவைக்கு உள்ளாகின்றன. ஒரே இடத்தில் அசையாது அமர்ந்த படி இருப்பதால் உடல் எடை அதிகரித்தல், தசைப் பிடிப்பு, சோம்பல், மன அழுத்தம் போன்றன ஏற்படுகின்றன. இன்றைய இளைஞர்கள் தூக்கமின்றி அவதியுறுவதற்கும், தவறான பாதைகளுக்கு செல்லவும் இந்த தொலைப்பேசி காரணமாகின்றது. கையடக்க தொலைப்பேசிகள் நம் இளைஞர்களை அடக்கியாழும் வரை இந்நிலை நீடிப்பது உறுதி. கர்ப்ப காலங்களில் கையடக்க தொலைப்பேசியின் பாவனை கருவிலிருக்கும் சிசுவினை பாதிக்க கூடும். கர்ப்ப காலங்களில் முடிந்தவரை கையடக்க தொலைப்பேசி பாவனையை நிராகரித்தல் சிறப்பானது.

மடிக்கணினி (Laptop)

இன்று வீட்டிலிருந்தப் படியே வேலை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மடிக்கணினி தான். சிறியவர் முதல் பெரியவர் வரை ஆதிக்கம் செலுத்துகின்றது. இதனால் ஏற்படும் பாதகமான பின்விளைவுகள் அறிவீர்களா…? குறிப்பாக ஆண்கள் மடிக்கணினியை நேரடியாக மடியினில் வைத்து உபயோகிப்பதால் விந்தணுக்கள் இறப்பதற்கான வாய்ப்புண்டு. இது நாளடைவில் குழந்தையின்மைக்கு முகம் கொடுக்க ஏதுவாக அமைகின்றது. மடிக்கணினியை முடிந்தவரை மேசையில் வைத்து உபயோகித்தல் சிறப்பானது.

போக்குவரத்து

முன்பெல்லாம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் போது மாட்டு வண்டிகள் மற்றும் குதிரைகள் போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனால் இன்று விண்ணிற்கு சென்று அயல் கிரகங்களில் தரையிறங்கி நடந்து திரியும் அளவிற்கு நம் தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. இந்த வளர்ச்சியோடு இயற்கை சூழலில் மாசும் அதிகரித்து விட்டது. ஓசோன் மண்டலத்தில் சிதைவுகள் ஏற்பட வாகனத்திலிருந்து வெளியேறும் புகைகளும் ஓர் காரணமாக அமைகின்றன. இதனால் பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகரிக்கிறது. வரட்சி மற்றும் வெப்பமான சூழல் உருவாகுவதற்கு வழி வகுக்கின்றன. இதனால் சர்ம பிரச்சனைகளோடு வரட்சியின் காரணமாக உணவுத் தட்டுப்பாடு உருவாகி ஆரோக்கியமற்ற சமுதாயமாக நம் சமுதாயம் மாறிவிடுகிறது. முடிந்தவரை வாகனப் புகை கசிவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் நன்மை பயக்கும்.

பிளாஸ்திக்

பிளாஸ்திக்களை உணவுப் பொதிகளாக பயன்படுத்துகின்றனர். இதனால் பிளாஸ்திக்களில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் உணவுடன் கலந்து புற்றுநோயினை ஏற்படுத்துகின்றது. பிளாஸ்திக்கள் உக்கும் தன்மையற்றவை. இவற்றை முறையாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தாமையால் சூழல் மாசடைகிறது. சிலர் பிளாஸ்திக் கழிவுகளை எரிக்கின்றனர். பிளாஸ்திக் பொருட்கள் எரிக்கப்படுவதால் வெளியேறும் நச்சு வாயு பாதக விளைவுகளை தரக்கூடியது. ஆகையால் முடிந்தவரை அவற்றை மீள் சுழற்சிக்கு உட்படுத்தல் சிறப்பானது. இயற்கையாக தயாரிக்கப்பட்ட பனையோலைப் பெட்டிகள், வாழையிலை மற்றும் வேறு இயற்கையான பொருட்களை உணவுப் பொதிகளாக பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.

நவீன தொழிநுட்ப வளர்ச்சி தவறானதல்ல. அவற்றிலிருந்து முடிந்தவரை நன்மைகளைப் பெற்று பாதகமான விளைவுகளை குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php