அழகை நாடி முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட குழிகள் உள்ளதா?

முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட குழிகள் உள்ளதா?

2020 Jul 9

நாம் அனைவரும் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். பருக்கள் வந்து சென்றவுடன் ஏற்படும் பன்னங்கள் அதாவது சிறு சிறு குழிகள் ஏற்படுகின்றன. இவை நாம் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் மன அழுத்தம் உருவாக காரணமாகிறது. “இந்த பன்னங்களை எவ்வாறு இல்லாது ஒழித்து பன்னங்களற்ற தெளிவான பொலிவினை பெறுவது?” என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் உண்டு.

 

இதோ! முகத்தில் உள்ள பருக்களின் பன்னங்களை மறைய ஓர் அழகு குறிப்பு,

தேவையான பொருட்கள்
அத்திக்காய்=3
ரோஜா பூ=3
கசகசா=1/2 மேசைக்கரண்டி
ஆட்டுப்பால்=தேவையான அளவு

செய்முறை
கசகசா, அத்திப்பழம்(பகுதிகளாக நறுக்கியது) மற்றும் ரோஜா பூ ஆகியவற்றை நன்றாக உரலில் இட்டு இடித்துக் கொள்ளவும். இடைக்கிடையில் ஒவ்வொரு கரண்டி ஆட்டுப்பால் சேர்த்து இடித்துக் கொள்ளவும். நன்றாக Paste போன்ற பதம் வந்தவுடன் வாழையிலையில் தட்டி 5 நிமிடம் வைக்கவும். மீண்டும் சிறிதளவு ஆட்டுப்பாலூற்றி 5 நிமிடம் வைக்கவும். அதன் பின் அந்த pasteயினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து துணியொன்றை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்திலுள்ள Pasteயினை துடைத்து எடுக்கவும்.
முகத்திலிருந்த Pasteயினை நீக்கியப் பின் 5 நிமிடம் கழித்து 2 தேக்கரண்டி ஆட்டுப்பால் 2 ரோஜா இதழ்கள் சேர்த்து இடித்துக் கொள்ளவும். அந்த திரவத்தை முகத்தில் தடவி ஈரமற்ற ஓர் துணியால் 15 நிமிடங்கள் முகத்தை மூடிக் கொள்ளவும். இறுதியாக வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ளவும்.

 

இந்த படிமுறையினை வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பன்னம் நீங்கி முகம் பொலிவும் அழகும் பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php