2021 May 23
மாதம் ஒரு முறை ஏற்படும் மாதவிடாயினால் பல பெண்கள் வயிற்றினை பிடித்து அசையாது ஒடுங்கி விடுவதையும் சிலப் பெண்கள் சாதாரணமாக நடந்துக் கொள்வதையும் கண்டிருப்போம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு தீர்வு கிடைத்திடாத என ஏங்கித் தவித்திருப்போம்.
இதோ! மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் போக்குவதற்கும் மாதவிடாய் காலங்களை சரியான முறையில் கடப்பதற்கும் தேவையான சில டிப்ஸ்….
மாதவிடாய் காலங்களில் மருந்து கடைகளில் வலியினை போக்கும் வில்லைகள் (pain killers) மற்றும் மாதவிடாயினை தள்ளிப் போடுவதற்கான மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்தல் நல்லது ஏனெனில் இவை நம் உடம்பிற்கு உகந்தவை அல்ல.
மாதவிடாய் ஏற்படுவதற்கு முதல் நாள் இரவு ஒரு சிட்டிகை வெந்தயம் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் மாதவிடாய் வந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனால் வயிற்றில் ஏற்படும் வலி வழமையை விட குறைவானதாக இருக்கும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியினை போக்குவதற்கு சூடாக்கிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் அல்லது சுக்கு தூளினை இட்டு கலக்கி குடிக்கவும்.
மாதவிடாய் காலங்களில் இறுக்கமான ஆடையை அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இறுக்கமான ஆடைகள் அணிவதால் மாதவிடாயின் போக்கு அதிகமாக இருக்கும். ஆகையால் மென்மையான தளர்வான கடும் நிற (dark color) ஆடைகளை அணிதல் சிறப்பானது.
மாதவிடாய் காலங்களில் முடிந்தவரை அதிக தண்ணீர் பருகவும். தண்ணீர் குடிக்கும் போது அமர்ந்திருந்து குடிப்பது நல்லது. அவ்வாறு குடிப்பதால் வலி குறைவாகவும் உடற் சோர்வும் இல்லாது போகும்.
மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் மஞ்சள் தூள் மற்றும் கற்றாளையினை Paste ஆக அரைத்து பூசி வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முகப்பருக்களை தடுக்கலாம்.
மாதவிடாய் காலங்களில் முல்தானி மெட்டி ஒரு சிட்டிகையுடன் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவினால் சருமத்தின் வரட்சி நீங்கும்.
மாதவிடாய் காலங்களில் தலைக்கு குளித்தலை தவிர்த்துக் கொள்ளவும். ஏனெனில் மாதவிடாய் காலங்களில் குளிப்பதால் உடலில் இருக்கும் வெப்பத்தினை கட்டுப்படுத்தி மாதவிடாய் காலங்களில் குறைவான கசிவினையும் அதிக வலியினையும் ஏற்படுத்துகிறது.