2020 Sep 16
நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பல தவறான மற்றும் தீங்கினை தரக்கூடியவை. அவ்வாறாக சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில பழக்க வழக்கங்கள்,
சாப்பிடும் முன் செய்யக்கூடாதவை
வெற்றிலை பாக்கு சாப்பிடக் கூடாது. ஏனெனில் உடலில் சாப்பிட்ட பின் ஏற்படுகின்ற செரிமான நிகழ்வில் கோளாறினை ஏற்படுத்தும் மற்றும் ஏப்பம் விடுவதில் துர்நாற்றம் வீசும்.
தேநீர், காபி அல்லது குளிர்ப்பானம் போன்றவற்றை அருந்தக் கூடாது.
உடற்பயிற்சி செய்யக் கூடாது. உடற்பயிற்சி செய்து ஒரு மணி நேரம் அல்லது சிறிது நேரத்திற்கு பின் சாப்பிடலாம்.
சாப்பிட்ட பின் செய்யக்கூடாதவை
நம்மில் சிலர் சாப்பிட்ட பின் பழங்கள் கொண்டு செய்யப்படும் பழச்சலாது சாப்பிடுவது வழக்கம். இது ஓர் தவறான பழக்கமாகும். பழங்கள் எளிதில் ஜீரணம் அடையும் பண்புடையவை. சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடும் போது நாம் உண்ட உணவு செரிமானம் அடைவது தடைப்பட்டு நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
சாப்பிட்ட பின் தூங்க கூடாது. நாம் சாப்பிட்ட பின் உணவு செரிமான பணிகளுக்கு உட்படுத்தப்படும். நாம் சாப்பிட்ட உடன் தூங்குவதால் செரிமான பணியின் போது சுரக்கப்படும் அமிலங்கள் தொண்டையை நோக்கி வரக்கூடும். இதன் விளைவாக வாந்தி, தொண்டை எரிச்சல், தொண்டைப்புண், சுவாசப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும்.
சாப்பிட்ட பின் உடற்பயிற்சி செய்யக் கூடாது ஏனெனில் உடற்பயிற்சிக்குட்படும் தசைகள் மற்றும் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் செரிமானத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் குறைவாக காணப்படும். இதன் விளைவாக செரிமானத்தில் மந்த நிலை, உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கப்பெறாமை போன்றவை ஏற்படும்.
சாப்பிட்ட உடன் நீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இது உண்மையில் மிகவும் தவறான ஓர் பழக்கமாகும். இதனால் உணவு செரிமானம் அடைவதில் பல சிக்கல்கள் ஏற்படும்.