2020 Sep 20
நம்மில் பலரது உதடுகள் மென்மையான தன்மையினை இழந்து வறட்சியானதாகவும் வெடித்து சிவந்து தடிமனானதாக காணப்படுவதை பார்த்திருப்போம். இதனை தான் உதடு வறட்சி மற்றும் உதடு வெடிப்பு என்கிறோம். இதனை போக்குவதற்காக பல செயற்கை மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களினை உபயோகப்படுத்தியிருப்போம். அவை தற்காலிகமாக உதட்டினை பாதுகாத்தாலும் நிரந்தரமான தீர்வினை அளிப்பதில்லை. உதட்டில் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய தகவல்கள்,
இதோ…! உங்களுக்காக,
உதட்டில் வறட்சி மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
உடலின் வெப்பநிலை உயர்வாக காணப்படுதல்.
விட்டமின் B குறைப்பாடு.
இரும்புச் சத்து குறைபாடு.
உடல் வறட்சி.
அதிகப்படியான சூரியக் கதிர்களின் தாக்கம்.
இரசாயனப் பொருட்களின் பாவனை.
காலநிலை மாற்றம். (குளிரான அல்லது பனி காலங்களில் காணப்படும் அதிகப்படியான குளிர் காரணமாக உதடு வறட்சி தன்மையடையும்.)
அதிகப்படியாக லிப்ஸ்டிக் மற்றும் லிப் க்ளோஸின் பாவனை.
உதடு வறட்சி மற்றும் வெடிப்புகளை போக்குவதற்கான வழிகள் என்ன…?
கோடை காலங்களில் சராசரியாக 4 லீட்டர் அளவு நீர் குடிக்க வேண்டும். அதிக நேரம் வெளியே வெயிலில் வேலை செய்பவராகயிருந்தால் அதனிலும் அதிகமாகவே நீர் அருந்த வேண்டும்.
தினமும் தூங்குவதற்கு முன் ஒலிவ் எண்ணெயினை உதட்டில் தடவி வர வேண்டும்.
வெயில் காலங்களில் குளிர்ச்சியான பழச்சாறு அருந்துதல்.
செயற்கையான காற்றினில் உட்காருவதை தவிர்த்து இயற்கையான காற்றினை பெறுதல்.
ஓர் நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் குளிப்பதால் உடலில் உள்ள வெப்பம் குறைந்து உதடு வறட்சி நீங்கும்.
ஐஸ் கட்டிகளை கொண்டு உதட்டிற்கு மசாஜ் செய்ய வேண்டும்.
அடிக்கடி மோர் குடித்தல். மோர் குடிப்பதால் உடலின் உஷ்ணம் குறையும்.
வெள்ளரிக்காய் துண்டினை எடுத்து உதட்டில் மசாஜ் செய்ய வேண்டும்.
கற்றாழை ஜெல்லினை உதட்டில் தடவ வேண்டும்.
இரண்டு கரண்டி சர்க்கரையுடன், 5 துளி ஒலிவ் எண்ணெய் கலந்து உதட்டில் 5 நிமிடங்கள் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். அதன் பின் தேங்காய் எண்ணெயினை உதட்டில் தடவ வேண்டும். இதனால் உதட்டின் இறந்த செல்கள் அகன்று உதவு மென்மையும் அழகும் பெறும்.
க்ரீன் டீ தயாரித்த பின் அதன் பை அல்லது இலைகளை கொண்டு உதட்டில் சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறாக இவற்றை செய்து வருவதால் உதடுகளில் காணப்படும் வறட்சி மற்றும் வெடிப்புகள் நீங்கி உதடு அழகும் மென்மையும் பெறுகிறது.