2020 Oct 13
நம் நாட்டின் மக்களினால் அதிகளவு உண்ணப்படும் உணவு பொடி சம்பல் மற்றும் மரவள்ளிக் கிழங்கு தான். நாம் அதிகமாக உட்கொள்ளும் மரவள்ளிக் கிழங்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள் சில,
மரவள்ளி கிழங்கில் அதிகம் நார்ச்சத்துள்ளது ஆகையால் உடலில் ஏதும் நச்சுக்கள் இருந்தால் அதனை கழிவாக வெளியேற்றுவதோடு குடல் வலி மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், எடை குறைப்பதற்கு மிகவும் தேவையான நார்ச்சத்து, இதில் அதிகமாக உள்ளது. தினமும் உங்கள் உணவில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொள்வதால், உடல் எடையை குறைக்கலாம்
மேலும், கிழங்கிலுள்ள நார்ச்சத்து, குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது; அழற்சியைக் குறைக்கிறது.
மரவள்ளி கிழங்கில் காணப்படுகிற இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுவதோடு குருதியோட்டத்தை சீராக்கி குருதியில் காணப்படும் கொழுப்பினை கரைக்கிறது, அனீமியா ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மரவள்ளியில் காணப்படும் கல்சியம், விட்டமின் K மற்றும் இரும்பு ஆகியன எலும்புகளின் சமநிலையினை பேணுவதற்கும் எலும்பு சம்மதமான நோய்கள் வராது பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது.
அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையுள்ளவர்கள் உணவுடன் மரவள்ளி கிழங்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி படிப்படியாக குணமாகும்.
உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும் சமயங்களில் மரவள்ளி கிழங்கினை சாப்பிட்டு வாருங்கள். மரவள்ளிக் கிழங்கிற்கு உடலின் நீரின் அளவினை சீராக்கும் தன்மையுண்டு.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான, ஊட்டச்சத்துகள் இதில் அதிகமாக உள்ளன. மரவள்ளி கிழங்கின் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்தும் சாப்பிடுவது நலம் தரும்.
ஒற்றை தலைவலி மற்றும் சாதாரண தலைவலி, மனிதனை பல நேரங்களில் வதைக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக, மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகள் பயன்படுகின்றன. இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி, அரைத்து சாறு எடுத்தும் பருகலாம்.
தினமும், இரு வேளை மரவள்ளிக் கிழங்கு சாறு பருகுவதால், வருங்காலத்தில் தலைவலி வராமல் தடுக்கும்.
மரவள்ளி கிழங்கினை உட்கொள்ளும் போதும் உட்கொண்ட பின்னும் இஞ்சி அல்லது சுக்கினை உட்கொள்ளாதிருங்கள் ஏனெனில் அது உடலிற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும்.