அனைத்தையும் நாடி  நாளாந்த வாழ்வில் தியானப்பயிற்சியின் முக்கியத்துவம்.

நாளாந்த வாழ்வில் தியானப்பயிற்சியின் முக்கியத்துவம்.

2020 Nov 18

நம்மில் பலரது முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பது சுயக்கட்டுப்பாடற்ற தன்மை தான். சுயக்கட்டுப்பாடுடன் ஓர் குறிப்பிட்ட இலக்கை நோக்கி முயற்சித்து பயணிக்கும் மனோநிலை பிறந்து விட்டாலே வெற்றி தன்னாலே கைவசமாகி விடும். இவ்வாறு செயலாற்ற தேவையான சுயக்கட்டுப்பாட்டினை வளர்த்துக் கொள்ள தியானப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும் மனதினை ஓர் நிலையில் நிறுத்தி அன்பு, அமைதி, மகிழ்ச்சி போன்ற உள் மன உணர்வுகளை மேம்படுத்தி சிந்தனையை தெளிவாக மாற்றுவதே தியானமாகும்.

ஓர் நாளில் இரு தடவைகள் காலை மற்றும் மாலை தியானப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் மனோதிடத்தினை வளர்த்துக் கொள்ள முடியும். காலையில் தியானம் செய்ய சரியான நேரம் 5.00மணியாகும் மாலையில் தியானம் செய்ய சரியான நேரம் 7.00மணியாகும்.

இயற்கையான சுத்தமான வளி கிடைக்கக் கூடிய வகையிலான, ஜன்னல் இருக்கக்கூடிய வடகிழக்கு மூலையினை நோக்கி ஓர் சிறு துண்டினை விரித்து அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

தியானம் செய்கையில் சுற்றுச் சூழல் அமைதியானதாகவும் எந்தவொரு மன அழுத்தம் தரக்கூடிய பொருட்கள் அற்றதாகவும் காணப்பட வேண்டும்.

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்,
மனக்கட்டுப்பாடும் மன அமைதியும் வளரும்.

மனம் வலிமைப் பெறும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரான வாழ்வினை வாழ தியானப் பயிற்சியில் ஈடுபடுதல் அவசியமாகும்.
சுயக்கட்டுப்பாடு வளர்வதோடு சுய ஒழுக்கமும் வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php