அனைத்தையும் நாடி  இலங்கை விமானப்படை வரலாற்றில் புதிய இரு அத்தியாயங்கள்.

இலங்கை விமானப்படை வரலாற்றில் புதிய இரு அத்தியாயங்கள்.

2020 Nov 17

இலங்கை வாழ் பெண்மணிகளோடு இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் பெருமைக் கொள்ளும் வகையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 16ஆம் திகதியன்று திருகோணமலையிலுள்ள இலங்கை விமானப்படை சீனத் துறையின் அகடமியில் இடம்பெற்ற கெடேட் அதிகாரிகளின் வெளியேற்ற நிகழ்வின் போது இலங்கை விமானப்படையில் விமானிகளாக ஏ.டி.பி.எல்.குணரத்ன மற்றும் ஆர்.டி.வீரவர்த்தன ஆகிய இரு பெண்களுக்கு பதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது விமானப்படைத் தளபதியான மார்ஷல் சுதர்ஷன் பத்திரணவின் அழைப்பின் பெயரில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் மேலும் சிறப்பான விடயம் யாதெனில் அனைத்து துறைகளிலும் திறமையினை வெளிக்காட்டிய கெடேட் அதிகாரியாக, விமானி அதிகாரி ஆர்.டி.வீரவர்த்தன அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையோடு பெருமைக்குரிய வாளும் அவருக்கு வழங்கப்பட்டமை தான். இலங்கை விமானப்படை வரலாற்றிலேயே ஒரு பெண் விமானி அதிகாரி இவ்வாறான தகைமையை பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

இதுவரை காலமும் பல துறைகளில் தமது திறமைகளை வெளிக்காட்டி சாதித்து வரும் நம் நாட்டின் வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலில் இப்போது இவர்களும் தனி இடம் பிடித்துள்ளனர். நம் நாட்டில் வாழ் பலப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் அவர்கள் தமது கனவுகளை நோக்கி பயணிக்க ஊக்கமளிக்கும் வகையிலான புதியதொரு அத்தியாயத்தினை எழுதிய ஏ.டி.பி.எல்.குணரத்ன மற்றும் ஆர்.டி.வீரவர்த்தன அவர்களுக்கும் எங்களுடைய நாடிக் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php