அனைத்தையும் நாடி  இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  7 விடயங்கள்

இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  7 விடயங்கள்

2021 Mar 20

உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக “கொவிட் 19 உலகில், தலைமைத்துவத்தில் பெண்கள் சமமான எதிர்காலத்தினை அடைதல்”. எது எவ்வாறாக இருப்பினும் கொவிட் 19  சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காக முயற்சிக்கும் போது, பெண் என்ற அடிப்படையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும் மறுத்து புறக்கணிக்க முடியாத ஒன்றாகும். இதோ, நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மையான பாலின சமத்துவ பாதையை சிதைக்க கூடிய ஏழு சிக்கலான விடயங்கள்.

1) புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள், ஆடை தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் மற்றும் பெண் தோட்டத் தொழிலாளர்களின் சக்தி நிலை.

Image from http://www.adaderana.lk/news/68877/new-procedure-to-curb-irregular-migration-of-lankan-female-domestic-workers-to-oman

பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியில் 12 டிரில்லியன் சேர்க்கப்படலாம் என்று MGI அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இலங்கை 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் திறனைக் கொண்டுள்ளது, இது தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் பாதையை சுமார் 14% அதிகரிக்கும். 2016 ஆம் ஆண்டின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையின் படி, இலங்கையின் பெண் தொழிலாளர் பங்களிப்பு கடந்த 2 தசாப்தங்களில் 30% – 35% ஆக காணப்படுகின்றது. தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் தக்கவைத்துக்கொள்வதுடன் உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் நடத்தப்படும் விதமும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு பிரச்சினையாகும்.

முக்கியமாக சுதந்திர வர்த்தக மண்டலம் (FTZ) தொழிலாளர்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் போன்றோர், COVID-19 பரவுவதை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட நாடளாவிய ஊரடங்கு உத்தரவுகளின் போது தங்கள் தனியார் தற்காலிக போர்டிங் வீடுகளில் பல நாட்கள் சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் தமது மாதாந்த சம்பளத்தினை கூட பெற்றுக் கொள்ளாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், இலங்கையின் பொருளாதாரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து (நாட்டின் அந்நிய செலாவணி) பணம் பெறுவதை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் இந்த பணம் பெறுவதில் பெரும்பகுதி மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண் வீட்டுத் தொழிலாளர்களால் பெறப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது பற்றி சிறிதளவும் கவனம் செலுத்தப்படுவதில்லை.

2) வீடுகளில் முகங்கொடுக்க நேரிடும் வன்முறைகள்Image from https://www.nationalheraldindia.com/national/domestic-violence-tops-crime-against-women-in-2018-ncrb

2020 ஆம் ஆண்டில் 25 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறிக்கையில், ஒட்டுமொத்தமாக இலங்கையில் நான்கில் ஒரு பங்கு அதாவது 24.9% சதவீதமான பெண்கள் தங்களது வாழ்க்கை துணையினால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், ஒவ்வொரு ஐந்து பெண்களில் இருவர் அதாவது 39.8% உடல், பாலியல், உணர்ச்சி அல்லது பொருளாதார வன்முறை அல்லது அவர்களது துணைவரின் நடத்தைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருக்க மிக முக்கிய காரணம், இந்தப் பிரச்சனை தொடர்பாக இலங்கை சமுதாயத்தின் கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறையாகும். பலர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு பிரச்சனையாகவே பார்ப்பது கிடையாது. மேற்கூறிய அறிக்கையில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 47.5% சதவீதமானோர் “ஆண்மகன் தான் பெரியவன் என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என்ற கூற்றுடன் உடன்படுகின்றனர். 46.5% சதவீதமானோர் “ஒரு நல்ல மனைவி தன் கணவனின் கருத்தில் உடன்பாடில்லை எனினும் அவருக்கு கீழ்படிய வேண்டும்.” என்ற கூற்றுடன் உடன்படுகின்றனர். ஐந்தில் இரண்டு பெண்கள் அதாவது 39.5% சதவீதமான பெண்கள், “உடலுறவு கொள்வதில் தங்களுக்கு உடன்பாடில்லாத நேரங்களில் கூட கணவர் விரும்புவாராயின் தாங்கள் உடலுறவு கொள்ள வேண்டும்.” என்ற கூற்றினை நம்புகின்றனர். மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 35.3% சதவீதமானோர் “ஆண்மகனொருவன் தனது மனைவியை அடிப்பானாயின் அதன் பின் தகுந்த காரணம் ஒன்றிருக்க வேண்டும்.” என்ற கூற்றினை நம்புகின்றனர்.

இந்த முடிவுகள், இலங்கையர்களது மனதில் ஆழப்பதிந்துள்ள பாலியல் தொடர்பாக உள்மயமாக்கப்பட்ட தவறான கருத்து மற்றும் ஆணாதிக்கம் பற்றிய கருத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. சிறு வயது முதல் பெண்கள், ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும் கணவனுக்கு கீழ்படிந்து நடப்பது ஓர் நல்ல மனைவிக்கான அடையாளம் என்றும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். இதனால் தனது வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை குடும்ப வாழ்வில் இயல்பான ஒன்று என அவர்கள் நம்புகின்றனர். இந்த வன்முறைகளை அவர்கள் ஒரு பிரச்சனையாக பார்க்காத வரை, அவர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள பெண்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. இது சகிப்புத்தன்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்வது போன்ற கலாசாரங்களுக்கு வழிவகுக்கின்றது. இதன் காரணமாக வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான பெண்கள் பிறரின் உதவியை நாடுவதை விடுத்து அமைதியாக இருக்கின்றனர்.

மேலும், LGBTQI சமூகத்தில் LBTQ பெண்களுக்கு எதிரான வன்முறையின் சதவீதம் அதிகமாக காணப்படுகின்றது. இவர்கள் மீதான தவறான பாலியல் கண்ணோட்டத்தின் காரணமாக இவர்கள் பிறரை விட இரு மடங்கு அதிகமாக ஒதுக்கப்படுகின்றனர். இதன் பொருள் என்னவென்றால் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்று வரும் போது இவர்கள் cis-gender, heterosexual பெண்களை விட மோசமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். வாழ்க்கை துணை மற்றும் வாழ்க்கை துணை அல்லாதவர்களிடமிருந்து எதிர்கொள்ளும் வன்முறைகளை தவிர, இவர்களது குடும்பத்தினரால் மாறுபட்ட அல்லது தூய்மையற்ற உணர்ச்சிகளாக கருதப்படும் உணர்ச்சிகளை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் பாலின ரீதியான முறையில்லா திருமணங்கள் LBTQ பெண்களுக்கு எதிரான இன்னுமொரு வன்முறையாகும். இந்த பிரச்சினைக்கான ஆராய்ச்சி முடிவுகள் இல்லையென்றாலும் பெண்களுக்கு எதிரான பலதரப்பட்ட வன்முறைகளால் LBTQ பெண்களும் பாதிப்புக்குள்ளாவது தெளிவான உண்மையாகும்.

3) நுண் நிதியத்தின் ஆபத்துக்கள்

மைக்ரோ ஃபைனான்ஸ் (நுண் நிதியம்) போன்ற பெண்களை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் நம்பத்தகாத திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தினை கொண்டுள்ள திட்டங்கள் பெரும்பாலும் பெண்ணுக்கு பேரழிவைத் தருகின்றன. “கோழிகள் முட்டையிடுவதற்கும் அவற்றை விற்று வருமானம் ஈட்டுவதற்கும் பல மாதங்கள் ஆகும். ஆனால் முதல் வாரத்திலிருந்தே நாங்கள் கடனை அடைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவரை கோழிகளுக்கும் நமக்கும் உணவளிக்க பணம் எங்கே கிடைக்கும்? ” என ஒரு பெண் விவசாயி விளக்குகிறார்.

இது போன்ற சூழ்நிலைகள், பல பெண்களை ஆரம்ப கடனை அடைக்க, மீண்டும் கடன் வாங்க வைக்கிறது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் வட்டிக்கு 40% முதல் 220% வரை பணம் செலுத்துவது என்பது பெண்களால் முடியாத ஓர் காரியமாக உள்ளது. சந்தை வட்டி விகிதங்கள் 14% ஆகவும், கிரெடிட் கார்டு வட்டி விகிதம் கூட 28% ஆகவும் இருக்கும்போது, இத்தகைய உயர் வட்டி விகிதங்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

4) பாலியல் ரீதியான வன்முறைகள்

Image from https://ceylontoday.lk/news/yakkalamulla-pradeshiya-sabha-member-arrested-for-sexual-harassment

இலங்கையில் 90% சதவீதமான பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு முகங்கொடுக்கின்றனர், உலகளாவிய மதீப்பீட்டின் படி நோக்குவோமானால் மூன்றில் ஒரு பெண் எனக் கொள்ளலாம். இது தான் தெற்காசிய ரீதியிலான அதிக சதவீதமாகும். அத்தோடு 2013ஆம் ஆண்டு ஐ.நா.ஆய்வின்படி, இலங்கை ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு பெண்ணுக்கு எதிராக உடல் அல்லது பாலியல் வன்முறையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் 3% பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கான அணுகுமுறைகள் நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு இயல்பாக்கப்பட்டுள்ளன என்பதற்கு ஓர் சான்றாகும். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பொதுவான நாளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு திருப்பத்திலும், உடல்நலம் அல்லது சேவைகளை அணுகுவதில், வீட்டில், பணியிடத்தில், போக்குவரத்து அமைப்புகளில், சாலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றாள். இவற்றுக்கு எதிராக பெண்கள் முன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகப்படுத்த வேண்டும்.

இப்போது இது மிகவும் இயல்பாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள், ஏற்படும் பாதிப்புக்களுக்கு அஞ்சுவதனால் குறைவாக மதிப்பிடப்படுகின்றனர். பெண்கள் முன்னோக்கி வந்து வெளிப்படுத்தாமைக்கான காரணம் அவர்கள் மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் தான்.

5)  பெண்களின் அதிகார அணுகல்

வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களின் முழுமையான பயனுள்ள பங்கேற்பு மற்றும் தலைமைத்துவம் அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கிறது. ஆயினும்கூட, ஐ.நா பொதுச்செயலாளரின் சமீபத்திய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதன்படி, பொது வாழ்க்கையிலும் முடிவெடுப்பதிலும் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள் என கூறுப்படுகிறது. 22 நாடுகளில் மாநில அல்லது அரசாங்கத் தலைவர்கள், தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 24.9% சதவீதமானோர் மட்டுமே பெண்கள். தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், அரசாங்கத் தலைவர்களிடையே பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 130 ஆண்டுகள் ஆகும். முதல் ‘அரச பெண்மணி’ என்ற மிளிரக்கூடிய பட்டத்தை நம் நாடு வைத்திருந்தாலும், சராசரி இலங்கைப் பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடிய தவறான மற்றும் ஆழ்ந்த ஆணாதிக்கக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் நாங்கள் இன்றும் மாற்றாது நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறோம்.  எங்கள் அரசாங்கத்தில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இல்லை. தெற்காசிய நாடுகளில் அரசியலில் பெண்கள் பங்கேற்பதில் குறைவான சதவீதத்தை கொண்ட நாடாக இலங்கை உள்ளது. 2020 ஆம் ஆண்டில், இலங்கை நாடாளுமன்றத்தில் 225 சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் – 5.3 சதவீதமானோர் மட்டுமே பெண்கள். மேலும், பாராளுமன்றத்திற்குள் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான 193 நாடுகளில் 182வது இடத்தில் இலங்கை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 52% சதவீதமானோராகவும் வாக்காளர்களில் 56% சதவீதமானோராகவும் பெண்கள் இருந்த போதிலும், அரசியலில் அவர்களது பங்களிப்பு என்று பார்க்கும் போது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

எங்கள் D.I.G பிம்ஷானியை நாம் மறந்துவிடாதபடி – செப்டம்பர் 21, 2020 அன்று, ஒரு பெண் காவல்துறை அதிகாரியை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக உயர்த்த தேசிய காவல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு டி.ஐ.ஜி பிம்ஷானி ஜாசின் அராச்சி நியமனம் செய்ய வழி வகுத்தது – நாட்டின் முதல் பெண் டி.ஐ.ஜி ஆக அவர் பெயர் எங்கள் அனைவர் மனதிலும் பொறிக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, டி.ஐ.ஜி பிம்ஷானி நியமிக்கப்படுவதை எதிர்த்து 32 மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் (எஸ்.எஸ்.பி) கையெழுத்திட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தேதிகளை நிர்ணயித்தது. டி.ஐ.ஜி பிம்ஷானியின் நியமனம் பொலிஸ் பதவி உயர்வு நடைமுறைகளை மீறுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட சம்பவம் வெறுமனவே பிம்ஷானி மற்றும் ஆண் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு இடையிலானதல்ல. இந்த சம்பவமானது பொதுவாக நிறுவனங்களில் ஆட்சேர்பு மற்றும் பதவி உயர்வு கட்டமைப்புகளில் பெண்கள் ஓரங்கட்டப்படுவதற்கான ஒரு சான்றாகும்.

6) எம்.எம்.டி.ஏ மற்றும் திருமணச் சட்டங்களின் சர்ச்சை

எம்.எம்.டி.ஏ, ஆண்கள் குழுவால் தயாரிக்கப்பட்டு 1951 இல் ஆண்களின் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதன் இறுதி சீர்திருத்தமானது 1975ல் ஏற்படுத்தப்பட்டது. முஸ்லீம் பெண்கள் மற்றும் நட்பு நாடுகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எம்.டி.ஏ-வில் சீர்திருத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  அடுத்தடுத்த அரசாங்கங்கள் குறைந்தது ஐந்து வெவ்வேறு குழுக்களை நியமித்தன. ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.  நீதிபதி சலீம் மார்சூப் தலைமையிலான 2009 இல் நியமிக்கப்பட்ட கடைசி குழு, 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்பு 9 ஆண்டுகள் ஆலோசனைகளை மேற்கொண்டது. ஜூலை 2019 இல், ஒரு இணக்க நடவடிக்கையில், சீர்திருத்தத்திற்கான 14 பரிந்துரைகளுக்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் சீர்திருத்தத்தைத் தடுப்பதற்கான நகர்வுகள் மீண்டும் எழுந்தன. சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி நாட்டிற்கு திட்டவட்டமாக உறுதியளித்ததன் மூலம் இப்போது நாம் நேர்மறையான முன்னேற்றங்களைக் கொண்டுள்ளோம். ஆனால் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த சட்டங்களும் கொள்கைகளும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளவர்களை – குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோய் கால சூழ்நிலைகளின் போது எவ்வளவு திறம்பட பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்?

எம்.எம்.டி.ஏ- வின் சர்ச்சைக்குரிய அம்சம் என்னவென்றால், அது முஸ்லீம் திருமணங்களுக்கு குறைந்தபட்ச வயது எல்லை ஒன்றை குறிப்பிடவில்லை. எம்.எம்.டி.ஏ- வின் பிரிவு 23 கூறுகிறது, 12 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையை ஒரு குவாசி நீதிபதியின் அங்கீகாரத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம். இது கடந்த பத்தாண்டுகளில், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் திருமணமானமை தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு வழிவகுத்தது. உதாரணமாக, 2011 மற்றும் 2016க்கு இடையில், அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 13-18 வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட 870 திருமணங்கள் நிகழ்ந்தன. நிவாரணம் மற்றும் அவற்றின் உள்ளார்ந்த உரிமைகளுக்கான முன்னேற்றத்திற்கும் அணுகலுக்கும் இடையூறாக இருக்கக்கூடிய மேலும் ஒரு பிரச்சினை என்னவென்றால், குவாசி நீதிமன்ற நீதிபதிகளாக ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றமை.

பிப்ரவரி 2018 இல் ஐ.நா. சிறுவர் உரிமைகள் மாநாட்டிற்கான குழு (யு.என்.சி.ஆர்.சி) நாட்டிற்குள் சில சமூகங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக இருப்பதை எடுத்துரைத்தது. கட்டாய குழந்தை திருமணத்திற்கு பலியாகி வருவது முஸ்லிம் பெண்கள் மட்டுமல்ல, மற்ற சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளும் கூட. குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்கள் பெரும்பாலும் தங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கின்றனர்.

7) பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து வெளிப்பாடு மற்றும் அறிவு இல்லாமை

பல ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டாலும், பாகுபாடற்ற வாடிக்கையாளர் சார்ந்த பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவது என்பது இன்றும் சவாலாகவே உள்ளது. வயது, இயலாமை, பாலின அடையாளம், பாலியல் நோக்குநிலை, இனம், பொருளாதார நிலை, சமூக வர்க்கத் தடைகள் இந்த கவனிப்பை செயல்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. இலங்கையிலுள்ள 50% சதவீதமான இளைஞர்கள் பாலியல் மற்றும் தங்களது இனப்பெருக்க சுகாதரம் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட அறிவையே கொண்டுள்ளதாகவும் திருமணமான பெண்களில் 35% சதவீதமானோர் எந்தவொரு கருத்தடைகளையும் பயன்படுத்துவதில்லை எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதரம் தொடர்பான அறிவில்லாமையும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பாது இருப்பதும் நம் நாட்டின் அமைதி மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது பங்கினை அளிப்பதை மட்டுப்படுத்துகிறது. தற்போதைய COVID-19 தொற்றுநோய், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பாகுபாட்டையும் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் SRH மற்றும் GBV தொடர்பான சேவைகளுக்கான அணுகல் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அதைப் பெறுவதில் சவால்களை எதிர்க்கொள்ள வழிவகுக்கிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான சரியான விழிப்புணர்வு இல்லாமையால் வறுமை, இளம்பருவத்தில் கர்ப்பம் தரித்தல் போன்றவற்றால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் வழிநடத்தும்போது, நாம் நேர்மறையான முடிவுகளைக் காண்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். COVID-19 தொற்றுநோய்க்கு மிகவும் திறமையான மற்றும் முன்மாதிரியான நடவடிக்கைகள் சில பெண்களால் முன்னெடுக்கப்பட்டன. பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள், எங்கள் தீவின் சமூக நீதி, காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்காக ஆன்லைனிலும் தெருக்களிலும் மாறுபட்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இயக்கங்களில் முன்னணியில் உள்ளனர். எங்களை ஈர்க்கக்கூடிய பல பயணப்பாதைகள் இருந்த போதிலும் இன்றும் பெண்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலவே நடத்தப்படுகின்றனர். எங்களுடன் வாழும் பிற பாலினர்க்கு வழங்கப்படும் அதே அளவான அங்கீகாரமோ உரிமைகளோ முறையாக வழங்கப்படுவதில்லை.

இன்று பெண்களை ஏற்றுக்கொள்வது மற்றும் அதிகாரம் அளிப்பதை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் ஆக்கப்பட்ட உள்ளடக்கத்தின் வருகையை நாங்கள் காண்கிறோம். பாலின-சமமான எதிர்காலத்தை நோக்கி உண்மையிலேயே நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டுமானால் இந்த பாசாங்குத்தனங்கள் முடிவுக்கு வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php