கலை கலாசாரத்தை நாடி ரமழான் நோன்பு கால டிப்ஸ்

ரமழான் நோன்பு கால டிப்ஸ்

2021 Apr 16

புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும் ஸுஹூரில் (விடியற்காலையில்) சாப்பிட்டு நோன்பை ஆரம்பிப்பார்கள். இந்த நோன்பை பின்பற்றுவதன் மூலம் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். உதாரணமாக இரத்த அழுத்தம், கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும்.

மாறாக, இஃப்தார் மற்றும் ஸுஹூரில் அளவுக்கதிகமாக உணவருந்துவது எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், தியாகம் மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கான நேரமாக புனித ரமழான் மாதம் பெரும்பாலும் காணப்படுகிறது. உண்ணாவிரத நேரங்கள் நீடிக்க ஸுஹூரில் சரியான உணவுகளை உட்கொள்ளுங்கள். இஃப்தார் வரை நீடிக்க போதுமான ஆற்றலை உங்களுக்கு வழங்கும் ஒரு ஆரோக்கியமான உணவாக ஸுஹூர் உணவு இருக்க வேண்டும். அன்றைய நோன்பினை தக்க வைத்து கொள்வதற்காகவும் நோன்பு காலங்களில் உடல் சுகாதாரத்திற்கு ஏற்றாற்போன்ற சரியான முறையில் உணவை தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.

மேலும் ரமழான் நோன்பை இலகுவாகக் கடப்பதற்கான டிப்ஸ்,


1. ஸுஹூரைக் கட்டாயம் தவிர்க்கக் கூடாது (விடியலுக்கு முந்தைய உணவு)

நோன்பு காலங்களில் ஸுஹுர் உண்ணுகின்ற பழக்கம் ஒரு சுன்னத் ஆகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை தடையற்ற தூக்கம் ஸுஹுர் வேளைக்கு தடையாகக் காணப்பட்டாலும், தூக்கத்தைக் கலைத்து, ஸுஹுர் உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும். ஸுஹுரை தவிர்த்தலானது நோன்பில் கடினத்தன்மையை ஏற்படுத்தும். எனவே சரியான உணவு வகைகளை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் நோன்பு இருப்பதால், நீங்கள் பகலில் நீரிழப்பு மற்றும் சோர்வாக உணர வாய்ப்புள்ளது. மேலும், ஸுஹூரைத் தவிர்ப்பது இஃப்தாரின் போது அதிகமான உணவை உட்கொள்ள ஊக்குவிக்கிறது. இது ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

2. இஃப்தார் வேளையில் அளவுக்கதிகமாக சாப்பிடக் கூடாது

இஃப்தார் வேளையில் அதிகமாக உணவை உட்கொள்வது உடலுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும். இந்த நேரத்தின் போது ஏராளமான தண்ணீரைக் குடிக்கவும், இயற்கையான கொழுப்புக்கு மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் பால் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். உங்கள் உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் இருப்பது உங்களை நீரேற்றம் மற்றும் நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதன் மூலம் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.

3. ஸுஹூரின் போது (விடியலுக்கு முந்தைய உணவு), குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை உண்ணுவதில் கவனம் செலுத்துங்கள்

முழு தானிய உணவுகள், ஓட்ஸ், கம்பு, பார்லி, பழுப்பு அரிசி, குயினோவா, பெர்ரி, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்காது. இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

4. உடற்பயிற்சி

ரமழானைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக இருப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். ஆனால் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதனால்தான் ரமழான் முழுவதும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது முக்கியம். ஆயினும் அதிக எடையை தூக்குவது அல்லது வெயிலில் பயிற்சி செய்வது போன்ற அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகளைத தவிர்க்கவும். ஆனால் இஃப்தாருக்குப் பிறகு மாலையில் இதைச் செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php