அனைத்தையும் நாடி  வேலையிலிருந்து லீவு எடுப்பதற்கு சொல்லப்படும் பொய்கள் மற்றும் சாக்குப்போக்குகள்

வேலையிலிருந்து லீவு எடுப்பதற்கு சொல்லப்படும் பொய்கள் மற்றும் சாக்குப்போக்குகள்

2021 Apr 21

தற்போதைய இளைஞர்கள் முதல் முதியோர் வரை வாழ்க்கையில் கடினமான விடயம் என கருதுவது காலையில் நேரத்துடன் எழும்புவதாகும். அதிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை Alarm வைத்து எழும்பி, Office இல் 8 – 9 மணித்தியாலங்கள்  வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பதே பலருக்கு மன உலைச்சலை உண்டாக்குகின்றது. அதையும் தாண்டி ‘எல்லாவற்றையும் விட தூக்கம் தான்டா முக்கியம்’ என கூறி விடுமுறை எடுப்பது, எம்மில் சில நபர்களுக்கு புதிதான ஓர் விடயமல்ல. அது போன்று விடுமுறை எடுக்கும் நபர்கள், தங்களது Office க்கு சொல்லக்கூடிய சிறந்த சில காரணங்கள் இதோ,

*Funerals மற்றும் Wedding*

மன்னன் படத்தில் ரஜினிகாந்த் கையாண்ட யுக்தியை போல் விடுமுறைக்கு காரணமாக, உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைப்பதும் குடும்பத்தில் வயதான முதியவர் ஒருவரை இறக்க வைப்பதும் அதிகமானோர் சொல்லும் ஓர் விடயமாகும். எனினும் உணர்வு மிகுந்த எம் மக்களுக்கு திருமணம் மற்றும் திடீர் மரணம் என்பது உணர்வுடன் கலந்த ஓர் விடயமாகும். எனினும் இக் காரணத்தை அதிகமானோர் தவறாக பயன்படுத்துவதால், இவ் விடயத்துக்கு  உரித்தான மகிமை குறைந்து விடுகின்றது. ஆகவே இதை உகந்த படி உபயோகித்து தத்தமது நற் பெயர்களை பாதுகாத்துக் கொள்ளவும்.

*கடவுள் பக்தி சார்ந்த யுக்திகள்*

கடவுள் மற்றும் பக்தி சார்ந்த விடயங்கள் பலருக்கு வாழ்வியலுக்கும் அப்பாற்பட்ட ஓர் விடயம் ஆகும். ஆகவே கடவுள் சார்ந்த கிரியைகளுக்கு அதற்கான மகிமை எப்பொழுதும் உண்டு. ஆகையால், இதனை வைத்து சாக்குபோக்கு கூறவதனால் இவற்றிற்கு எதிராக கேள்வி எழுப்பப்படுவது அரிது. இவை ஒரு புறம் இருக்க, எப்போதும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு வழிபடாத ஓர் நபர், விடுமுறைக்கு மாத்திரம் கடவுளை பின்பற்றுவது தான் சகித்துகொள்ள முடியாத ஓர் விடயமாகும்.

*Doctor Appointments அல்லது நோய்வாய்ப்படுதல்*

பாடசாலை காலம் முதல் Office வாழ்க்கை வரை அதிகமான Leave letter களில் கூறப்பட்ட ஓர் வாக்கியம் “சுகயீனம் காரணமாக சமூகமளிக்க முடியவில்லை” மற்றும் ‘Due to sickness I couldn’t attend’ ஆகிய வசனங்கள் ஆகும். இச் சாக்கு போக்குகள் புளித்து போன விடயங்களாக இருந்தாலும், நிலையான காரணங்களாக விளங்குவதனால் பொய்யாக இருப்பினும், எவராலும் மறுப்பு தெரிவிக்க முடியாது. பரவலாக கூறப்படும் Food Poisoning மற்றும் இருமலாக இருப்பின், பெண்கள் Dull Make Up என்ற பெயரில் Eyebrow பென்சிலை சற்று அதிகமாக உபயோகித்துக்கொள்வதும் ஆண்கள் அடிக்கடி கழிவறை சென்று காலம் கழிப்பதையும் யுக்திகளாக கொண்டுள்ளனர் . மேலும் கொரோனா காலம் காரணமாக இருமல் காய்ச்சலுக்கு சற்று மதிப்பு இருப்பதால் அதிகமானோர் பயந்து போய் விடுமுறையளிக்கிறார்கள்.

*அவசர குடும்ப பொறுப்புக்கள்*

பிள்ளைகள் கொண்ட குடும்பஸ்தர்கள் அதிகம் சொல்லும் காரணம். ஆகவே இது உண்மையாக இருப்பதற்கான நிகழ்தகவு கூடுதலாக இருப்பதனால் இதற்கு ஓர் தனி மரியாதை உண்டு. மேலும் இதை சற்று உயிரோட்டமுடையதாக கருதுவதற்கு சொல்லும் வேகத்தை குறைத்தும், சொல்லும் தொனியில் சிறு கலக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளவும்.

*நாடக விபத்து*

சாதாரண ஒரு நபரினால் விபத்தை ஓர் பொய் காரணமாக சொல்லமுடியாது. கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்றும் இரத்தத்தில் ஊறிய ஒரு நபரிற்கே இவ்வாறான கதைகளை கூற முடியும். இச் சந்தர்பங்களில் அதிகமான குறுக்கு கேள்விகள் கேட்கப்படுவதால் சற்று உஷாராக பதிலளிக்கவேண்டும். ஆகையால் மற்றவர்கள் நம்பக்கூடிய மாதிரி இக் காரணத்தை உபயோகித்துக்கொள்வது சிறந்தது.

*நம்பப்படக் கூடிய இதர கதைகள்*

பொதுவாக 90s Kids சிறந்து விளங்கும் ஓர் Area. ‘இப்படியெல்லாம் காரணம் வருமாடா?’ என்று அதிகாரியை சற்று ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் விதமாக காரணங்கள் காணப்படும். Passport Office முதல் Driving License Exam வரை பொய்களை அடுக்கி வைத்துக் கொண்டே போகலாம். எனினும் நிராகரிப்பதற்கு வலுவான தடயங்கள் இல்லாததால், எப்பொழும் வெற்றியை கொடுக்கும் யுக்தியாகவே இது கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php