2021 Apr 21
இலங்கையின் வீதிகளில் நாளாந்தம் வாகனங்களின் எண்ணிக்கை கதி வீச்சில் அதிகரிப்பதன் விளைவாக இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கொழும்பு மாநகரில் வாகன நெரிசல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனைத்திலும் இவ்வாறான வாகன நெரிசல் காணப்பட்டாலும், ஏன் எமது நாட்டில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாட்டின் போக்குவரத்துத்துறையை பொருத்த வரையில், வாகன நெரிசல் பெரும் நெருக்கடி தரும் காரணியாக அமைந்துள்ளது. பெருந்தெருக்களில் பயணிக்கும் வாகனங்களின் வேகம், மணிக்கு கிலோ மீற்றர் அளவில் குறைவது, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைய வாய்ப்பிருக்கிறது.
குறிப்பாக, வாகன நெரிசல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். உதாரணமாக ஜப்பானில் டோக்கியோ நகரினை நாம் எடுத்துக் கொண்டால் அங்கு கொழும்பினை போன்று வாகன நெரிசலினை காணவே முடியாது. ஏனெனில் அங்கு மக்கள் தங்களது பிரத்தியேக வாகனங்களை தவிர்த்து மாறாக பொது போக்குவரத்து துறையினை நாடுகின்றனர். ஆம், நகரங்களுக்கிடையான இலகு விமான சேவைகள் போன்று சொகுசு பஸ் சேவைகளையும் பொதுமக்கள் பயணத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கொழும்பு நகரைப் பொருத்த வரையில் நாளொன்றுக்கு 250,000 வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன. ஆகவே உள் நுழையும் வாகனங்கள் அதிகரிக்க வாகன நெரிசலும் தவிர்க முடியாத ஒரு விடயமாக மாறுகின்றது. எனவே வாகன நெரிசலை கட்டுப்படுத்த வீதிகள் அகலப்படுத்தப்படுகிறது. எனினும் இது ஓர் தற்காலிக தீர்வே அன்றி, உறுதியாக இச் செயன்முறையினால் வாகன நெரிசலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் எனக் கூற முடியாது. உதாரணமாக 60 பேர் ஒரு பஸ்ஸில் பயணிக்கின்றனர். மாறாக 60 பேரும் தனித்தனி வாகனங்களில் பயணித்தால், அங்கு 60 வாகனங்கள் வீதியில் பயணிக்கின்றன. இதுவே வாகன நெரிசலின் மையப் புள்ளியாகும்.
கொழும்பு நகரை அண்டியதாக PARK AND RIDE CITY BUS சேவை, கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த திட்டம் முன்னெடுத்து செல்லப்படுகிறது. கொட்டாவ, மாக்கும்புர பஸ் போக்குவரத்து நிலையத்தை மையமாகக் கொண்டு, காலை 6.00 மணி முதல் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படும். இதற்காக 64 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சினால் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. சொந்த வாகனங்களில் வருபவர்கள் தமது வாகனங்களை தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளையில் பயணிகள் தமது சொந்த வாகனங்களை நிறுத்துவதற்காக வேண்டி, ஐந்து வாகன தரிப்பிட நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
1.Makumbura-Kottawa
2.Thalangama SLTB Dipot
3.Bastian Mawatha
4.138 Bus route
5.Nugegoda
அதேவேளையில் பிரதான இரண்டு பேருந்து வழிகளில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து வழி 01
Makumbura-Kottawa தொடக்கம் pettah technical Junction ஊடாக Rajagiriya மற்றும் Pelawatta வீதிகளில் பயணம் செய்து, மீண்டும் Kottawa மேருந்து நிலையத்தை அடையும்.
பேருந்து வழி 02
Makumbura-Kottawa தொடக்கம் Nugegoda, Highlevel வீதிகளினுடாக Narahenpita, Jawatte, Town Hall, Union Place போன்ற பேருந்து தரிப்பிடங்களை கடந்து Galle face ல் இருந்து Kollupitiya, Highlevel வீதிகளினூடாக மீள Makumbura-Kottawa பேருந்து நிலையத்தை அடையும்.
இந்த சேவையின் மேலதிக தகவலினை பெற்றுக் கெள்ள செயலி (app) ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியூடாக பேருந்தின் GPS Tracking மற்றும் தற்சமயம் ஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதனை கூட அறியமுடியும். மேலும் இப் பேருந்துகளுக்கு சாதாரண பேருந்து கட்டணங்களில் இருந்து இரட்டிப்பு மடங்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குறித்த பேருந்துகளில் Wifi வசதி அமைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் கொழும்பிற்குள் நுழையும் 5 பிரவேச வழிகளிலும் புதிய பஸ் சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.