அனைத்தையும் நாடி  இலங்கையில் முஸ்லிம் திருமணச் சட்டம்

இலங்கையில் முஸ்லிம் திருமணச் சட்டம்

2021 Oct 21

சட்ட ஒளி, சட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்குகின்ற ஒரு மும்மொழி சட்டக் கலந்துரையாடல் தொடராகும். இலத்தின் மொழி பழமொழி சட்டத்தினுடைய அறியாமை ஒரு மன்னிப்பாகாது என்பதாகும். இலங்கையின் சட்ட மாணவர்களின் சங்கத்தினுடைய ப்ரோ போனோ குழு எங்களுடைய நாட்டில் சட்டங்கள் விளக்குவதை இலகுபடுத்துவதன் மூலம் பொதுமக்களை அறிவூட்ட முயற்சி செய்கிறது. ஆறாவது கலந்துரையாடல் நிகழ்ச்சி, “திருமணச் சட்டங்கள்” தொடர்பில் கவனம் செலுத்துகிறது.

இந்தக் கலந்துரையாடல் சட்டத்தரணி மய்ஸா அஸார் அவர்களால் வழங்கியதாகும்.

01. எப்போது ஒரு நபருக்கு முஸ்லிம் சட்டம் பிரயோகிக்கப்படும்?

இஸ்லாத்தை பின்பற்றுகின்ற ஒரு நபர் முஸ்லிமாகும். இச்சட்டமானது இலங்கையினுடைய வசிப்பிடத்தைக் கொண்ட முஸ்லிம்களின் திருமணங்கள், விவாகரத்துக்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களுக்கு மாத்திரம் பிரயோகிக்கப்படும் என முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் பிரிவு இரண்டு கூறுகின்றது. ஒரு முஸ்லிம் பிறப்பில் ஒரு முஸ்லிமாக அல்லது மதம் மாறியவராக இருக்க முடியும்.

02. திருமணம் என வருகின்ற போது எந்த நியதிச் சட்டம் பிரயோகிக்கப்படும்?

1951ம் ஆண்டின் இலக்கம் 13 முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டமாகும் மற்றும் இது அவ்வப்போது திருத்தப்பட்டிருக்கின்றது.

03. இஸ்லாத்தில் நபி(ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட திருமணச் சட்டங்களினை திருமண விவாகரத்துச் சட்டம் பிரதிபலிக்கின்றதா?

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஆம். ஷரிஆ சட்டத்தின் கீழ் திருமணம் வலிதானதாக இருப்பதற்கு ஐந்து தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

(i). திறந்தவர்கள் திருமணம் செய்வதற்கான தகைமை அல்லது திருமணமானவராக இருப்பதற்கான தகைமை இருக்க வேண்டும்.

(ii). திறந்தவர்கள் திருமணம் செய்வதற்கு உடன்பட்டிருக்க வேண்டும். கொடைமுனைவு மற்றும்  கொடை ஏற்பு என்பன காணப்பட்டிருக்க வேண்டும்.

(iii). திருமணத்திற்கான ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

(iv). திருமணம் செய்வதற்கு சட்டரீதியான தடைகள் காணக்கூடாது.

(v). மஹர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

முஸ்லிம் திருமணத்தினுடைய வலிதான தன்மையானது பதிவு செய்தல் அல்லது பதிவு செய்யாமையில் தங்கியில்லை என முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம் பிரிவு 16 கூறுகின்றது. இது அந்த திருமணத்திற்குரிய திறந்தவர்களின் பிரிவினர்  ஆளப்படுகின்ற முஸ்லிம் சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும்.

உண்மையான முஸ்லிம் சட்டத்துடன் முரண்படுகின்ற ஏற்பாடுகள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காணப்படுகின்றன. உதாரணமாக பலதாரமண உரிமையினை செயற்படுதல் மற்றும் தலாக் செயன்முறை. பலதாரமணத்தினை செயற்படுத்துவதற்காக ஷரிஆவின் மூலம் வலியுறுத்தப்பட்ட நிபந்தனைகளை இச்சட்டத்தில் உள்ளடக்குவது கட்டாயமானதாக இருக்கின்றது. விவாகரத்து தொடர்பாக முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில் உள்ளடக்கப்படிருக்கின்ற ஏற்பாடுகள் கூட ஒரு தீவிர சமூகப் பிரச்சினையாக உருவாகின்ற தலாக் நிகழ்வுகளின் அதிகரிப்பு என்ற பிண்னணியில் கவனமாக  கருத்திலெடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.

  1. முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது இல்லை. ஆனால் பருவமடையும் வயதினை மதமானது வலியுறுத்துகின்றது. ஆனால் முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில் அவள் 12 வயதிற்கு உட்பட்டவளாக இருந்தால் காழி சம்மதம் கொடுப்பதற்கு அனுமதி வழங்குகின்றது. இது ஒரு துல்லியமான சட்டம் முஸ்லிம்களின் திருமணத்தை நிர்வகிக்க வேண்டியிருக்கின்றது என்பதன் பிரதிபலிப்பா?

முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில்  திருமணத்திற்கான ஒரு ஆகக்குறைந்த வயதினைக் குறிப்பிடவில்லை. முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில் வயதுடன் தொடர்புடைய ஒரே ஏற்பாடு பிரிவு 23 ஆகும். இது பெண் வசிக்கின்ற பிரதேசத்திற்கான காழியினுடைய விசாரணையின் பின்னர் திருமணப் பதிவிற்கு அனுமதியளிப்பது அவசியமாக கருதப்பட்டால் அன்றி ஒரு பன்னிரண்டு வயதினை அடையாத ஒரு முஸ்லிம் பெண்ணிணால் எந்தவித திருமண ஒப்பந்தத்தினுடைய பதிவு இடம்பெறுவதைத் தடுக்கின்றது.

ஷரிஆ சட்டமானது திருமணத்திற்கான ஒரு குறைந்தபட்ச வயதினை குறிப்பிடவில்லை ஆனால் திருமண வயதினுடைய எண்ணக்கரு ஷரிஆ மற்றும் பிக்குற்கு அறியப்படாத ஒன்றில்லை. குர்ஆனில் பருவயதிற்கு அல்லது திருமண வயதிற்கு மற்றும் அவர்களுடைய செயலுக்கான பொறுப்பினை எடுக்கக்கூடிய அல்லது அவர்களுடைய சொந்த விவகாரங்களை சமாளிக்கக்கூடிய வயது தொடர்பில் வெளிப்படையான குறிப்பு இருக்கின்றது. இரண்டு எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன.

1)திருமண வயது அல்லது பருவவயது
2) அவர்களுடைய செயலுக்கான பொறுப்பினை எடுக்கக்கூடிய அல்லது அவர்களுடைய சொந்த விவகாரங்களை சமாளிக்கக்கூடிய வயது.

பருவமடைதல் என்பது உடலில் தகுதி மற்றும் ஒரு நபருக்கு பாலியல் ஆசைகள் தோன்றுகின்ற காலப்பகுதியினைக் குறிக்கின்றது. இது உறவு தொடர்பான எண்ணக்கருவாகும். உடலியல் தகைமை ஒரு திருமணத்தினுடைய பொறுப்பக்களை கையாள்வதற்கான போதுமானதாக இல்லை என இஸ்லாமிய சட்டவாளர்கள் தீர்மானிக்கின்றார்கள் மற்றும் எவ்வாறாயினும் சட்டரீதியில் வலிதான தீர்மானம் (தத்துணிவிற்கான வயது) சமமான முக்கியத்துவமுடையதாகும்.

திருமணத்திற்கான வயதினை அடைதல்  தத்துணிவிற்கான வயதினை அடைதல் (நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளை மதிப்பிடுவதற்கான விவேகம்) மற்றும் திருமணத்திற்கான வயதினை அடைதல் (பருவமடைதல்) என்பனவற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அண்மைய கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்ற துஷ்பிரயோக பிரச்சினை காரணமாக இலங்கையினுடைய முஸ்லிம்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதினை ஸ்தாபிக்க வேண்டிய அவசிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

5. அபயசுந்தர எதிர் அபசுந்தர வழக்கில் என்ன இடம்பெற்றது என நாங்கள் கலந்துரையாட முடியுமா?

பொது திருமண சட்டத்தின் கீழ் கிறிஸ்தோபர் அபயசுந்தர நடாலி அபயசுந்தரவிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அவருக்கு காந்தி எதிரிசிங்கவுடன் உறவு இருந்தது மற்றும் அவருடைய மனைவிக்கெதிராக விவாகரத்து வழக்கொன்றை ஸ்தாபித்தார். இவ்வழக்கானது மாவட்ட நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. கிறிஸ்தோபர் மற்றும் காந்தி ஆகியோர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள் மற்றும் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் திருமணத்தை செய்தனர். அவருடைய முதல் மனைவி பலதாரமணத்திற்காக அவருக்கெதிராக வழக்கொன்றினை தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமானது பொது திருமண கட்டளைச் சட்டம் ஒருதார மணத்தினை மாத்திரம் அங்கீகரிக்கின்றது மற்றும் கிறிஸ்தோபர் பொது திருமண கட்டளைச்சட்டம் தொடர்பாகக் காணப்படுகின்ற பொறுப்புக்கள் மற்றும் நியதிச் சட்டக்கட்டுப்பாடுகள் வழங்குகின்ற ஒரு நிலைமை எற்பட்டது. அவர் திருமண ஒப்பந்தந்தத்தினுடைய நியதிச்சட்டக் கட்டுப்பாடுயினை ஒரு தலைபட்ச இஸ்லாத்திற்கு மதம் மாறுவதன் மூலம் அவராகவே குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.

பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் ஒப்பந்தம் செய்திருக்கின்ற நபர் அந்த திருமணத்தை முடிவுறுத்தாமல் ஒரு ஒருதலைபட்சமான மதமாற்றம் செய்யமுடியாது மற்றும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் இரண்டாம் திருமண ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முடியாது.

6 .ஒரு முஸ்லிம் திருமணம் வலிதான திருமணமாக இருப்பதற்கு சீதனம் ஒரு சட்டதேவைப்பாடா? (மஹர் மற்றும் சீதனம்)

முஸ்லிம் சட்டத்தின் படி, சீதனமென்பது மஹர் எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுச் சட்டத்தின் கீழ் சீதனமென நாங்கள் அறிகின்ற எண்ணக்கரு முஸ்லிம் சட்டத்திற்கு அந்நியமானதாகும். ஷரிஆ சட்டத்தின் படி, சீதனம் அல்லது மஹர் திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகனால் வழங்கப்படுகின்ற  கொடுப்பனவு எனக் குறிப்பிடப்படுகின்றது.  திறத்தவர்கள் பரஸ்பர சம்மதத்தின் மூலம் மஹரின் அளவினைத் தீர்மானிக்க முடியும். மஹர் அல்லது சீதனமென்பது மணமகளினுடைய உரிமையாகும்.

எனினும், மஹரினை வழங்குவதற்கான கட்டுப்பாடு உடன்படிக்கையின் மூலம் வெளிப்படையாக விலக்க முடியாது அப்படியென்றால் சீதனத்தினுடைய அளவு தொடர்பில் உடன்பட முடியாது அதாவது, ஒரு பெண் அவளுடைய கல்வி, அவளுடைய சமூக அந்தஸ்து, நல்லொழுக்கம், புரிந்துணர்வு, செல்வம், அவளுடைய அழகு என்பன கருத்திலெடுத்து ஒரு சரியான சீதனத்திற்கு உரித்துடையவளாக இருக்கின்றார.;

மஹர் உடனடியாக அல்லது தாமதமாக இருக்கலாம். உடனடியாக வழங்கப்படும் மஹர் திருமணம் இடம்பெறும் நேரத்தில் உடனடியாக கொடுக்கலாம் மற்றும் கோரிக்கையின் போது வழங்கப்படமுடியும் மற்றும் பதிவாளர் திருமணப்பதிவில் பதிவு செய்யமுடியும். மஹரானது தாமதமாக இருக்கும் போது அவள்  ஒரு பெண் அவள் சீதனத்தை பெற்றுக்கொள்ளும் வரையில்  இல்லற வாழ்க்கையில் நுழைவதை தடுக்க முடியும்.

7. ஒரு பொது சட்டத்திற்கு உட்பட்ட ஒருவர் முஸ்லிம் சட்டத்தின் கீழ் திரும்பவும் திருமணம் செய்து கொள்ள முடியுமா?

பொதுச் சட்டத்தின் கீழ்  திருமண ஒப்பந்ததினை மேற்கொண்ட ஒரு நபர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து ஒரு விவாகரத்தினை பெறாமல் ஒரு தலைபட்சமான மதமாற்றத்தினை மேற்கொள்வதன் மூலம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் ஒரு இரண்டாம் திருமண ஒப்பந்தத்தினை மேற்கொள்ள  முடியாது. அதன்பிறகு அவர் முஸ்லிம் சட்டத்திற்கு மாறி மற்றும் பின்னர் இரண்டாம் திருமண ஒப்பந்தத்தினை செய்யலாம்.

8. முஸ்லிம் திருமணத்தின் கீழ் மணமகளினுடைய சம்மதம் பலப்பிரயோகத்தினால் பெறப்பட்டிருந்தால் அந்ததத் திருமணமானது முஸ்லிம் சட்டத்தின் கீழ் வலிதானதாக இருக்குமா?

ஆம்,ஏனென்றால் வலி மணமகனினுடைய சார்பில் சம்மதத்தின் தொடர்பாடல் செய்திருப்பார். திருமணத்தின் போது வலியினுடைய சம்மதம் மணமகனினுடைய சம்மதமாகக் கருதப்படுகின்றது. அவசியமான ஆதாரங்களினை வழங்கி அவளுடைய விருப்புக்கெதிராக ஒப்பந்தமான மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனக்கூறி பின்னைய  தினத்தில் திருமண ஒப்பந்தித்தினை நிராகரிப்பதற்கான உரிமை மணமகளுக்குக் காணப்படுகின்றது.

9. முஸ்லிம் சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் ஆண் எத்தனை தடவைகள் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்? மற்றும் ஒரு முஸ்லிம் பெண் எத்தனை தடவைகள் திருமணம் செய்ய முடியும் ?

ஒரு ஆண் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நான்கிற்கு மேற்படாத எத்தனை மனைவிகளையும் திருமணம் செய்ய முடியும் ஆனால் பெண் ஒரே சமயத்தில் ஒரு கணவனை மாத்திரம் கொண்டிருக்க முடியும். அவள் அவளுடைய கணவன் இறந்ந பின்னர் இத்தா சடங்கை நிறைவேற்றிய பின்னர் அல்லது ஒரு வலிதான விவாகரத்தினைப் பெற்றுக் கொண்டிருந்தால் ஒரு இரண்டாவது திருமண ஒப்பந்தினைக் செய்ய முடியும்.

ஒரு முஸ்லிம் ஆண், பல மனைவிகளைத் திருமணம் செய்வதற்கான உரிமை வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன முக்கியமான எச்சரிக்கையாக இருக்கின்றன்றதென்றால் ஆணுக்கு நீதியாக நடக்க முடியாதிருந்தால் அவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் நான்கு மனைவிகளை திருமணம் செய்தல் ஒரு வரையறுக்கப்பட்டதாகும் மற்றம் அது உரிமையல்ல.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php