அனைத்தையும் நாடி  இஞ்சியின் மருத்துவ குணம்!

இஞ்சியின் மருத்துவ குணம்!

2022 Aug 26

இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா?

இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகையாகவும் திகழ்கின்றது.

இஞ்சுதல் என்றால் நீரை அல்லது தண்ணீரை உள்ளிழுத்தல் மற்றும் உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயரை பெற்றது.

உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ எனவும்  சில பகுதிகளில் வேர்க் கொம்பு என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களையும், குணங்களையும் கொண்டுள்ளது. ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை’ என்று இதன் மேன்மையை பெறுமதி சேர்க்கலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகவும் காணப்படுகின்றது.

இந்த இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய இஞ்சித்துண்டு அல்லது அதன் சாற்றை பிழிந்து குடிப்பதனால் சர்க்கரை வியாதி குறைவதோடு பசி உணர்வு இல்லாதவர்களுக்கும் கூட பசி உணர்வை சீக்கிரத்தில் உண்டு பண்ணும். இஞ்சியில் நாம் அறிந்திராத எத்தனையோ அற்புத குணங்கள் இருக்கின்றன அவற்றை பற்றி நாம் அறிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றனவும்  அடங்கியிருக்கின்றன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக்கவும் உதவுகின்றது. இவற்றில் அடங்கியுள்ள வைட்டமின் சி மற்றும் ஏ தங்களின் கூந்தலுக்கும் இயற்கையான பொலிவைத் தருவதோடு, பொடுகையையும் முற்றாக நீக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

ஆயுள் நீடிப்பதையும் இஞ்சியின் மூலம் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது, இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காயச் சாறு இந்த மூன்றையும் ஒரே வேளையில் அரைத்து சாப்பிடுவதாலும் எம்மால் வாழக்கூடிய வாழ்நாட்களை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அரைக் கரண்டி வீதம் அவற்றை தினமும் சாப்பிடுவதால் தங்களின் அயுள் நீடிப்பதோடு  இரைப்பும், இருமலும்  குணமாகும்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதற்கு இஞ்சி சாற்றை பாலில் கரைத்துக் குடிப்பதாலும் தங்களது வயிறு சம்மந்தப்பட்ட வலிகளும், நோய்களும் குணமடைகின்றது. மேலும், மலச்சிக்கல், மார்பு வலி, களைப்பு என்பன நீங்குவதற்கும் இஞ்சி சாற்றை அல்லது இஞ்சியை துவையல் செய்து அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் தமது நோய்களை குணமாக்கி உடலுக்கு மிருதுவான தன்மையையும் ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது. இவற்றினால் உடம்பு இளைக்க கூடிய சாத்தியங்களும் உண்டு.

தலைவலி அல்லது தலை சம்பந்தப்பட்ட வலிகள் உள்ளவர்களுக்கு இஞ்சியை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து சிறிது தண்ணீர் இட்டு நெற்றியில் வைத்து தடவினால் நல்ல பிரதிபலன் கிட்டும்.

நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி நீக்குவதற்கும் நல்ல நிவாரணமும் இஞ்சியின் மூலம் கிடைக்கின்றது. சிறிது இஞ்சியை நீரில் இடித்துப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வருவதாலும் நெஞ்சுப்பகுதியில் இருக்கும் சளி போன்றவற்றை அகற்றுகின்றது.

இஞ்சியில் எமக்குத் தெரியாத எத்தனையோ ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது. புற்றுநோய் போன்ற வியாதிகளை தடுக்கக் கூடிய அளவுக்கு இஞ்சியில் ஆற்றல் உள்ளது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமனான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றது.

இஞ்சி தம் உணவுகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு மசாலா பொருட்களாகவும் காணப்படுகின்றது. இஞ்சி எத்தனையோ சுவையில் தமது நாக்கை புரள வைக்கின்றது. சமையலுக்குப் பயன்படுத்தக் கூடிய இஞ்சியின் அளவு குறைவாக இருப்பது நன்று. ஏனென்றால் அவற்றை அதிகமாக பயன்படுத்தினால் பக்க விளைவுகளை நாம் எதிர்பார்க்காத விதத்தில் ஏற்படக்கூடும். இதனாலேயே ஒவ்வொருவரும் சமைக்கின்ற போது இஞ்சியின் அளவை சிறிதாகவே பயன்படுத்துகின்றனர். இதில் இவ்வாறான மருத்துவ குணங்கள் இருப்பதால் இவற்றை மாத்திரை அளவில் கூட பயன்படுத்தி வருகின்றனர்.

இஞ்சியானது தமது உடலில் காணப்படும் அரிப்பு மற்றும் அழற்சி தன்மைகளை போக்கின்றது. மேலும், தம் உடம்பை மிருதுவான தன்மையில் வைத்துக் கொள்ளவும், நோய் வியாதிகளை போக்கக் கூடிய ஒன்றாகவும் இஞ்சியின் மருத்துவ குணம் காணப்படுகின்றது. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும். இஞ்சி புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டது.

பல்வலிகள் இருக்கும் போது இஞ்சித் துண்டை சிறிய துண்டுகளாக வெட்டி அதன் துண்டுகளை எடுத்து மசாஜ் செய்வதன் மூலமும் அந்த நிவாரணத்தை போக்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பதன் மூலமும் அந்த நீரினால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம் பல்வலியை போக்கிக் கொள்ளலாம்.

இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் தசை மற்றும் மூட்டு வலிகளுக்கு நல்ல பலனை வழங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. உடற்பயிற்சியின் போது ஏற்படும் மூட்டுவலி, சுளுக்குப் பிடிப்பு மற்றும் தசைவலி போன்றவற்றைக் குறைக்க இஞ்சி உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது. மேலும், இஞ்சி சாறானது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வதோடு, அது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.

இஞ்சியானது வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவதை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலையில் எழுந்தவுடன் ஏற்படுகின்ற சோர்வினையும் நிவர்த்தி செய்கின்றது. இஞ்சியானது ஒரு நிவாரண பொருளாகவே இருக்கின்றது. இது யாருக்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியான ஓர் விடயமே.

வயிற்றில் சிறு குடல் பாதிப்பு மற்றும் அல்சர் போன்ற நோய் உள்ளவர்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது பெரிய பாதிப்பை   ஏற்படுத்திவிடும்.

இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்க உதவுகின்றது. நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இஞ்சி தேநீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துகளுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

இஞ்சி கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு, ஞாபகசக்தியை குணப்படுத்தும் ஆற்றலும் இஞ்சியில் அதிகமாக காணப்படுகின்றது. உடலில் சேரும் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றல் தன்மையும் இஞ்சிக்கு உண்டு.

இவ்வாறான ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் இஞ்சியின் சுவையை அறிந்தவர்கள் அதன் மருத்துவ குணங்களையும் அறியாமல் விடுவது என்பது பெரியதொரு இழப்பாகும். ஆகவே, அவற்றின் குணத்தையும், சுவையையும் அறிந்து அளந்து பயன்படுத்துவோம்.

எம்.எஸ்.எம். மும்தாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php