அனைத்தையும் நாடி  நம்ம நாட்டு சினிமா – ” Bend in the Coffin”

நம்ம நாட்டு சினிமா – ” Bend in the Coffin”

2022 Aug 30

நம்நாட்டு சினிமாவை உலகளவிற்கு கொண்டுசெல்லும் திரைப்படமிது!
உலக சினிமா தளத்திற்கு உள்நாட்டு சினிமாவை கொண்டு சென்று சர்வதேச ரீதியில் திரைப்படத்துறையில் நம் நாட்டின் பெயரை பதிவு செய்ய எடுக்கப்பட்டதே’Bend in the Coffin’ திரைப்படமாகும். இத் திரைப்படமானது அரசியலை எள்ளி நகையாடும் ஒரு நையாண்டி தன்மையுடன் கூடிய ஒரு நகைச்சுவையான திரைப்படமாகும்.

படத்தின் தலைப்பிற்கு ஒத்தாற் போல ஒரு இறுதி ஊர்வலம் அல்லது இறுதி சடங்கை மையமாகக்கொண்ட கருப்பொருளை கொண்டு இத் திரைப்படம் அமைகின்றது. ஒரு தந்தையின் மரணம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள்? அதன் பின் அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்ற விருவிருப்பான கதைக்களத்தோடு இத் திரைப்படக்கதை நகர்கின்றது.

இத்திரைப்படத்தை பிரபல நாடக ஆசிரியரும் சிறந்த திரைப்பட இயக்குனருமான இளங்கோ ராம் அவர்கள் இயக்கியுள்ளதோடு ஹிரண்யா பெரேரா அவர்கள் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் கௌசல்யா பெர்னாண்டோ, பிரியந்த சிறிகுமார, துசித லக்நாத், சாந்தனி செனவிரத்ன, தில்ஹானி ஏகநாயக்க, சமிலா பீரிஸ், சுலோச்சனா வீரசிங்க, ரஞ்சித் பனாகொட, அலோக காயத்திரி மற்றும் சமன் கோரலகே ஆகியோர் இத்திரைப்படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இளங்கோ ராமின் இயக்கும் இத் திரைப்படத்திற்கு உதவியாளராக திரு.நிரோஷன் எதிரிமான்னே பணியாற்றுகிறார். அத்தோடு ஆடைகள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்களை திரு. அஜந்தா அழககோன் அவர்களும் தயாரிப்பு முகாமையாளராக மஞ்சுளா பெரேரா அவர்களும் படத்தொகுப்பாளராக ஆதன் சிவானந்தர் அவர்களும் பணியாற்றுகிறார்கள். மேலும் இத்திரைப்படத்தின் ஒப்பணைக்கலைஞராக ராஜித திக்கின்ன அவர்களும் பணியாற்றுகிறார்.

இலங்கைத் திரையுலகை சர்வதேச ரீதியாக கொண்டுசெல்லவேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையுடன் எடுக்கப்படும் ”Bend in the Coffin’ திரைப்படத்தின் முஹுரத் விழா கடந்த மேமாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இத் திரைப்பட இயக்குனர் இளங்கோ ராம் மற்றும் தயாரிப்பாளர் ஹிரண்யா பெரேரா உட்பட இத்திரைப்படத்தை சார்ந்த கலைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்து இவ் விழாவை சிறப்பித்தனர்.

இதன் போது இயக்குனர் இளங்கோ ராம் அவர்கள் இத் திரைப்படத்தைப் பற்றியும் இலங்கை திரையுலகம் பற்றியும் தம்முடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இத் திரைப்படம் குறித்து அவர் கூறுகையில் ‘படத்தின் தலைப்பின் பொருத்தபாட்டிற்கு ஏற்ப எனது படத்தின் கதைக்களம் ஒரு இறுதிச் சடங்கை மையமாககொண்டமைந்தமையை படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றிய மேலோட்டமானதொரு பார்வையை இளங்கோ பகிர்ந்தார்.

திரைக்கதை ஒரு தந்தையின் மரணம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி அமைகிறது என்று இளங்கோ அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்’ இந்தியாவில் உள்ள பெரிய திரைப்பட நிறுவனங்களும் இந்தப் படத்தை இலங்கைக்கு பதிலாக இந்தியாவிலேயே தயாரிக்க விரும்பிய நிலையில் இதனை நிறைவேற்றவேண்டுமென்ற இந்தத் திட்டம் குறித்து இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அசல் படத்தை இலங்கைப் படமாகவேத் தயாரித்து அதன் பின்னர் பிற நாடுகளில் ரீமேக் செய்ய வேண்டும் என்று நாங்கள் திடமாக முடிவு செய்தோம். இம் முடிவும் நாமெடுக்கும் இந்த முயற்சியும் நிச்சயமாக இலங்கை சினிமா திரையுலகிற்கு ஒரு படிகல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்திய மற்றும் பிற நாட்டுத் திரைப்படங்களை நம் நாட்டில் ரீமேக் செய்து அல்லது டப்பிங் செய்து வெளியிடும் வழக்கத்தை மாற்றவும் இது ஒரு சிறுமுயற்சியாக அமையும் என்பது என்னுடைய கருத்து’ என்று அவர் கூறினார்.

இளங்கோ ராமின் இத் திரைப்படம் கொரியாவின் பூசன் இல் உள்ள Asian Content and Film Market மற்றும் பல சர்வதேச விழாக்களிலும் வெளியிடப்பட்டுள்ளமை . இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.இந்த படம் அரசியல் நையாண்டியான கதைக்களமாக இருந்தாலும்,  இளங்கோ தனது திரைப்படங்கள் மூலம் செய்திகளை வெளியிடுவதில் நம்பிக்கை இல்லையென்கிறார். ‘ஒரு நல்ல படத்திற்கு உண்மையில் ஒரு செய்தி தேவையில்லை’ என்று அவர் தன்னுடைய எண்ணத்தை பதிவு செய்தார்.

ஒரு நல்ல படம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் சமூகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையே ஒரு திரைப்படம் சித்தரிக்கிறது என்றும் அவர் விளக்கினார். மேலும் எனது இந்த திரைப்படத்திற்கு ‘இது ஒரு டார்க் காமெடி’ என்று முத்திரை குத்தப்பட்டாலும் கூட எனது திரைப்படங்களைப் பார்க்கும்போது செய்தியை நீங்களே குறிப்பிட வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.

இந்த படத்தை விட சற்று சீரியஸான ஒரு உள்ளடக்கத்தையுடைய மற்றொரு படத்தில் இயக்குனர் இளங்கோ அவர்கள் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் ‘Bend in the Coffin” நகைச்சுவை கலந்த படத்திற்கான உத்வேகம் அவரைத் தூண்டியதால் இத் திரைப்படத்திற்காக இலகுவான திட்டமாக பணியாற்றத் தொடங்கி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த குறிப்பிட்ட படத்தின் முடிவிலிருந்து விலகினார் என்றும் அவர் தெரிவித்தார்.

‘நீங்கள் ஒரு செய்தியை பரிமாற்ற முயற்சிக்கிறீர்களா என்று என்னிடம் நீங்கள் கேட்டால் இதற்கு என்னுடைய பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் எந்தவொரு படமும் சில அரசியல் செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய படத்திலும் அதுதொடர்பில் நிறைய விடயங்கள் அடங்கியிருக்கும்’ என்றார் இயக்குனர் இளங்கோ.

மேலும் இது பற்றி அவர் கூறுகையில் ‘பெரும்பாலான இலங்கைத் திரைப்படங்கள், இந்தியத் திரைப்படங்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய யசவ hழரளந் அல்லது உழஅஅநசஉயைட கடைஅள ஆகவே காணப்படுகின்றன. ஆனால் இத்திரைப்படம் யசவ hழரளந் மற்றும் உழஅஅநசஉயைட கடைஅள ஆகிய இரண்டிற்குமிடையே ஆரோக்கியமான சமநிலையை ஏற்படுத்தும் திரைப்படங்களில் ஒன்றாகவும் திகழும்.இதன் காரணமாக, இது மக்கள் கூட்டத்தை கவர்ந்திழுக்கும் ஒரு திரைப்படமாகயிருக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்’ என்று நம்பிக்கையோடு கூறினார்.

‘வெளிவரவிருக்கும் ‘Bend in the Coffin’ திரைப்படத்தைப் பற்றி பேசும்போது ‘இந்தப் படம் மக்களுக்கானது. உண்மையில் இந்த படத்தை சர்வதேச தளத்திற்காக உருவாக்கி ‘உலக சமூகத்துக்கானவொரு படம்’ என்ற முத்திரையை பதிவுசெய்து உள்நாட்டு சினிமாவை உலகளவில் கொண்டு செல்லமுடியும் என்பது என்னுடைய மற்றும் எமது இயக்குனர் இளங்கோ ராம் அவர்களுடைய நம்பிக்கையும் கூட. என்று ‘Bend in the Coffin’ திரைப்படத் தயாரிப்பாளர் ஹிரண்யா பெரேரா அவர்கள் கருத்துதெரிவித்தார்.

‘எமது இந்த படம் ஸ்கிரிப்ட் கட்டத்தில் (script level)மட்டுமே இருந்தபோதே பல ஐரோப்பிய தயாரிப்பாளர்கள் ஒன்று கூடும் இணை தயாரிப்பு நிறுவனமான இந்தியா கோவாவில் உள்ள பிலிம் பசாருக்கும் (Film Bazaar) விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்கள் விண்ணப்பித்த அந்த ஆண்டில் ஆயிரம் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 படத்திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது என்று அவர் கூறினார்.அந்த ஆண்டில் எங்களுடைய படத்திட்டம் மட்டுமே இலங்கைத் திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் மற்றும் நிதியாளர்களுக்கு படத்தை வழங்கினர்.

நாங்கள் இந்தியாவில் படத்தை எடுத்து இந்தியில் உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இங்கே பல பெரிய இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் எமது குழுவுடன் கைகோர்க்கத் தயாராக இருந்தன. அந்த வாய்ப்பைபற்றி நாங்கள் சற்று சிந்திக்கத்தொடங்கினோம் ஆனாலும் இத் திரைப்படத்தை இலங்கைக்காக உருவாக்கியதால், இது ஒரு இலங்கைத் படத் திட்டமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

நம் நாட்டில் எப்போதும் இந்திய அல்லது கொரிய படங்களையே ரீமேக் செய்கிறோம் என்பதையும், அதைத் தவிர்க்க விரும்புகிறோம் என்றும் நாம் எமது கருத்தை அங்கே முன்வைத்தோம். ஆகையால் இந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள தயங்கிய நாங்கள் இயக்குனர் இளங்கோவின் பரம்பரைச் சொத்தாக கருதப்படும் தாய்மொழி தமிழிலேயே படத்தைத் தயாரிக்க சமரசமாக முன்வந்தோம்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே படத்தின் தயாரிப்பைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் நம் நாடு எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு பிற்போடப்பட்டது’ என்றும் அவர் தெரிவித்தார்.
என்றார் ஹிரண்யா.

ஹிரண்யா அவர்கள் கூறியதற்கமைய அவர்களின் திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் மற்ற ஆசிய நாடுகளில் ரீமேக் செய்யப்படும் இலங்கைத் திரையுலகில் முதல் படமாக இத் திரைப்படம் அமையும் என்று அர்த்தமாகிறது. இது நம் நாட்டிற்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். இதுகுறித்து இளங்கோ கூறுகையில் இப்படத்தை இந்தியாவில் தமிழ் அல்லது மலையாளத்தில் ரீமேக் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், அதனால் ஏற்கனவே இதற்கான படிக்கட்டுகள் போடப்பட்டுவிட்டதாகவும் தெரிய வருகிறது.

இந்த திரைப்படம் அடுத்த சில மாதங்களில் பாணந்துறையில் படமாக்கப்பட உள்ளது. இதன் 80 சதவீத படப்பிடிப்பானது பழைய ‘வலவுவா’ (காலனித்துவ வில்லாவில்) இல் படமாக்கப்பட உள்ளது. ‘வலவுவா இலங்கைக்கு மிகவும் தனித்துவமானதொரு இடமாக கருதப்படுகிறது. மேலும் இலங்கையின் பாரம்பரிய கட்டிடக்கலைகளைக் கொண்டு அமையப்பெற்றது.

நமது படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நம் நாட்டின் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு எவ்வளவு வளமானது என்பதை உலகளவில் பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள் என்பது தயாரிப்பாளர் ஹிரண்யாவின் கருத்தாகும்.

ஹிரண்யா மேலும் கூறுகையில், ‘இதற்கு கூடுதல் ஒத்துழைப்பை வழங்கி இதற்கு உதவியாக இருந்த படக்குழுவினருக்கும், நடிகர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் உண்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் காரணம் அவர்கள் இந்தக் கதையை நம் நாட்டில் எடுக்கவேண்டுமென்ற ஆர்வத்தை எங்களுக்குள் தூண்டினர்.

நம் நாட்டிலேயே இயக்கி தயாரிக்கப்பட்ட படமாக இதனை வெளியிட வேண்டும் என்பதற்கு அவர்கள் பெரும் ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். படக்குழுவில் உள்ள அனைவரும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். மேலும் அனைத்து விடயங்களையும் புரிந்துகொண்டு இணக்கமாக இருக்கிறார்கள். நடிகர்களுக்கு மத்தியில் நட்புறவும் புரிதலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, படம் சந்தேகத்திற்கு இடமின்றி நினைத்ததை விட நன்றாகவே வெளிவரும் என்பதை நாம் நம்புகிறோம்’ என்றார்.

ஒரு தயாரிப்பாளராக எங்கள் திரையுலகம் உலகளாவிய தளத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கையை பற்றி தயாரிப்பாளர் ஹிரண்யா கூறியபோது ‘ஆம்,’ என்று ஆர்வத்தோடு பதில் கூற ஆரம்பித்தார். உள்நாட்டு திரைப்படங்கள் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் மக்களைப் பற்றி பேசுகின்றன. மேலும் உலகளாவிய ரீதியில் கொண்டுசெல்லக்கூடிய பல கதைகள் எங்களிடம் உள்ளன என்று விளக்கினார்.

உலகளவில் எடுத்துச்செல்லுமளவிற்கு அதிக சாத்தியமுள்ள திரைப்படம் இது. அதனால்தான் படத்தை ரீமேக் செய்ய விரும்பும் பிற நாடுகளில் இருந்து பல ஆர்வமுள்ள தரப்பினர் உள்ளனர். என்று அவர்கள் கூறினார்.
அத்தோடு சர்வதேச பார்வையாளர்களை சென்றடைந்த மற்ற உள்நாட்டு திரைப்படங்களும் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும் ‘Bend in the Coffin’திரைப்படம் நம் நாட்டு திரையுலகை உலகளவில் கொண்டு செல்வதற்கான முக்கிய கட்டமாக இருக்கும் என்கிறார் ஹிரண்யா.

கொரியாவின் parasite மற்றும் Squid Game போன்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வெளியான பிறகு தென் கொரியாவின் திரைப்படத் துறை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இவை வெளியிடப்பட்டதன் பின்னர் கொரிய திரைப்படத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு பின்னர் அது ஆசிய திரைப்படத் துறையில் விரிவடைந்தது.தென் கொரியா எங்களைப் போன்ற சிறிய நாடுகளுக்கும் இதற்காக வழி வகுத்தது.’ என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் பல திறமையான திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான தளம் கிடைக்காததால், இந்தப் படத்தின் வெளியீட்டின் மூலம், உலகளவில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் தளத்தை அவர்களுக்கு அமைத்துக்கொடுக்கிறோம் என்பதும் தயாரிப்பாளர் ஹிரண்யாவின் கருத்து.

இது பற்றி மேலும் தெரிவிக்க இயக்குனர் இளங்கோ அவர்கள் தன்னிடம் இன்னும் சில திட்டங்கள் உள்ளன.இருப்பினும் அவற்றையெல்லாம் தள்ளி போட்டுவிட்டு, தனது முழு படைப்பாற்றலையும் Bend in the Coffin’ திரைப்படத்திற்காக செலவிடுகிறார் என்றும் அது முடிந்ததும், அவர் ஒளிப்பதிவாளராக ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக இந்தியாவுக்கு செல்லவிருக்கிறார் என்றும் பகிர்ந்துக்கொண்டார்.

படக்குழு பற்றி..
திரைக்கதை எழுத்தாளர் இயக்குனர் மற்றும் DOP – இளங்கோ ராம்

நிர்வாக தயாரிப்பாளர் – ஹிரண்யா பெரேரா

தயாரிப்பாளர்கள்: ஹிரண்ய பெரேரா, நவநீத நாச்சிமுத்து, பொன் உமாபதி

உதவி இயக்குனர் – நிரோஷன் எதிரிமான்னே

தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்- அஜந்தா அழககோன்

தயாரிப்பு முகாமையாளர் – மஞ்சுளா பெரேரா

எடிட்டர் – ஆதன் சிவானந்தர்

ஒப்பனை – ராஜிதா திக்கின்னா

நடிகர்கள் – கௌசல்யா பெர்னாண்டோ, பிரியந்த சிறிகுமார, துசித லக்னத், சாந்தனி செனவிரத்ன, தில்ஹானி ஏகநாயக்க, சமிலா பீரிஸ், சுலோச்சனா வீரசிங்க, ரஞ்சித் பனாகொட, அலோகா காயத்ரி, சமன் கோரலகே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php