அனைத்தையும் நாடி  சஜிதவின் எதிர்பாரா இழப்பு!

சஜிதவின் எதிர்பாரா இழப்பு!

2022 Sep 9

சஜிதவின் எதிர்பாரா இழப்பு!

அன்று செப்டெம்பர் 05 ஆம் திகதி. பிற்பகல் 1.30 மணியிருக்கும். கன மழை வெள்ளத்தில் வீதிகளும் மூழ்கியிருந்தன. மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு அங்குமிங்குமாக இருந்தார்கள். வாகனங்களின் ஓட்டங்களும் அடங்கவில்லை இதன்போது, வெள்ளை ஆடை அணிந்து கருப்பு குடை பிடித்து வீதியில் சென்றவன் வாகனத்தைக் கண்டு வீதியை விட்டு விலகினான். அவனை பொறுத்தவரை வாகனத்திற்கு இடம்கொடுக்கவே வீதியை விட்டு விலகினான்.. ஆனால் அவன் விலகவில்லை. விழுந்தான் நீரில் மூழ்கிய வடிகாணிற்குள்.

ஆம். இந்த சம்பவம் குருநாகல் நகரிலுள்ள கந்த உடவத்த என்ற வீதியிலே இடம்பெற்றது. பாடசாலை விட்டு வீடு திரும்பிய சஜித குணரத்ன என்ற பாடசாலை மாணவனுக்கே இந்த சம்பவம் நிகழ்ந்தது.வழமைப்போன்று பாடசாலை முடித்துவிட்டு வீடு திரும்பும் மாணவர்களால் குருணாகல் நகரம் கடும் மழையிலும் நிரம்பியிருந்தது. இதில் ஒருவனாகவே சஜித குணரத்னவும் இருந்தான்.

வீதியில் சென்ற வாகனத்துக்கு இடம்கொடுப்பதற்காக வீதியோரத்திற்கு சென்ற சிறுவன் வடிகாணிற்குள் விழுந்ததாக சம்வத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.இதன்போது அதிகளவிலானவர்கள் மாணவனின் உயிரை காப்பாற்றுவதற்காக அதீத முயற்சி மேற்கொண்டனர். முயற்சியின் பலனாக
வடிகாலணிற்குள் தவறி விழுந்து கழிவு நீரில் அடித்துச் செல்லப்பட்ட சஜிதவை கண்டுபிடித்தனர். ஆனால் அவர்களால் உயிரை காப்பாற்ற முடியாமற்போனது.

மீட்கப்பட்ட மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும்.. உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டது.மூன்று பிள்ளைகளில் கடைக்குட்டியான சஜித இறந்து விட்டான். இவ்வுலகிற்கு விடைகொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான். சஜிதவின் தாயின் கதறல். இன்னும் செவியை வாட்டி வதைக்கின்றது.

அய்யோ நேற்று காலை என் மகன் இப்படியா சென்றீர்கள். என் தங்க மகனே.. அய்யோ.. என் மகனே.. சென்று வருகிறேன் என்று சொன்னீரே மகனே.. என் வெள்ளக் குருவியே.. அய்யோ என் குருவியை தொடுவதற்கு விடுங்கள். என் சொத்தே. ஏன் அம்மாவை தவிக்கவிட்டு சென்றீர் மகனே.. அய்யோ.. என் சொத்தே.. அம்மாவிடம் பேசு மகனே. “அம்மாவை பைத்தியகாரியாக்கி சென்றுவிட்டுரே மகனே.” என சவப்பெட்டியில் நீங்கா நித்திரையில் இருக்கும் மகனை கண்டு தாய் இவ்வாறு கதறி அழுகிறார்.

”நேற்று காலை என் மகனும் மகளும் ஒன்றாகத்தான் பாடசாலைக்குச் சென்றார்கள். வரும் பொழுது மகன் தனியாக வந்திருக்கின்றார்.. அதனால் தான் இப்படி நடந்திருக்கின்றது. சேர்ந்த வந்திருந்தால் இப்படி நடந்திருக்காதே. என் மகன் வேன் ஒன்று வந்ததை கண்டு பயந்து ஒதுங்கியுள்ளார்.ஓரமாக சென்றதனால். அந்த குழியில் விழுந்திருக்கின்றார். இதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்விடத்தில் குழியொன்று இருப்பது வேன் சாரதிக்கும் தெரிந்திருக்காது. என் தப்பியிருப்பார்.

மகன் விழுந்த இடத்திலேயெ இருந்தார். அந்த இடத்தில் கீழ் இரும்பு கம்பிகள் உள்ளன. இரும்பு கம்பிகளில்பட்டே என் மகன் உயிரிழந்திருக்கின்றார். இல்லாவிட்டால் என் மகன் தப்பியிருப்பார்.என் மகன் எப்போதும் அந்த வீதி வழியாகவே வருவார். நேற்று மகனை அழைத்துவர என் அம்மா போவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. அதனாலேயே இந்த நிலையேற்பட்டுள்ளது. வெள்ளம் ஓடியதனால் அம்மா சற்று ஓரமாக நின்றிருக்கின்றார். அதனால் தான் தாமதமாகியுள்ளது. இதனாலே மகன் தனியாக வந்துள்ளார். சிறிய வேன் ஒன்றுக்கே என் மகன் ஒதுங்கியுள்ளார். என மகனை இழந்த தந்தை கண்ணீருடனும் வேதனையுடனும் தெரிவித்தார்.

“பேரனை அழைத்துவர நான் சென்றேன்.. வெள்ளம் ஏற்பட்டிருந்ததால் என்னால் முன்னோக்கி நகர முடியாமலிருந்தது. பிறகு நான் செல்லும்போது நான்கைந்து பேர் அவ்விடத்தில் இருந்தார்கள். நான் அப்போது என் பேரனாக இருக்கும் என்று கத்தினேன். அப்போதே எமது மகனின் புத்தக பை அவ்விடத்தில் இருந்தமை தெரியவந்தது” என கண்ணீர் மல்க சஜிதவின் பாட்டி கூறினார்.குருணாகல் மலியதேவ கல்லூரியின் தரம் ஒன்பதில் கல்வி கற்ற சஜித குணரத்னவின் அநியாய மரணத்திற்கு பொறுப்புக்கூறப்போவது யார்?

வீதியை புணரமைக்க தவறியவர்களா? அல்லது தன் மக்களை பாதுகாப்பதாக வெறுமனே வாய் வழியால் மட்டும் கூவும் உரியத் தரப்பினர்களா? இவ்வுலகில் 14 வருடகாலமாக வாழ்ந்த சஜிதவின் மரணத்திற்கு மழையா காரணம்? அல்லது அந்த இடத்தில் உள்ள வடிகாணா காரணம்? இல்லை ஆபத்தான இடத்தை புணரமைக்க தவறிய அதிகாரிகளும், எச்சரிக்கை பலகையை வைக்க தவறியவர்களே காரணம்.

காலநிலை மாற்றங்கள் நிகழும் போது இது போன்ற பல சம்வங்கள் இலங்கையில் இடம்பெற்றுகொண்டுதான் இருக்கின்றன.இதே வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகிய துயர சம்பவமொன்றை அறிந்திருப்பீர்கள்.

நாவலப்பிட்டி – கெட்டபுலா கீழ் பிரிவு – அக்கரவத்தை தோட்டப் பகுதியில் பெண் தொழிலார்கள் உட்பட மூன்று பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்.36, 46 மற்றும் 47 வயதுடைய மூவரே இவ்வாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஒருவரைக்கூட உயிருடன் மீட்கமடியாமல் போனது.

இவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதற்கான காரணம் பாதுகாப்பற்ற ஒரு சிறிய பாலம். இந்த பாலத்தை கயிற்றின் உதவியோடு கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் நிகழந்துள்ளது.உடலும் உயிரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இந்த மூவரும், தேயிலை பறிக்கச் சென்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்பது குறிப்படத்தக்கது.

இவர்களின் உயிர் காவுகொள்ளப்பட்டதற்கு காரணமானதும் பாதுகாப்பற்ற, புணரமைக்கப்படாத ஒரு பாலம்.மேலுமொரு சம்பவம். 5 வயதான பேத்தியும் . 60 வயதான பாட்டியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டடனர்.. இந்த சம்பவமும் 2022 ஆன இந்த வருடமே பதிவாகியது.

சிறுமியை பாடசாலையில் இருந்து மீள வீட்டுக்கு அழைத்து சென்ற போதே, அடித்துச் சென்ற வெள்ள நீர் இவர்களையும் அழைத்துச்சென்றது. இலங்கையின் அரசியல்
நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் நாட்டு மக்களை வதைப்பது போதாதென்றோ காலநிலையும் விட்டு வைத்த பாடில்லை.

இன்னும் எத்தனை காலத்திற்கு இதுபோன்ற அனர்த்தங்களுக்கு எம் உறவுகளின் உயிர்கள் பறிபோகப்போகின்றது.வீதியையும் பாலத்தையும் வாடிகாண்களை கூட புணரமைக்க முடியாத நிலையிலா எமது நாடு உள்ளது. அப்படியாயின் உரிய தரப்பினர்களே.. எதற்காக வாக்குறிதியளிக்கின்றீர்கள். உங்கள் பதவிக்காகவா? நீங்கள் செல்வ செழிப்புடன் சந்தோசமாக வாழ்வதற்கு அப்பாவி மக்களை எதற்காக ஏமாற்றுகின்றீர்கள்?

வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்ற சஜித பாடசாலையிலிருந்து அலங்கோலமாக உயிரற்ற உடலாக வீடு திரும்பாவன் என்று யார் நினைத்தது?கணவனையும் தொழிலுக்கும் பிள்ளைகளை பாடசாலைக்கும் அனுப்புவதற்கு விடியற் காலையில் எழுந்து விறுப்பாக வேலை செய்து உணவை சமைத்துக்கொடுத்து பிள்ளையை சந்தோசமாக பாடசாலைக்கு அனுப்பிவைத்த அந்த தாய் பாதி நாளிலே தன் மகன் தன்னை விட்டு பிரிந்து விடுவான் என்று நினைத்திப்பாரா?

பிஞ்சு குழந்தையாக அழு குரலுடன் கையில் தவந்த பிள்ளை 14 வருடத்திலே தன்னை விட்டு விலகிடுவான் என தந்தைதான் எண்ணியிருப்பாரா?சிறுசிறு சண்டையுடனும் சந்தோஷசத்துடனும் கடைகுட்டியாக பிறந்து வளர்த்த தமது தம்பி நிரந்தரமாக தங்களை விட்டு பிரிந்து விடுவான் என்பதை சஜிதவின் சகோதரர்கள்தான் யோசித்திருப்பார்களா? வெள்ளை ஆடை அணிந்து கம்பீரமாக தனியாக வெளியேறியவன் அதே நிற ஆடையில் அமைதியாக 4 பேருக்கும் அதிகமானவர்களுடன் வீட்டுக்கு திரும்புவான் என யார் நினைத்தது?

இந்நிலையில் வீடு திரும்பிய சஜித வடிகாணில் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் நீரில் மூழ்கியமையினாலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.சஜித்தவின் உயிரை பாதுகாக்க ஒன்றறை மணித்தியாலங்கள் போராடி வடிகாணிலிருந்து வௌியே எடுத்து குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த போதும் சஜித்தவின் உயிர் அவரை விட்டு பிரிந்தது.

அன்றைய நாள் சஜித நித்திரையிலிருந்து எழுந்தான் பாடசாலைக்குச் செல்ல தயாராகினான். பெற்றோர்களிடம் இருந்து விடைபெற்றான். பாடசாலைக்குச் சென்றான். பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொண்டான். கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டான். நண்பர்களுடன் உரையைாடினான். விளையாடினான். பகல் 1.30 பாடசாலையை விட்டு வெளியேற ஆரம்பித்தான். ஆசிரியர்கள் நண்பர்களிடமிருந்து விடைபெற்றான். வெளியேறினான். வீதிக்கிறங்கினான். கடும் மழை. வீடு செல்ல நினைத்தான். மீண்டும் மீளா நித்திரைக்குச் சென்று விட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php