அனைத்தையும் நாடி  கருப்பு அல்கலைன்!

கருப்பு அல்கலைன்!

2022 Oct 3

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு சிம்மசொப்பனம் கூட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி.தன் உடல் ஆரோக்கியத்தினை மெருகேற்றவும் தொடர்ந்து பராமரிக்கவும் தனது சுறுசுறுப்பினை அதிகரிக்க தொடர்ந்து தனது உடலில் நீர் சத்து அற்றுபோகாமல் இருக்க அவர் அடிக்கடி நீர் அருந்துவது உண்டு.

அவர் மட்டுமல்ல குறிப்பாக ஸ்ருதிஹாசன் மல்லிகா அரோரா தினேஷ் கார்த்திக் போன்ற இந்திய பிரபலங்கள் கூட அவர்கள் நீர் அருந்துவதை பற்றியும்
அதன் அவசியத்தை பற்றியும் பல கருத்துக்களை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். என்னடா இது நாங்களும் தான் தினசரி தண்ணீர் குடிக்கிறோம்.இதலாம் ஒரு செய்தியா சொல்றாங்க. இந்த பிரபலங்கள் குடிக்கிற தண்ணீரில் மட்டும் அப்படி என்ன இருக்குநம் உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு ஆற்றக்கூடியது நீர் அந்த நீரை எப்படி குடிக்க வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பது கட்டாயமாகும் இதைப் பற்றிய அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் மேலும் அவர்கள் எந்த நீரை குறிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதில் மிக முக்கியமான ஒன்று குறிப்பிட்ட பிரபலங்கள் கூறும் கருப்பு அல்கலைன்!

கருப்பு அல்கலைனா அப்படின்னா என்ன? 

கருப்பு அல்கலையனை பற்றி கூறுவதற்கு முதலில் நாம் தண்ணீர் என்றால் என்ன? ஏன் நாம் நீர் அருந்த வேண்டும். தினமும் நாம் பருகும் தண்ணீரின் அளவு என்ன? நாம் தண்ணீர் அருந்துவதற்கான காரணம் என்ன? என்பதை முதலில் பார்த்து விடலாம்.
நீர் என்ற வாய்ப்பாட்டினால் விவரிக்கப்படும் ஒரு வேதியல் சேர்மம் தன்மைகளாக நிறமற்றது மணமற்றது பாத்திரம் கொண்டுள்ள வடிவத்தை கொள்ளக்கூடியது. ஒளிபுகும் தன்மையை கொண்டது புவியின் பெரும்பாலான பகுதி நீரினாலேயே நிரம்பியுள்ளது இந்நீர் அதன் தன்மையை பொருத்தும் தட்பவெட்ப அழுத்தத்தில் அது நீராக இருந்தாலும் திட நிலையில் அது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகின்றது.

மலை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபடியாகவும் தூசு படலமாகவும் உள்ளது நீரில் 97 சதவீதம் பகுதி உவர் நீர் சமுத்திரங்களாகவும் சதவிகிதம் பணி ஆறுகள் ஆகவும் 0.6% பகுதி ஏனைய நில மேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள் ஏரிகள் குளம் குட்டைகளிலும் காணப்படுகின்றது மேலும் நீர் நீர் துருவ பணி காவிகளிலும் பணி ஆறுகளிலும் ஏரிகளிலும் சிறை பட்டினமாகவும் ஏன்? புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூட கூறப்படுகின்றது. இது தண்ணீர் பற்றிய ஒரு சிறிய அறிமுகமே.

நாம் எமது தலைப்பிற்கு வருவோம் “குடிநீர்” குடிநீர் என்பது மனிதர்களாலும் ஏனை விலங்குகளாலும் உட்கொள்ளப்பட்டால் எவ்வகை பாதிப்பும் ஏற்படுத்தாத நீர் ஆகும் எமது உடலில் 50 சதவீதத்திற்கும் மேலாக நீர் சத்து காணப்படுகின்றது. நாம் எமது உடல் உழைப்பை அதிகரிக்கும் போது உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக 300ML – 350 ML, மேலும் சிறுநீர் ஊடாக 1L – 2L, மலம் வழியாக 100Ml- 350 ml வரையும் சுவாசம் வழியாக 250 – 350ml வரையும் மொத்தமாக நாளொன்றுக்கு 1.5 l – 3l நீர்ச்சத்து உடலில் இருந்து வெளியேறுகின்றது. இதனால் உடல் சோர்வடைவதை போல உணர்வோம் இந்த நிலைமையை சீரமைக்கவும் எமது உடல் பாகங்கள் சிறப்பாக செயல்படவும் மூளை வினைத்திறனுடன் செயல்படவும் உடல் சமநிலை பேணவும் மற்றும் குறிப்பாக சமீபாடை சீரமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு நாம் நாள்தோறும் உடலுக்குத் தேவையான அளவு நீரை பருகுதல் மிக மிக அவசியமானதாகும்.

இவ்வாறு நாம் பருகும் நீரின் அளவு பற்றி அறிந்திருப்பதும் கட்டாயமாகும். பொதுவான சமூக கருத்தாக ஒரு சாதாரண மனிதன் 8 தொடக்கம் 10 குவளை(glass) நீர் அருந்த வேண்டும் என்பது பொதுவான கருத்து ஆனால் உண்மையில் இதற்கு குறிப்பிட்ட எந்த அளவுக்கு திட்டமும் இல்லை நீர் அருந்துவது வயது, சூழல் காலநிலை, உடல் தொழில் படும் அளவு, உடல் ஆரோக்கியத்திற்கு தகுந்தாற்போல் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் நீரின் அளவும் மாறுபடும். பொதுவாக 18 வயதை பூர்த்தி செய்த ஆரோக்கியமான மனிதன் 2L – 3L நீர் தினசரி பருக வேண்டியது அவசியம்.

அதுவும் காலை எழுந்தவுடன் 2-3 குவளைகள் நீர் அருந்துவது உடலுக்கும் மனதிற்கும் பெரிதும் நன்மை பயக்கும் மேலும் உடற்பயிற்சி செய்யும் போது விரைவாக எமது உடம்பு நீரினை இழப்பதனால் உடற்பயிற்சிக்கு முன்பு முன்னும் பின்னும் நீர் அருந்துவது கட்டாயம். ஆனால் நம் அனைவரும் செய்யும் (செய்யத் தகாத) காரியம் சாப்பிடும் போது நீர் அருந்துவது. இந்த பழக்கம் உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்கக் கூடியது காரணம் இந்த செயற்பாடு நாம் உண்ணும் உணவின் செரிமானத்தையும் சமீபாட்டினையும் சிக்கலுக்கு உள்ளாக்குவது ஆகும். அதிலும் மிகக் குளிர்ந்த நீரை (ice water)பருகுவது மிக மிக மோசமான பழக்கம்.

கருப்பு அல்கலைன் தண்ணீர் என்றால் அது கருப்பு நிறத்தில் உள்ள தண்ணீர் உண்மையில் மிக சிறப்பு வாய்ந்தது தான். நம்முடைய உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கக் கூடியது. அது எப்படி என்று கேட்டால் இதில் PH பெருமானம் மிக அதிகம் பொதுவாக PH(POWER OFF HYDROGEN ION CONCERN)பெருமானம் 1 தொடக்கம் 6 வரையானது அமில தன்மையை குறிப்பது. 8 தொடக்கம் 14 வகையானது காரத்தன்மையை குறிக்கும்.

சரியாக PH பெருமானம் 7 என்பது நடுநிலை (NEUTRAL) தன்மையை குறிக்க கூடியது. நாம் சாதாரணமாக அருந்தும் நீரின் PH பெருமானம்நடுநிலைத் தன்மையை (NEUTRAL) காட்டக் கூடியது. (மழை நீரின் PH பெருமானம் 5.6 இதைவிட பி எச்
பெரும்பாலும் குறைந்தால் அது அமில மலையாக கொள்ளப்படும். மனித உடலில் பி எஸ் பெருமானம் 7.4 இதைவிட PH பெருமானம் அதிகரித்தால் மனிதன் உயிர் வாழ்வது கடினமாகும். எனவே இதன் மூலம் PH பெருமானத்தின் முக்கியத்துவம் உங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கும்.

ஆனால் இந்தக் கறுப்பு அல்கலைன் நீரின் pH பெறுமானம் 8 க்கு மேல் இருப்பதனால் இதனை கறுப்பு அல்கலைன் என்று அழைக்கின்றனர். இந்த நீரின் அமிலத்தன்மை குறைவதனால் எமக்கு சமிபாடு சீராக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கறுப்பு அல்கலைன் குடித்தால் சமிபாடு எப்படி சீராக நடக்கும்? நாம் சாப்பிடும் போது நமது உணவுச் சமிபாடு சீராக அமைவதற்காக நமது வயிற்றில் gastric juice என்ற ஒரு juice சுரக்கும். இந்த juice இன் pH பெறுமானம் 1.5 தொடக்கம் 3.5 வரை இருக்கும். அதாவது அமிலத்தன்மை கொண்டது. இதுதான் நமது சமிபாட்டை சீர் செய்யக் கூடியது. நாம் சரியாக சாப்பிடாமல் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் இருக்கும் போது இந்த juice மிக அதிகமாக சுரக்கிறது. இதன் காரணமாகத்தான் சமிபாட்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் காரத்தன்மையான கறுப்பு அல்கலைன் நீரை நாம் குடிக்கும் போது வயிற்று எரிச்சல் சமப்படுத்தப்படும்.

ஒரு ஆராய்ச்சி கறுப்பு அல்கலைன் நீர் பருகுவோரிற்கும் சாதாரண நீர்  பருகுவதற்குமான blood viscosity வேறுபடுவதாக கூறுகின்றது. Blood viscosity என்பது நமது உடலுக்கு oxygenஐ சீராக எல்லா பாகங்களுக்கும் குருதியின் மூலம் கடத்துவதாகும்.

இப்படி சீராக ஒட்சிசன் பரவும் போது நாம் உற்சாகத்தில் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்கலாம். இதற்காகவே விளையாட்டு வீரர்கள் அதிகமாக குறிப்பிட்ட நீரை உபயோகிக்கின்றனர். மேலும் black water நீரில் 70க்கும் மேற்பட்ட கனிமங்கள் காணப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக Strontium, Sulphate, Silica, Vanadium, Zinc, Prebiotics, Probiotics போன்ற கனிமங்கள் சாதாரண நீரை விட கூடுதலாக காணப்படுகின்றது. ஆகவே இந்த 70 கனிமங்கள் அதிகமாக காணப்படுவதால் எங்களுடைய உடலில் METABOLISM சீராக நடக்கின்றது. அதாவது METABOLISM இற்கு உதவக்கூடிய Mg, Cr, Zn, Fe, K, Na, Cu, Co என்பன black water இல் இருப்பதால் metabolism தரமாகவும் சரியாகவும் நடைபெறுவதாக கூறுகின்றனர்.

மேலும் நச்சு நீக்கம் (DETOXIFICATION) நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் போன்றவற்றை எமது உடலில் இருந்து உடற்கழிவுகள் மூலம் வெளியேற்ற இந்த கறுப்பு அல்கலைன் உதவுவதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்ததாக (SUPERIOR HYDRATION), நான் முன்பு கூறியது போலவே எமது உடலில் உள்ள நீரானது சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறிவிடும். இந்த சந்தர்ப்பத்தில் உடலுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். அப்பொழுது இந்தக் கருப்பு அல்கலைன் பருகினால் சீக்கிரமாக hydration நடந்து சீக்கிரமாக வினைத்திறலுடன் செயற்படலாம். இதனாலும் கூட விளையாட்டு வீர வீராங்கனைகள் இந்தக் கருப்பு அல்கலைன் நீரை உபயோகம் செய்கின்றனர்.

அடடா இவ்வளவு சிறப்புகள் நிறைந்த நீரா அப்போ நாமும் இந்த நீரையே இனி குடிக்கலாமா..? அவசியமே இல்லை நான் இவ்வளவு நேரம் கூறிய அனைத்துப் பயன்களுமே நாம் சாதாரணமாக குடிக்கும் நீரில் காணப்படுகின்றது. அப்படி மேற்கூறிய metabolism, hydration என்பன நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நாம் ஒழுங்கான உணவருந்தும், சரியான நீர் அருந்தும் பழக்கத்துடன் இருப்பதே போதுமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php