அனைத்தையும் நாடி  கால் கொலுசு தான் கல கலக்குது ..!

கால் கொலுசு தான் கல கலக்குது ..!

2022 Oct 19

பெண்களுக்கு அணிகலன்களை அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும்.எந்த ஆடை அணிந்தாலும் அதற்கு ஏற்றவாறு அணிகலன்களை அணிந்துகொள்வது பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும். உச்சந்தலையிலிருந்து பாதம் வரை வகை வகையான ஆபரணங்களை அணிவது பெண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமன்றி அதில் அறிவியல் காரணங்கள் பலவும் புதைந்து இருக்கின்றன. நகைகள் அணிவது காலம் காலமாக பின்பற்று வரும் ஒரு தமிழர் பாரம்பரியமாகும். நகைகள் அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.தங்க நகைகள் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். நாம் அணியும் தங்க நகைகள் நம் உடலை எந்நேரமும் உரசிக்கொண்டிருப்பதால் மேனியின் அழகையும் அவை அதிகரிக்கும். நாம் அணியும் எல்லா ஆபரணங்களுமே தங்கத்தில் செய்யப்படும். நெற்றிச்சுட்டி,காதணி,வளையல்,மாலை என உச்சந்தலையிலிருந்து எல்லா ஆபரணங்களையுமே தங்கத்தில் அணிந்து கொள்வதுண்டு. இருந்தாலும் பாதத்திற்கு அணியும் கொலுசுகளை தங்கத்தில் அணியும் மரபு நம்மிடமில்லை.

என்ன தான் அனைத்து நகைகளையுமே தங்கத்தில் அணிந்து கொண்டாலும் பாதக் கொலுசுகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.
பொதுவாக பொன் என்றாலே அது லக்ஷ்மி கடாட்சம் என்பார்கள். அதாவது தங்கத்தில் மகாலக்ஷ்மி உறைகிறார் என்பது தமிழரின் நம்பிக்கை. அதனால் தான் தாலியைக் கூட தங்கத்தில் போடுகிறார்கள். அப்படியிருக்க தங்கத்தை காலில் அணிவது அதனை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

ஒருவரது உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை மீண்டும் கிரகித்துக் கொள்ளும் தன்மை வெள்ளிக்கு உள்ளது. நமது உடலில் இருக்கும் ஆற்றலானது கை மற்றும் கால்கள் வழியாகவே வெளியேறும். அதனால்தான் கால்களில் வெள்ளி நகைகளை அணிகிறோம்.வெள்ளி நகைககள் நம் ஆயுளை விருத்தி செய்வன.உடலுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை தருவன. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். நடக்கும் போது எழுப்பப்படும் கொலுசின் ‘கல கல’ எனும் ஒலியானது மனதிற்கு இனிமையைத் தரும். இது சுற்றிலும் நேர் அதிர்வலைகளை உருவாக்கி நல்ல மனநிலையைத் தரும்.

பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் காப்பு போன்ற கொலுசை அணிவிக்கிறார்கள். அவர்கள் தவழும் மற்றும் நடக்கும் வயது வந்ததும் மணிகள் கோர்த்த வெள்ளிக் கொலுசுகளை அணிவித்து விடுவார்கள். இதனால் குழந்தை நடக்கும் போது எப்போதுமே அது அணிந்துள்ள கொலுசின் சங்கீத ஒலியை கேட்டுக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாது குழந்தை என்ன செய்கிறது, எங்கே செல்கிறது போன்று குழந்தையின் ஒவ்வொரு அசைவினையும் குடும்பத்தார் கண்காணிக்க குழந்தையின் கால்களில் கொலுசை அணிவிக்கின்றனர். இதனால் தான் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கிறோம்.

பெண்கள் விரைவாக உணர்ச்சி வசப்படுபவர்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பது அறிவியல் கருத்து. பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலில் இருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகள் கட்டுப்படுத்தப்படுகின்றது.

பெண்கள் பல மணி நேரம் சமையலறையில் நின்று கொண்டு சமைக்கும் போது கால்களில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. நெடு நேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பதால் ஏற்படும் வலியானது கீழ் முதுகுத் தண்டுவடத்தின் வழியாக கால்கள் முழுக்க பரவும். இதுபோன்ற சமயங்களில் கால்களில் வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டதை அதிகரிப்பதோடு நமது உடலின் அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்கள் பலமிழந்துப் போவதிலிருந்து பாதுகாத்து பாதங்களை மேம்படுத்துகிறது.

பெண்கள் காலில் அணியும் வெள்ளிக் கொலுசானது உடலில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் பாதிப்பை குறைத்து சருமத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றது.

பாதங்களில் அடிக்கடி வியர்வை ஏற்படுவதைக் குறைத்து ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்துகிறது.

பாதங்களில் கொலுசு அணிவதால் பெண்களின் இடுப்புப் பகுதி வலுப்படுத்தப்படுகிறது.

கொலுசு அணிவதால் பாலியல் சிந்தனை வற்றாமல் இருப்பதோடு மலட்டுத்தன்மையை குறைத்து மாதவிடாய் கோளாறுகளை சீர்செய்ய உதவுகிறது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php