அனைத்தையும் நாடி  ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

2022 Nov 12

சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு பத்து மணியளவில் நடந்தேறியது. இந்திய அரசியலமைப்பில் பல திருப்பங்களையும் இலங்கை அரசு மற்றும் விடுதலை புலிகளின் மீதிலும் செல்வாக்கு செலுத்தி உலக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அப்பெரும் சர்ச்சைக்குறிய துயர சம்பவமானது அந்நாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமரும் ஆன ராஜிவ் காந்தியின் உயிரை காவு வாங்கிய கொலை சம்பவம் ஆகும்.

1991 மே மாத 21 அன்று ஸ்ரீ பெரும்புத்தூரில் பொது தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்ட மரகதம் சந்திரசேகர் அவர்களாலும் கட்சி தொண்டர்களாலும் பெரும் மக்கள் திரட்டின் மத்தியில் பிரசார மேடை அமைக்கப்பட்டிருந்தது.இரவு பத்து மணியை கடந்திருந்த அந்த கூட்ட மேடைக்கு காங்கிரஸ் தரப்பில் பிரச்சாரம் செய்வதற்காக அந்நாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி சமூகம் அளிக்க இருந்தார். விசாக பட்டினம் விமான நிலையத்தை அடைந்து பின் தன் காரின் மூலம் பிரசார களத்தை தன் சக காங்கிரஸ் தொண்டர்களுடன் அடைந்தார் ராஜிவ் காந்தி.

ராஜிவ் காந்தியின் வருகையை ஒட்டி அந்த பிரதேசம் அல்லோல கல்லோல பட்டிருந்தது. ஸ்ரீ பெரும்புத்தூர் ஆலய மைதானத்தில் அமைந்த அந்த பிரசார மேடையை காங்கிரஸ் தலைவர் அடைய பொது சனம் புடை சூழ்ந்து கொண்டது. நெருக்கத்தை சமாலிக்க முடியாத காரணத்தினால் ராஜிவ் காந்தியுடன் வந்த காங்கிரஸின் தமிழ் நாட்டு தலைவரான ஜீ.கே.மூப்பனார் மேடையை சென்றடைய அவருடன் பயணித்த இன்னொருவரான காங்கிரஸ் ஆதரவாளரான ஜெயந்தி நடராஜன் காரிலேயே இருந்து விட்டார்.

அந்த கூட்டம் ராஜிவ் காந்தியை சூழ்ந்து மலர் மாலைகளையும் பூங்கொத்துக்களையும் அவரிடம் கொடுத்து தங்கள் ஆதரவை வெளிக்காட்டியது. காவலர்கள் அவற்றை நிராகரிக்க முனைந்த போதும் ராஜிவ் அவர்களை தடுத்து விட்டார். இந்த கூட்டத்தின் நடுவே கண்ணாடி அணிந்த பெண் ஒருவர் ராஜிவ் காந்தியிடம் நெருங்கி மலர் மாலை அணிவித்து பின் அவர் காலில் விழுந்து வணங்கிய அடுத்த நொடியில் பெரும் வெடிப்பு ராஜிவ் காந்தி மற்றும் அவரை சூழ இருந்த காவல் படையினர் அனைவரும் அந்த குண்டுத்தாக்குதலுக்கு உற்பட்டு மாண்டு சரிந்து கிடந்தனர்.

சற்று புழுதி தணிய எடுத்த நேரத்தைக் காட்டிலும் அந்த கண்ணாடி அணிந்திருந்த தனு எனும் தேன்மொழி ராஜ ரத்தினம் மனித குண்டுதாரியென்றும் ராஜிவ் காந்தி படு கொலை செய்யப் பட்டார் என்றும் யூகிக்க அவ்வளவாய் நேரம் எடுக்கவில்லை.

மேடையிலிருந்த முக்கிய அரசியல் வாதிகளும் ஆதரவாளர்களும் பொது மக்களும் முன்னல் பிரதமரை நோக்கி விரைய பாதி சனம் கிட்டிய திசைகளை அனுகி ஓட அந்த துயரசம்பவம் ராஜிவ் காந்தி உற்பட மேலும் பதினெட்டு பேரை உள்ளடக்கி இருந்ததை உறுதி செய்த பின் கண்ணீர் மழையில் மூழ்கியது. அந்த சம்பவத்தில் லிக். முனுசாமி பி.கே.குப்தா ,முஹமது இக்பால் உள்ளிட்ட காவல் துறையினரையும் மனித குண்டு தாரியான தனு ராஜரத்தினையும் அவருடன் பத்திரிகையாளராக வந்திருந்த ஹரி பாபு என்பவரையும் காவு கொண்டது.

இந்த படுகொலைக்கு காரணம் தமீழீல விடுதலை புலிகள் என்று திடீர் குற்றம் சாட்டப்பட்டதுடன் தமிழகத்தில் அன்றைய நாளில் விடுதலை புலிகளை ஆதரித்த திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராய் இருந்த மு.கருனாநிதி அவர்களின் மீதும் குற்றம் சாட்டி தி.மு.க கொடிகளும், கட்சி அலுவலகங்களும், தி.மு.க அரசு நடத்திய முரசொலி பத்திரிகை காரியாலயமும் சூறையாடப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் உடலுக்கு 1991 மே 24 அன்று இறுதி கிரியைகள் நடை பெற்றது.

பின் நடந்த பொது தேர்தலில் அனுதாப வாக்குகளை பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க தமிழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்க ஜெயலலித்தா முதலமைச்சர் ஆகினார். அன்றைய பொது தேர்தலில் தி.மு.க ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் நடைபெற்றது போல் அன்றி ராஜிவ் காந்தியின் ஆட்சியின் போது பல முறனான ஆட்சி முறையே நடைபெற்றது. தெற்காசியாவில் தனது ஆளுமையை நிலை நாட்ட நினைத்த ராஜிவ் அரசு அனைத்து நாடுகளினதும் அரசியலில் தலையிட்டது. அவ்வாறு இலங்கை அரசியலில் தலையிட்ட ராஜிவ் விடுதலை புலிகளை அடக்குவதற்காகவும் 1983 உள்நாட்டு கிளர்ச்சியின் பின் உருவாகி இருந்த கலக்ககாரர்களை அடக்குவதற்காவும் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசவுடன் கை கோர்த்து 13ஆம் அரசியல் திருத்த சட்டத்தை கொண்டு வந்ததுடன் இந்திய அமைதி காக்கும் படையை ஆயுத தாரிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே சமாதானத்தை நிறுவுதல் நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதி காக்கும் ஓடை ஆயுத தாரிகளின் ஆயுதங்களை கை பற்றியதுடன் விடுதலை புலிகளினது ஆயுதங்கள் பலவற்றையும் கையக படுத்திக் கொண்டதுடன் வட பிரதேசங்களில் இருந்த இலங்கை ராணுவத்தை திரும்ப பெற்றுக் கொண்டு அமைதியையும் நிலை நாட்டியது. எனினும் அவ்வமைதி நெடுநாட்கள் நீளவில்லை. விடுதலைகள் புலிகள் சரணடையவில்லை என்றும் முறையாக ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி விடுதலை புலிகளுக்கு எதிராக போர் தொடுக்க இரண்டு மடங்கிலும் யுத்தம் வலுபெற்றது. போர் காரணியாக அமைதிப் படை விடுதலை புலிகள் சிறுவர்களையும் பெண்களையும் ரானுவத்தில் இணைத்தாக குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் விடுதலை புலிகள் சிக்கிய அமைதிப்படை பெண்களை பாலியல் வங்கொடுமைகளுக்கு உற்படுத்துதல் போன்ற போர் குற்றங்களை செய்ததாக தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தது.

எனினும் ராஜிவ் காந்தி மேல் தெற்காசிய நாடுகள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தின. சிங்கள மக்களும் கூட ராஜிவ் காந்தியின் மீது அவ்வளவாய் ஆதரவு காட்டவில்லை அதன் எடுத்துக் காட்டாக விஜித ரொஹன என்ற கடற்படை வீரரின் ராஜிவ் மீதான தாக்குதலை சொல்லலாம். இதன் பின் காங்கிஸின் ஆட்சி கவிழ பிரதமராக பதவியேற்ற விபி சிங் இந்திய அமைதி படையினை மீளப் பெற்றுக்கொண்டார்.

எனினும் தேர்தல் பிரசாரங்களில் 1990 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி தான் ஆட்சி அமைத்தால் அமைதிப்படையை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதாக சொல்லி இருந்தமையினால் பின் விளைவுகள் கருதி விடுதலை புலிகள் இந்த படு கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வலிமை இழந்து இருந்த நிலையில் அவர்களை பார்த்து பயப்பட வேண்டிய தேவையும் கொலை செய்வதற்கான பின் புலனும் இல்லையென்று குற்றசாட்டை மறுத்தார்.

மேலும் ராஜிவ் காந்தி கொலை எங்களுக்கு பெரும் இழப்பு என்று சுட்டிக்காட்டினார். அதே போல் படு கொலையின் பின்னர் விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதுடன் தமிழக அனுசரனை இழந்த விடுதலை புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்தது. கார்த்திகேயன், சிவராசன் என்போர் தலைமையில் விஷேட புலனாய்வு துறை குழு நியமித்து விசாரணை நடத்தியது இந்திய அரசு. அதன் விசாரணை முடிவுகள் பல அரசியல் மாற்றகளை கூட அன்றளவில் ஏற்படுத்தியது. ஒற்றைக்கண் சிவராசு என்ற சிவராசனை முக்கிய குற்றவாளியாக கைது செய்து நிருத்தியது.

1995 ஆம் ஆண்டு வி.பி. சிங்கின் பிரசார கூட்த்தில் பத்திரிகையாளராக சென்று உலவு பார்த்து ராஜிவ் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டதாக அவர் மேல் குற்றம் சாட்டப் பட்டது. அந்த குழு ராஜிவ் காந்தியின் பாதுகாப்பில் மேல் இருந்த குறைபாடுகளையும் மத்திய மற்றும் தமிழக அரசின் அழற்சியத்தையும் சுட்டிக்காட்டி இருந்தது. அந்த தனு எனும் மனித வெடிகுண்டான பெண்ணை பத்தடி தூரத்தில் வைத்து ராஜிவ் காந்தியை அனுக முடியாமல் செய்திருந்தால் உயிர் பிழைத்திருப்பர் என்று சுட்டிக் காட்டியது. மேலும் பள்ளி வாசல் மைதானத்தில் நடைபெற இருந்த கூட்டம் கோயில் மைதானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தது.

அதைவிட ராஜிவ் காந்தியின் ஸ்ரீ பெரும்புத்தூர் பிரசார நிகழ்ச்சி தமிழ் நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்த பின் ரஜிவ் காந்தியின் பட்டியலில் இணைக்கப்பட்டதாக குறிப்பிட்டது.
கூட்டம் நடந்த இடம் அடிப்படை பாதுகாப்புக்களை கூட செய்து தர முடியாத அளவில் காடு நிலமாக இருந்ததனாலும் அதில் ஏற்பட்ட சந்தேகங்களினாலும் மரகத சந்திர சேகர் அவர்கள் சிறப்பு புலனாய்வு துறையின் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டார்.

ராஜிவ் காந்தி கொள்ளப்பட முன் பாலஸ்தீன விடுதலை போராட்டக்காரர்களின் தலைவரான யஷார் அரப்பத் ராஜிவ் காந்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அச்சுருத்தல் விடுத்திருந்ததாக சொல்லப்படுகின்றது. பின் 1992 ஜூன் மாதம் நீதிபதி வர்மா தலைமயிலான சிறப்பு புலனாய்வு குழு மேற்கூறிய தகல்களை நிராகரிப்பதாக தங்களின் இறுதி அறிக்கையை முன்வைத்தது. மத்திய அரசும் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டது. பல அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கை தமிழ் நாட்டு அரசு பாதுகாப்பில் கோட்டை விட்டதாக விமர்சித்ததுடன் மத்திய அரசு எந்த வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியது.

ராஜிவ் காந்திற்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு படையை வி பி சிங்க் அரசு திரும்ப பெற்றுக் கொண்டதை சுட்டிக் காட்டியது. ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட முன் தினம் கொலை அச்சுருத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் மத்திய அரசு அதை பொருட்படுத்தவில்லையென குறிப்பிடப்பட்டு இருந்தது. வாழப்பாடி ராமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை வாக்குகளை மட்டும் பொருட்டாக கொண்டு ராஜிவ் காந்தியை பிரசாரத்திற்காக பயன்படுத்தியதற்காக விமர்சித்தது வர்மா கமிட்டி. [அடிப்படை கடமைகளின் கற்பித்தல் நோக்கங்களுக்காக ஒரு வழிமுறையை திட்டமிட்ட குழு]

தடா சட்டத்தின்[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்] கீழ் குற்றவாளிகளின் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் வர்மா கமிசன் உடன் நீதிபதி ஜெயின் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. ஜெயின் கமிட்டி பாதுகாப்பு குறைப்பாடை சுட்டிக்காட்டியதுடன் தி.மு.க மீது சந்தேகம் இருப்பதாக அறிக்கை விடுத்தது. தி.மு.க வை தடைசெய்யுமாறு காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய குஜராத் அரசாங்கம் நிராகரிக்கவே காங்கிரஸ் தன் பங்களிப்பை அரசிடம் இருந்து திரும்ப பெற ஐக்கிய குஜராத் அரசு கவிழ்ந்தது.

1998 ஆம ஆண்டு தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரணதண்டனை அளித்து அதிர்வலைகளை ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் முக்கிய குற்றவாளிகள் 6 பேருக்கு தூக்கு தண்டனை அளித்து நளி எனும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. முருகன், பேரறிவாழன், சாந்தன், ரவிசந்திரன், ரொபர்ட் ஜெயகுமார், நளினி எனப்படுவோர் தான் அக்குற்றவாளிகள்.
இத்தகைய ராஜிவ் காந்தியின் இன்றளவின் மர்மமாகவும் துன்பியல் சம்பவமாகவும் கருதப்படும் படு கொலைக்குப் பின் உள் நாட்டு அரசியல் ஆதாயங்களும், வெளிநாட்டு கூட்டு சதிகளும் காணப்படுகின்ற போதிலும் இன்றளவிலும் தெளிவான ஒரு விடை கிடைக்காமலேயே இருக்கின்றது.

ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆறு பேரின் விடுதலை.

மேற்கூறியவாரு தடா சட்டத்தினால் 26 பேரிற்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட போதிலும் பின் அந்த தீர்ப்பு 1999ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டு முக்கிய குற்றவாளிகள் 7 பேர் மீது மட்டும் தண்டனையை நீட்டித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த ஏழு பேரும் கொலையுடன் சம்மந்தப்பட்ட முக்கிய மைய குற்றவாளிகள் இல்லை என்பதையும் உர்ஜிதப்படுத்தியது. ஏழு பேரில் 4 பேருக்கு மரண தண்டனையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் ஆக 2000 ஆம் ஆண்டு குற்றவாளிகளின் தண்டனையை நீதிமன்றம் குறைத்தது. மேலும் 2014 ஆம் ஆண்டு பேறரிவாளன் மற்றும் இருவருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதி மன்றம்.

2018 செப்டெம்பர் மாதம் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அமைச்சரவை ஏழுபேரையும் விடுதலை செய்ய கோரிய பரிந்துறையை ஆளுனர் மாளிகை நிராகரித்தது. மேலும் பேரறிவாளன் தரப்பில் முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இவ்வருடம் மேமாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப் பட்டார். அவர் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரண்டு மின்கலன்களை வாங்கி தந்தமைக்காக மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளி என்பதும் அவர் கைதான போது அவரது வயது 19 என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும் மற்றக் குற்றவாளிகாளான நளினி, முருகன், ரொபர்ட், சாந்தன், முருகன், ஜெயகுமார், ரவிசந்திரன் 6 பேரை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நவம்பர் 11ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

இதில் முருகன், ரொபர்ட், சாந்தன், முருகன், ஜெயகுமார் போன்றோர் இலங்கையர்கள் என்பதுடன் நளினி மற்றும் முருகன் ஆகியோர் தம்பதிகள் ஆவர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட போது நளினி கர்பமடைந்திருந்ததுடன் அவர்களின் குழந்தை ஐந்து வயது வரை சிறையிலேயே வளர்ந்து வந்தது பின் அவர்களின் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பானது இந்திய அரசியலமைப்பின் 142ஆம் அரசியலமைப்பு பிரிவினால் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php