கலை கலாசாரத்தை நாடி நவபிரசாதம் 08 | தேங்காய் சாதம்

நவபிரசாதம் 08 | தேங்காய் சாதம்

2020 Oct 24

நவபிரசாதம் 08

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்
வடித்து வைத்த சாதம் – 1 கப்
துருவிய தேங்காய் – 3/4 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 15
மிளகாய் வற்றல் – 3
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
வேர்க்கடலை – தேவையான அளவு

செய்முறை


ஒரு கப் வடித்த சாதத்தை எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை துருவிக் கொண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

அத்தோடு முந்திரி, வேர்க்கடலை, துருவிய இஞ்சி, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். இறுதியாக துருவிய தேங்காயையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

துருவிய தேங்காய் சேர்த்த பின் தேங்காயின் வாசனை நன்றாக வரத் தொடங்கும் போது சாதத்தினை போட்டு தேவையானளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக நறுக்கி வைத்திருந்த கொத்தமல்லி தழையினை போட்டு இறக்கி விடவும்.

இப்போது பூஜைக்கான தேங்காய் சாதம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php