கவிதைகள் உலகை நாடி IPL இல் இலங்கை வீரர்களின் நிலை என்ன?

IPL இல் இலங்கை வீரர்களின் நிலை என்ன?

2021 Apr 7

IPL என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இந்தியன் பிரிமியர் லீக்’, 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று வரை கிரிக்கட் என்பது நாடுகளுக்கு இடையிலாக விளையாடப்படும் ஒரு போட்டியாகவே நம்பப்பட்டது. இருப்பினும் எப்போது தமது தேசிய வீரர்களை வெவ்வேறு Jersey களில் பார்க்க தொடங்கினார்களோ, அப்போதே இவை அனைத்தும் தேசியத்திற்கு அப்பாற்பட்ட வணிகம் ஒன்று உள்ளதென்பதை எம்மவர்களால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த அணுகுமுறை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

– முதலாவதாக IPL இல் விளையாடுவதற்கு வீரர்களிடம் ஒப்புதல் கோரப்படும். அவர்களின் அனுமதியின் பின்னர் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு பெயர்கள் முன்மொழியப்படும். குறிப்பிட்ட நபரை தனது அணியில் தக்கவைத்துக்கொள்வதற்காக அணி உரிமையாளர்களுக்கிடையே ஏலம் ஆரம்பிக்கப்படும். அதிக தொகையை முன் மொழிந்த அணிக்கு, குறித்த வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பினை பெறுவார்.

– ஆரம்பத்தில் வீரர்களின் சம்பளம் அமெரிக்க டொலர்களில் (USD) வழங்கப்பட்டது. 2012 இன் பின்னர் இந்திய ரூபாய்க்கு மாற்றம் பெற்றது.

– ஏலத்தில் நிர்ணயிக்கப்படும் விலை அவ் வீரரின் ஆண்டிற்கான சம்பளமாக கருதப்படும். தொடரின் எந்த ஒரு போட்டியிலும் விளையாட இடம் கிடைக்காத பட்சத்தில் கூட, நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் முழுமையாக வழங்கப்படும் என்பதே குறிப்பிடத்தக்கது.

– இதனைத்தவிர ஒரு வெளிநாட்டு விளையாட்டு வீரரை ஓர் அணி வாங்கும் பட்சத்தில், அந்த வெளிநாட்டு கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு அவ் வீரரின் சம்பளத்தொகையின் 20% வீதத்தினை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வழங்கும்.

– சில அணி உரிமையாளர்கள் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட வீரரை ஏலத்திற்கு அனுப்பாமல் அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தனது அணியில் வைத்துக்கொள்வதற்கு Retain செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு.

– வீரர் ஒருவரை Retain செய்யும் பட்சத்தில், அவ் வீரரின் முழுத்தொகையை அவ் ஆண்டிற்கான முதல் போட்டிக்கு முன்னரே செலுத்தவேண்டும். ஒரு சில சமயங்களில் தொகையின் 50% முதல் பயிற்சி முகாமிற்கு முன்னரும், மிகுதி 50% தொடரின் நடுப்பகுதியிலும் வழங்கப்படும். அநேகமான தருணங்களில் 15 – 60 – 20 ஆகிய விகிதங்களடிப்படையில் தொடருக்கு முன்னர் 15% வீதமும் இடையே 60% வீதமும் தொடரின் இறுதியில் 20% வழங்கப்படும். (இந் நிபந்தனைகள் அணிக்கு அணி, வீரர்க்கு வீரர் மாறுபடக்கூடும்.)

உலகை ஸ்தம்பிக்க வைத்த கொரோனா, இந்தியாவை மாத்திரம் விதிவிலக்காக கருதவில்லை. இன்று வரை இந்தியாவில் 11 மில்லியன் நபர்கள் தொற்றுக்குள்ளான போதிலும் இந்திய கிரிக்கட் சபை IPL ஐ இந்தியாவில் நடாத்துவதற்கான ஆயத்தங்களை செய்தது மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தையும் திறந்திருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான ஏல விற்பனை, பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியது. கடந்த சில ஆண்டுகள் போலவே இலங்கை வீரர் யாரவது ஒருவர் அத்தி பூத்தாற்போல் தேர்வு செய்யப்படுவார்கள் என நம்பப்பட்டாலும், இவ் வருடத்தில் எவருமே தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முன்கூட்டியே ஊகித்த Lasith Malinga, ஏலத்திற்கு முன்னரே தனது ஓய்வை அறிவித்து தப்பிவிட்டார் என பரவலாக பேசப்பட்டது. இந்த ஏல விற்பனையில் அதிகூடிய விலைக்கு விற்கப்பட்ட நபராக தென் ஆபிரிக்கா நாட்டைச் சேர்ந்த Chris Morris விளங்கினார். இவரை Rajasthan Royals அணி 16.25 INR கோடிக்கு (இலங்கை மதிப்பில் 43.35 கோடிக்கு) விற்கப்பட்டார்.

2021 IPL இல் இலங்கை வீரர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமை தொடர்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கட் தலைவரும், தற்போதைய Mumbai Indians அணியின் பிரதான பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜயவர்தன கூறுகையில், ‘இலங்கையின் பிரநிதித்துவம் உண்டு என்று நான் நம்புகிறேன். அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்’ (IPL இல் மஹேல மற்றும் சங்கக்காரவின் தற்போதைய பங்களிப்பை கருத்தில் கொண்டு நகைச்சுவையாக சொல்லப்பட்டது). மேலும் கூறுகையில் ‘ஆம், சற்று ஏமாற்றமளிக்கின்றது. இங்கு விளையாடுவதென்பது சற்று கடினமானதோர் விடயம். வெளிநாட்டு வீரர்களுக்கு அண்ணளவாக 20 இடங்களே காணப்படுகின்றது. அதிலும் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்களும் சகலதுறை ஆட்டக்காரர்களுமே உள்வாங்கப்படுகின்றனர். இவ் இடங்களை பூர்த்தி செய்யக்கூடிய இலங்கை வீரர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். எனினும் சில வீரர்கள் எங்களுடைய ராடர்களில் இருந்தனர்’. மேலும் மஹேல கூறுகையில், ‘IPL என்பது உலகின் சிறந்த வீரர்களை தெரிவு செய்து போட்டியிடச்செய்யும் ஒரு போட்டித் தொடர். இது இலங்கை வீரர்களின் திறமையினை மேம்படுத்திக்கொள்ளவும் போட்டி மிகுந்த வீரர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ளவும் விடுக்கப்பட்ட ஓர் செய்தியாக கருத்திற் கொள்ளவேண்டும்.

கடந்த சில ஆண்டுகள் தவிர, 2008 ஆம் ஆண்டு தொடக்கம் IPL இல் இலங்கை வீரர்கள் சோபிப்பதற்கு என்றுமே தவறியதில்லை. IPL இல் அதிக விக்கட்டுக்களை எடுத்த பெருமை Lasith Malinga க்கு உரித்தாகும். மேலும் Kumar Sangakkara, Mahela Jayawardena மற்றும் Anjelo Mathews ஆகிய வீரர்கள் அணித்தலைவர்களாகவும் விளங்கியுள்ளதோடு, Sanath Jayasuriya, Thilakaratne Dilshan மற்றும் Muttiah Muralitharan ஆகியோர், பெருமளவு ஆதிக்கத்தினை தமது அணிகளில் செலுத்தி வந்துள்ளனர்.

இவ் ஆண்டிற்கான ஏலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களாக Kusal Perera, Thisara Perera, Kevin Kothigoda, Maheesh Theekshana, Vijayakanth Viyaskanth, Dushmantha Chameera, Wanindu Hasaranga, Dasun Shanaka மற்றும் Isuru Udana விளங்கினர். எனினும் அணி உரிமையாளர்கள் எவரும் இவ் வீரர்களை ஏலத்தில் வாங்க முன் வரவில்லை என்பது பெரும் வேதனை அளிக்கக்கூடிய ஒரு விடயமாகும்.

தற்போதைய இலங்கை வீரர்கள் IPL இல் தேர்வு பெறாவிட்டாலும், எம்முடைய முன்னாள் ஜாம்பவானாகிய குமார் சங்கக்கார Rajasthan Royals அணியின் புதிய இயக்குனராக தெரிவுசெய்யப்பட்டார். மேலும் அவர், ‘LPL மற்றும் இலங்கை குழாமில் பல சிறப்பு மிக்க வீரர்கள் உள்ளனர். எனினும் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் போட்டித் தொடர் அட்டவணையில் உறுதியின்மை காரணமாக, அநேகமான அணி உரிமையாளர்கள் வீரர்களை கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டினர். நிச்சயமாக வீரர்களின் திறன்களில் எவ்வித குறையும் இல்லை’ என கூறியிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php