அறிவியலை நாடி நோயற்ற உணவு முறைகள்

நோயற்ற உணவு முறைகள்

2021 Apr 8

இன்று நாம் கை நிறைய வில்லைகள் அள்ளி கண்ணை மூடிக் கொண்டு விழுங்குகிறோம். சிறிய காய்ச்சல் என்றாலும் உடனே வைத்தியசாலை வாசல்களில் சென்று நிற்கிறோம். அன்று எம் முன்னோர் பெரிய பெரிய நோய்களுக்கு கூட மூலிகை சாறு எடுத்து குணப்படுத்தினர். உணவே மருந்து என வாழ்ந்து காட்டினர். ஆனால் இன்று மருந்தையே உணவாக மூன்று வேளையும் உட்கொள்கிறோம்.

இதோ.. உங்களுக்காக, நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த சில உணவு முறைகள்,

தினமும் காலை ஒரு நெல்லிக்கனி உண்பதால் இளமையுடனும் புத்துணர்ச்சியுடனும் உடலினை பேண முடியும். நெல்லிக்கனி நரை முடி வளராமலும், இளநரையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

நம் இதயத்தை வலுப்படுத்துவதற்கு செம்பருத்தி பானம் சிறந்த ஒன்றாகும்.

வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலியை குறைப்பதற்கு தினம் சாப்பிடும் போது முடக்கத்தான் கீரை சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.

இருமல், மூக்கடைப்பு மற்றும் ஜலதோஷம் உள்ளவர்கள் சூடான நீரில் கற்பூரவள்ளி இலையினையிட்டு ஆவி பிடிப்பது நிவாரணம் தரும்.

தினம் பப்பாசிப்பழம் சாப்பிடுவதால் மூளை வலிமை பெறும்.

நீரிழிவு நோயுள்ளவர்கள் அரைக் கீரை சாப்பிட்டு வருவதால் நீரிழிவினை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.

வாய்ப்புண் மற்றும் குடற்புண் இருப்பவர்கள் ஏப்பம் விடும் போது துர்நாற்றம் வீசும். மணத்தக்காளி சாப்பிடுவதால் துர்நாற்றம் வீசாதிருக்கும்.

மாரடைப்பு உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் சிறந்த ஒன்றாகும்.

புற்று நோயுடையவர்கள் சீதாப்பழம் சாப்பிடுவதால் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.

முகம் அழகான பொலிவு பெறுவதற்கு திராட்சைப்பழம் உதவுகிறது.

எம்மால் இயன்றவரை நோய்களிலிருந்து விடுதலை பெற இயற்கை முறையினைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php