அனைத்தையும் நாடி  புத்தாக்கத்திற்கான மலையகம்

புத்தாக்கத்திற்கான மலையகம்

2022 Aug 23

ஆசியாவின் முத்து எனக் கூறப்படும் இலங்கை நாட்டின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பை கொண்ட மத்திய மாகாணம் இலங்கையின் சுற்றுலாத் துறையிலும் சரி கலாசாரம், விளையாட்டுத்துறைகளிலும் சரி ஏன் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த பொருளாதார துறைகளிலும் கூட தனக்கென தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் தன்னகத்தே கொண்டுள்aளது. இருப்பினும் இங்கு வாழும் மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இன்றுவரையிலும் பல வருடங்களாக தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களையே தனது தினசரி சிவனோபாயமாக கொண்டுள்ளனர். மேலும் இத்துறைகள் மலையகத்தில் உள்ள குடும்பங்களின் ஓரளவேனும் அவர்களின் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.

ஆனால் இந்த கட்டமைப்பு கடந்த இரண்டு தசாப்த காலமாக மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றத்திற்கான முக்கிய காரணியாக தற்கால இளைஞர்களின் மனோநிலையும் நகர்ப்புற வாழ்வில் உள்ள மோகமும் அதனில் உள்ள மாற்றுத்தன்மையான ஈர்ப்பும் என நாம் நினைவில் கொள்ளளாம்.

மேலும் மலையகத்தில் ஒரு புறம் கல்விகற்ற சமூகத்தினர் உருவாக்கம் மற்றும் உயர் தொழில் அங்கீகாரம், சில புதுமையான கைத்தொழில் முயற்சிகள் போன்ற உயர் அடைவுகளை பெறுவது மகிழ்வூட்டக்கூடியதே. இருப்பினும் இன்னொருபுறம் தொழில் திறமையற்ற தொழிலுக்காக (Unskilled Job) தலைநகரம் நோக்கிய மலையக ஊழியப்படை படையெடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த இரண்டு போக்குகளுக்குமான அளவுச்சார் வித்தியாசம் கணிசமாக காணப்படுகின்றது. இங்கு கல்விகற்ற சமூகத்தினர் உருவாக்கத்தை விட நகரங்களை நோக்கிய தொழிலுக்காக பயணிப்போர் சதவீதம் பல்மடங்கு பெருகியிருக்கின்றது. இது ஒருவகையில் கிராமங்களுக்கான அழிவை நோக்கி செயற்படுகின்றது.

உதாரணமாக கல்விகற்ற சமூகத்தினரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் நகரங்களை நோக்கியே பயணிக்கின்றனர். மேலும் தேயிலை, இறப்பர் பயிர்ச் செய்கையில் உள்ள பரீட்ச்சார்த்தியத்தை விட நகர்ப்புற வேலைகளில் பரீட்ச்சார்த்தியம்(இலகு) அதிகம் என பெரும்பான்மையான மலையக இளைஞர் யுவதிகள் நம்புகின்றனர். மேலும் தற்கால நிதிநிலைமைகளை ஈடுசெய்யக் கூடிய (குறுகிய கால தேவைகளை) இந் நகர்புற வேலைகளே கைகொடுக்க கூடியதாக உள்ளதினால் இந்த தொழில்துறை மாற்றம் என்று கூட கூறலாம்.

இது நிலையானதா?

இருப்பினும் கூட இந்த நகர்ப்புற நகர்வு மலையக இளைஞர் யுவதிகளின் நிலையான வருமானத்தை ஈடுசெய்யுமா?? (கேள்விக்குறி ஆரம்பம்???) என்பதை உறுதியாக கூறிவிட முடியாது. காரணம் பெரும்பான்மையாக இந் நகர்வு தொழில் திறமையற்ற (Unskilled Labor) இளைஞர்களையும் மற்றும் குழந்தை தொழிலாளர்களையும், பாடசாலை இடைவிலகல் மாணவர்களையும், உயர் கல்வி இடைவிலகல் மாணவர்களையும் உருவாக்க கூடியதாகவும் ஊக்கப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

(என்ன தா செய்றது.. இன்னும் எத்தன காலம் தா.. இந்த தேயிலை தோட்டத்த.. நம்பியே வாழ்றது? நம்ப புள்ளைங்க சரி கொழும்பு, கண்டி பக்கம் பொய்ட்டு நல்லா இருக்கட்டு..) மலையக தாய்மாரின்.. புலம்பல்.

இந்த புலம்பலுக்கான விடை என்ன?

இதன் விளைவு இன்றைய இளைஞர் சமூகம் மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்களும் (இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்..) இதற்கமைய எதிர்கால தலைவர்கள் இந்த மாய வலையில் சிக்கித்தவிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இவர்களின் தனிநபர் அபிவிருத்தியையும் ஒழுங்கமைந்த சமூகக் கட்டமைப்பையும், சமூக தூரநோக்கினையும், உயர்ந்த இலட்சியத்தையும் அவர்கள் மனதில் விதைக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். மற்றும் கல்வி கற்ற சமூகத்தினரும், புதிய தொழில்முனைவோரும், தொழில் நிபுணத்துவம் மிக்கவர்களும் அபிவிருத்தி அடைந்த நகரங்களை நோக்கி படையெடுக்காமல் தமது சொந்த கிராமங்களிலிருந்து அக் கிராமங்களை அபிவிருத்தியடைய செய்யத் தூண்டுதலும் வேண்டும்.

அப்படியானால் இதற்கான வித்திடல் எவ்வாறு..

இவ்வாறு வழிகாட்டுதலுக்காக No.17/1, டன்பார் வீதி, ஹட்டன். எனும் முகவரியில் ளு.கிஷோக்குமார் என்பவர் (purpose lab), எனும் வழிகாட்டுதல் அமைப்பை உருவாக்கியுள்ளார். அவர் தன்னை அடையாளப்படுத்தும் போது “தன்னால் ஒரு Bar Soap ஐ கொண்டு சமூக மாற்றத்தினை ஏற்படுத்தி காட்டமுடியும் என்றும், மேலும் அவர் ஆவணப்புகைப்பட கலைஞர் மற்றும் சமூக தொழில் முனைவோராகவும் ஓர் அர்த்தமுள்ள சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசை உள்ளது.

என்றும் நாட்டின் பெருந்தோட்ட சமூகத்தை மையமாகக் கொண்டு பல ஆய்வு திட்டங்களை தனது சொந்த செலவில் நிறைவு செய்துள்ளேன் எனவும் மேலும் தனித்துவமான திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலுள்ள இளைஞர்களின் திறனை நான் விருத்தியடைய செய்வேன், மற்றும் நான் 300ற்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு திட்ட நிகழ்வுகளையும், 1500 தனியாள் வழிநடத்தல் செயலமர்வுகளையும் நிறைவு செய்துள்ளேன். இதுவே எனது அனுபவங்களை மேம்படுத்த உதவியாக இருந்தது.” என அடையாளப்படுத்துகின்றார்.

எனவே இதன் மூலம் அவர் Purpose Lab இனை விபரிக்கும் போது “நாங்கள் Inspire People எனும் இலாப நோக்கமற்ற நிறுவனம் புதிய வடிவமைப்புகள் மற்றும் இளைஞர்களின் திறமைகளை அடையாளப்படுத்தலும் அதனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குதலும், மேலும் இளைஞர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தலும் அவர்கள் அந்த திறமையை நிலைபேறாகக் கொண்டு சுற்றுச்சூழலை உருவாக்குவதே ஆகும்” என தெரிவித்தார்.

இந்த நிலைப்பேறான சமூகச்சூழல் உருவாக்கம் என்பது தனிமனித முன்னேற்றத்தை சார்ந்து மட்டுமல்லாமல் அது சமூக முன்னேற்றத்துடன் தழுவியது. இங்கு தனிமனித முன்னேற்றம் என்பது நிலையான வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்காது. எனவே நாம் மலையக ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையே(Society Echo System) அடைய எத்தனிக்கின்றோம். இதுவே நிலையான சமூக மாற்றத்தை கட்டியெழுப்பக்கூடியது.

இந்த முயற்சியை பயிரிடுவது எவ்வாறு?

அதனை செயற்பாட்டு வடிவமாக்குவதற்கு புதுமையான அனுகுமுறைகளைக் கொண்டு ஆர்வமிக்க இளைஞர், யுவதிகளை நெருங்குவதன் மூலம் அவர்களின் திறன்களை அறிந்து அதனைக் கூர்மைப்படுத்தி ஆர்வமுள்ள இளைய தலைமுறையின் எதிர்காலத்தை அறிவூட்டலுடன் கொண்டுசெல்ல முனைவதோடு இவர்களின் இறுதி இலக்காக சமூகத்திற்கான நல்ல பிரஜைகளை உருவாக்கி.. தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் திறமைகளை கட்டவிழ்த்து அத் திறமைகளின்பால் அவர்களை நிலைப்பேறான பொருளாதார நிலையை மேம்படுத்துவதோடு, அவர்கள் ஆர்வமிக்க தொழில்களில் அத் தொழில்துறை சார்ந்த நிபுணர்களினால் நிகழ் நிலை (Virtual) ஊடாக பயிற்றுவிப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தலும், சுய முயற்சியாளர்களை ஊக்குவித்தலும் தோட்டத்துறைகளில் தொழிலதிபர்களையும் எதிர்கால முன்மாதிரிகளையும் என்னிலிருந்து கொண்டு செல்ல எத்தனிப்பதாகவும், இதற்காக சமூக அக்கறையும், ஆர்வமும மற்றும், திறமையும் கூடிய 15ற்கும் மேற்பட்ட மலையக இளைஞர்களைக் கொண்டு ஊடகத்துறை, வணிகத்துறை, வடிவமைப்புத்துறை, மென்பொருள் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் என்பவற்றுடன் ஓவியத்துறை ஆகியத் துறைகளைக் கொண்டு இவ் அமைப்பினை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றேன் என கூறுகின்றார்.

மலையகத்தின் மாற்றம் என்பது பல வருடங்களாக கேள்விக்குறியாக இருந்தாலும். இந்த மாற்றத்திக்கான வழி மற்றும், சமூக உயர்விற்க்கும் மனிதன் சமூக பிராணியாக வாழ்வதற்கும் வேறுமனே கல்வி அறிவு மட்டும் தீர்வாகாது.

கல்வியுடன் சேர்ந்த சமூக அறிவும் பகுத்தறியும் தன்மையுமே தேவை. நிச்சயமாக இத்தன்மையினை தனிமனிதன் அடைந்தால், அச்சமூகம் மாற்றத்தையும் உயர்வினையும் அடையும். அந்த உயர்வினை அடைய இந்த புதியமுயற்சி வழிவகுக்கும்.

விதை விருட்சமாகட்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php