அனைத்தையும் நாடி  21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.

21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.

2022 Sep 10

உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான “two  states” திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி வரும்  ஒரு பஞ்சாபித் தாயார் தன் மகனிடம்  ஓர் தமிழ்ப் பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள நினைப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இப்போதைக்கு காதல் உணர்ச்சி பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க வைக்காது. ஆனால் இதுவோர் நீண்ட கால பிரச்சினைக்கு வழிகோலும்.
இனத்தால்,மதத்தால், கலாசார பண்பாட்டால் மாறுபட்ட உங்களுக்குள் கருத்து முரண்பாடு ஏற்படுவதென்பது தவிர்க்கவியலாதவொன்றாகிப் போய்விடக்கூடும் எனக்கூற  இதற்கு மகன்  “அம்மா நீ என் தந்தையான ஒரு பஞ்சாபிக்காரரைத்தானே திருமணம் செய்துகொண்டாய்? அப்படியிருக்கையில்  நீ  மேற்சொன்ன  இனத்தால் மதத்தால் பண்பாட்டுக்கு கலாசாரத்தால் ஒன்றுபட்ட உங்களுக்குள் ஏன் தினமும் சண்டையும் முரண்பாடுகளும்  நிறைந்த அன்னியோன்யம் அற்ற வாழ்க்கை?

ஆம்! இன்றைய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவருமே யோசிக்கவேண்டிய கேள்வியிது! ஏனெனில் ஓர் இன/மத கலப்புத் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை எழும்போதெல்லாம்  நாம் முதலில் தூக்கி நிறுத்துவது இந்த தாயார் சொன்ன விடயங்களைத்தான்.  ஓர் இந்துப்பெண் ஓர் இந்து ஆணைத் திருமணம் செய்துகொள்ளும்போதோ  ஓர் கத்தோலிக்க  ஆண் கத்தோலிக்க பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போதோ  ஓர் இஸ்லாமிய ஆணும் இஸ்லாமிய பெண்ணும்  ஓர் பெளத்த ஆணும் பெளத்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும்போதோ.
அவரவர் குடும்பங்களால்  சமூகங்களால் கொடுக்கப்படும் “surety” ஓர் ஹிந்துப்பெண்ணும் ஓர் இஸ்லாமிய இளைஞனையும்  ஓர் பெளத்த இளைஞனும் கிருஸ்தவ பெண்ணும் என்று மாறிவரும் திருமணங்களில் கொடுக்கப்படுவதில்லை அல்லவா? ஏன்? எங்கிருந்து முன்னைய நம்பிக்கையும் பாதுகாப்புணர்வும்  எங்கிருந்து பின்னைய நம்பிக்கையீனமும்  அச்சமும்  பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்படுகிறது? அல்லது உருவாகிறது? ஏனெனில் திருமணதிற்குப்பின் தம்பதியரிடையே முரண்பாடுகள் எழுவதென்பது சகஜமான ஒன்று அதற்கு இன மத பண்பாட்டுக் கலாசாரம் மட்டும்தான் காரணம் என்றில்லையே ?

அரசியல் பிரச்சினைகளாலும் அதனால்  ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்களாலும் மக்கள் புலம்பெயர்ந்து வாழ முற்படுகையில் புதிய சூழ்நிலை ஆடை மாற்றம், மொழி மாற்றம் போன்ற புற மாற்றங்களுடன்  புதிய பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கிக்கொள்ளும் உள மாற்றமும் ஏட்படுகிறபோது  அந்தப் பின்னணியில் நிகழும் இன மத கலப்புத் திருமணங்கள் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டில் ஓர் வெள்ளைக்காரரையோ  வெள்ளைக்காரியையோ தம் குடும்ப உறுப்பினர் ஒருவர்  மணம்செய்துக்கொள்கையில் அதைக் “காலமாற்றம் ” என ஏற்றுக்கொள்ள முடிந்த எங்களால்-

-இதுவும் ஒருவகையான “middle class mind” இவ்வகையான கலப்புகளை ஒரு பெருமைக்குறிய விடயமாகவே நமது உள்மனம் ஏற்றுக்கொள்கிறது என்பது நாம் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத உண்மை.) உள்நாட்டில் இடம்பெறும் இன மத கலப்புத் திருமணங்களை அவ்வளவு சீக்கிரத்தில் ஜீரணித்துக்கொள்ள இயலுவதில்லை அதிலும் கிருஸ்தவ அல்லது சிங்கள கலப்புகளைக்கூட ஒருமாதிரியாக ஏற்றுக்கொள்ளாத துணிகிறவர்கள்  இஸ்லாமியக் கலப்பு என்பதனை  சாத்தியமற்ற ஒன்றாகவே இன்றுவரை கருதுகின்றனர்.
இந்த முரணுக்கு  காரணம் என்ன? காலங் காலமாக சக மதத்தவர்களது மனதில் கட்டியெழுப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கும் மேற்கத்தைய அரசுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளால் இப்போது ஏற்பட்டிருக்கும் காழ்ப்புணர்வு  போன்றன இதற்குக் காரணமாக அமைகின்றன.  மேலும் மிக இறுக்கமான மதம் என்பதால் மற்றவர்கள் இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதோ அல்லது வளைந்து கொடுப்பதோ இல்லை என்பதும் மற்றுமோர்  காரணம்.

காதலிக்கும்போது “நான் எனது தனித்தன்மையையும்  பண்பாட்டையும்  இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருப்பதில்லை. ஆனால் திருமணதிற்குப்பின் இந்த எண்ணம் விஸ்வரூபமெடுக்கும். ஏனெனில் அதற்க்குப்பின்தானே மிகப்பெரிய அதிர்ச்சிகளை ஆச்சரியங்களையும் சந்திக்கப்போகிறோம்! ஒரே இனத்தைச் சார்ந்த  இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும்போதே பிள்ளைகளை எந்த சமயத்தில் வளர்ப்பது என்ற பிரச்சினை எழுகிறது. அப்படியாயின் இரு இனங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும்போது மொழி, மதம், பண்பாடு என்று பல்வேறு விடயங்கள் பற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.
யாருடைய பண்பாட்டின்  எந்தெந்த  அம்சங்களை நாளாந்த நடைமுறையில் ஏற்றுக்கொள்வது  பிள்ளைகளை எந்த பண்பாட்டில் வளர்ப்பது  குழந்தைகள் வீட்டில் தாயின் மொழியை பேசுவதா தந்தையின் பண்பாட்டை பின்பற்றுவதா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஏதோவொருவகையில்   தம்பதியினர் இருவரும் விட்டுக்கொடுத்து ஒருவரின்   பண்பாட்டினை   இன்னொருவரின் பகுதியாக ஏற்றுக்கொள்ளாவிடின் இல்லறம் “டமால்  டூமீல்த்தான்” இல்லையா?

சிலர் தமது சமயத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் வேறுசிலர் நாளாந்த வாழ்வின் அம்சங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் சிலர் மொழியை விடமாட்டார்கள். எனவே இப்படியான கலப்புது திருமணங்கள் வெற்றிகரமாக அமைவதகு நிறையவே பொறுமையும் பரஸ்பர விட்டுக்கொடுத்தலும் வேண்டியிருக்கிறது . இப்படி  மாறித்  திருமணம் செய்துகொள்பவர்களின் எதிர்காலம் ஒன்றின் ஆதிக்கம் இன்றி இரண்டு பண்பாடுகளுக்கும்  இடைப்பட்ட ஒரு நிலையைக் கொண்டதாக இருப்பது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படக்கூடுமா?
உலகமயமாக்கல் கலப்புத் திருமணம், காதல், என்று வரும்போது பழைய சம்பிரதாயபூர்வமான  திருமணங்களின்   புனிதத் தன்மை கேள்விக்குறியாகிறது. இங்கு திருமணங்கள் நீடிப்பது ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவது தனிநபர் விருப்பமேயன்றி குடும்ப கெளரவம் இனசனத்தின் தலையீடு சம்பந்தமானதல்ல  அப்படி அவை சம்பந்தப்படுமாயின் அது சமூகத்தின்  தனிப்பட்டவர்களின்  கலாசார இடைமாறுதல் (transition ) காரணமானது.

Danielle Teutsch என்பவர் எழுதிய “exotic look of the future” என்கிற கட்டுரையில் 21ம்    நூற்றாண்டின் அழகைத் தேடும் முடிவற்ற தேடுதலில் எவ்வளவுக்கெவ்வளவு  இனக்  கலப்பு ஏற்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு தோற்றம் அழகு பெரும் என்ற கருத்துப்போக்கு பிரபல்யம் பெற்றுவருகிறது என்கிறார். கலப்பினால் அழகு வரும் என்பதே தற்போதைய நியதி. இனக்கலப்பினால்   பிறந்தவர்களையே  வர்த்தக   துறையும் fashion துறையும் நாடுகிறது. ஒரு நிறுவனம்

தாம் விளம்பரப்படுத்தும் பொருள் முழு உலகுடனும் தொடர்புடையதாக இருக்கவேண்டுமாயின் இவ்வாறு இனக்கலப்பினால் பிறந்த பெண்களையும் ஆண்களையும் தம் விளம்பரங்களுக்கு மொடல்களாக பயன்படுத்த விரும்புகின்றனராம். சாதியை, மதங்களை ஒழிக்க வேண்டும் என யாரும் கலப்புத் திருமணங்களை செய்துகொள்வதில்லை.  இருவர் ஒருவருக்கொருவர் விரும்பினால் திருமணம் செய்துகொள்கின்றனர். ஆயினும் மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின்  எதிர்க் குரலாக  அமைவதால்  காலப்போக்கில் சில புதிய பிரச்சினைகளுக்கு அது வழிகோலும்  மதம் மாறிய திருமணங்கள்.
குறைந்தது மூன்று தலைமுறைகளின் சந்தோஷங்களையாவது காவு கேட்கும் என்று ஒருகாலம்வரையில் கூறப்பட்டுவந்தது இன்றும் பல இடங்களில் கூறப்படுகிறது. ஆனால் பல்லின சமூகத்தில் வாழப்போகும் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு இனம் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனி சமூகங்களாகப் பார்க்கும் மரபு  ரீதியான பார்வை இனி காலத்திற்க்கு ஒவ்வாததாக மாறக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இணையத்தில் நான் வாசித்த ஓர் விடயம்தனை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்  அதாவது உலகில் மனித இனம் தோன்றியபோது முதன்முதலாக இருந்தவர்கள் நான்கு இனங்கள் மட்டுமே. இன்று இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 72 மரபின  கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனவாம். நான்காக இருந்த இனங்கள் எழுபத்தியிரண்டுக்கும் மேற்பட்ட துணை இனங்களாக பெருகியது எப்படி? இனக்கலப்பினால்   மட்டுமே இது சாத்தியமாகிறது. எனவே இரண்டு இனங்களின் மரபணுக்கள் கலக்கும்போது முற்றிலும் புதிய மரபணு உண்டாகி அது பரிணாம வளர்ச்சியில்  அறிவாற்றலில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது.

புதிய  புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. இவ்வாறு வளர்ந்த மனித இனம் தேங்கி நிற்பதற்கு “அகமண முறை“ காரணமாக இருக்கிறதாம். அகமண முறை இல்லாத மேற்கத்தைய நாடுகளின் அறிவாற்றல்  அறிவியல் வளர்ச்சியுடன்  அகமண முறைக்குள் முடங்கி நிற்கும் கீழைத்தேய நாடுகளின்  அறிவாற்றல்  அறிவியல் வளர்ச்சியை  ஒப்பிடுகையில் அகமண முறை எந்த அளவுக்கு நம்முடைய நாடுகளின் வளர்ச்சிக்கு தடையாக  இருக்கிறது என்பது கண்கூடு.மரபியல்பின்படி இரண்டு வேற்றுமையுள்ள மரபணுக்கள் இணையும்போது வீரியத்தன்மை(Hybrid) பெறுகிறது என்பது மெண்டலியன் (Mendalian) கோட்பாடு

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினதும்  முதன்மையானதும் உயரியதுமான பிறப்புக்கடமை  தங்களது வாழ்க்கைக் காலத்தினுள் வளமான வழித்தோன்றல் ஒன்றையேனும் உருவாக்குதல் என்பதே. விலங்குகளில் சொந்த பந்தம் என்கிற சூட்சுமங்கள் கடந்து உயிர் உற்பத்தி இயல்பாகவே இடம்பெறுகிறது. ஆனால்   மனித உற்பத்தி மட்டும் அற்ப ஆசைகளால்  வளமற்ற முழுங்கிய சந்ததிகளையும் உருவாக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது. இப்போக்கானது நாளடைவில்

இயற்க்கையான நோய்களைக்கூட எதிர்க்க முடியாததும்  புத்திக் கூர்மையற்ற பரம்பரையையுமே பிரசவிக்கும். நீண்டகால நோக்கில்  நலிவடைந்த சமூகத்தை உருவாக்கி மனிதனின் இருப்பையே கேள்விக்குறியதாக்கி விடுகிறதாம். இணைகின்ற இரு மனங்களும் உள்ளத்தால் ஒத்தமைவதோடு  பரம்பரை அலகு பல்வகைமையும் கொண்டமைந்தால்  வளமான வழித்தோன்றல்களுக்கும்  இல்லையெனில் வளமற்ற எச்சங்களுக்குமே வழிகோலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php