அனைத்தையும் நாடி  காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!

காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!

2022 Nov 5

இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக உள்ளது. காடு பெரும் பரப்பளவை கொண்டதாக விளங்குகிறது. காடுகள் மனிதர்களுக்கு பல்வேறு விதங்களிலும் பயன்படக் கூடியதாக இருக்கின்றது‌. காடு இல்லையென்றால் மனிதன் உயிர்வாழத்தான் முடியுமா? அல்லது உலகம் தான் இயங்குமா? என்று கேட்கும் அளவிற்கு காடு உலக உருண்டை மின் அசைவிற்கு மிக முக்கிய பங்கை ஆற்றுகிறது.

மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு காடு பலவாறு உதவுகிறது. காடு மனிதனுக்கு எரிபொருள், அரிமரம், காகித கூழ், செயற்கை இழைக்கான மூலப்பொருள் போன்றவற்றை வழங்குகிறது. இது பூமியின் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளவும் , நீர்நிலை சுழற்சி, வெள்ளம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியும் மற்றும் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு (Carbon Dioxide) மற்றும் ஆக்ஸிஜனின் சமநிலையை பேணியும் மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது. மழை பொழிவதற்கும் மண்ணின் தரம் உயர்வதற்கும் காடுகள் அடித்தளமாக இருக்கின்றன.

மரங்களின் சிறப்புப் பற்றி கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் மிகவும் அழகாக பத்தி எழுத்துக்கள் வடிவில் எழுதியுள்ளார். அவர் அதில் மரத்தை உயர்திணை என்றும் மனிதர்களை அஃறிணை என்றும் கூறியுள்ளதோடு அதற்குப் பல ஆதாரங்களையும் முன்வைத்துள்ளார். மனிதனின் வாழ்வில் பிறந்தது முதல் இறக்கும் வரை மரங்களையே அவன் சார்ந்துள்ளான். மரங்கள் கொடுப்பதற்காக கையை நீட்டுகிறது, மனிதன் வாங்குவதற்காகவே கைகளை நீட்டுகிறான். என்றும் மேலும் பல்வேறு வகையில் மரங்களின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார்.

மேலும் இந்த உன்னதமான அருட்கொடை மனிதனின் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக அழிவை எதிர்நோக்கிக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள் ஆகும். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. மேலும், அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. இந்த உலகின் நுரையீரலான அமேசன் காடு 2019‌ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீக்கிரையாகியது. இதனால் காட்டின் பல்லாயிரக்கணக்ககான மரங்களும், பிராணிகளும் அழிந்து. அமேசன் காட்டின் அழிவால் தற்போது காலநிலை மிகவும் மோசமாக மாறிக் கொண்டு சொல்கிறது. இத்தீப்பரவலுக்கான காரணம் மனித நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

அதாவது இயற்கைக் காடுகளை அழித்து மனிதன் செயற்கையாக விவசாயத்தை மேற்கொள்ள முற்படுகிறான். இதன் போது இயற்கை மரங்கள் வெட்டப்படுவதோடு தீக்கிரையாக்கப்படுகின்றன. இதனால் வெப்பநிலை அதிகரித்து காட்டுத்தீ ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது. மனிதனின் பொடுபோக்குத் தனம் மற்றும் பேராசையால் இயற்கை வளங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதன் பாதிப்பை அனுபவிக்கப் போகின்றவர்கள் நாங்களே.

எமது நாடான இலங்கையும் இயற்கை வளங்களால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இவ்வளங்கள் உலகளவில் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கிறது. இதில் காடுகள் குறிப்பிடத்தக்க ஒன்று. இவ்வாறான இயற்கை வளங்களினால் தான் எமது நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டது. ஆனால் தற்போது காடுகள் அழிவுரும் அபாயத்தில் உள்ளது. காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே என்றால் அது மிகையாகாது.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் இயந்திரமயமாகி மனிதன் அவசர உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். அவனது சுயநலத்திற்காக இயற்கையை அழிக்கிறான். சுற்றுப்புற சூழலில் குப்பைகளை கண்ட படி வீசுகிறான் தொழிற்சாலை கழிவுகளை சூழலில் இடுகிறான் மரங்களை வெட்டுகிறான், செயற்கைப் பதார்த்தங்களை சூழலில் இடுகிறான்‌. இவ்வாறான பல மனித காரணங்களால் காடுகள் அழித்துக் கொண்டு செல்கின்றன.

கட்டிடங்களை கட்டுவதற்காகவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் பெரிய மழைக்காடுகளை அழிக்கின்றார்கள். இதனால் மழைவீழ்ச்சி குறைந்து வரட்சி உண்டாகும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, நாட்டின் வளம் இல்லாதொழிக்கப்படலாம். மழைவீழ்ச்சியில் மரங்களின் பணி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு போன்றவற்றிற்கு மரங்கள் மிக அவசியம். காடுகளை நாம் அழித்தால் அதன் விளைவு எமக்கே சேறும்.

மேலும், காடுகள் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. அமேசன் காட்டுத்தீயின் போது பல இலட்சக்கணக்கான அறிய விலங்குகள் செத்து மடிந்ததோடு மட்டுமல்லாது பல விலங்குகள் மனித வாழிடங்களில் தஞ்சம் புகுந்தன. இதனால் பல உயிராபத்துக்களும் ஏற்பட்டன.

இன்று எமது நாடான இலங்கையில் நாளுக்கு நாள் விலங்குகள் தாக்கி மனிதர்கள் இறக்கின்றார்கள் என்ற செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் காடுகளை நாம் பாதுகாக்காது அழிப்பது தான். விலங்குகளுடைய வாழிடமாகிய காடுகளை நாம் அழிக்கிறோம். அதனால் அது மனித வாழிடங்களை நோக்கி படையெடுப்பதோடு மட்டுமல்லாது தன்னைக் காத்துக் கொள்ள மனிதர்களையே தாக்கி விட்டுச் செல்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகன்றனர்.

எனவே, இவ்வாறான பாதிப்புக்கள் எம்மை அண்டாதிருக்க நாம் காடுகளை பாதுகாக்க வேண்டும்.காடுகளை எவ்வாறு பாதுகாக்கலாம்? விவசாயத்திற்காக காடுகளை அழிக்காது இயன்றளவு சிறிய பகுதிகளில் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளல், குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் இடாது அவற்றை முறையாக அகற்றுதல், ஒரு நாட்டின் முதுகெலும்பான கிராமங்களை பாதுகாத்தல் (கிராமங்களல் தான் தற்போதளவில் காடுகள் சிறிதளவேனும் பாதுகாக்கப் படுகிறது.

கிராமிய மக்கள் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்பவர்கள்) உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக காடுகளை அழிப்பதை தவிர்த்தல் நச்சுப் பதார்த்தங்களை சூழலில் இடாதிருத்தல் ( நச்சுப் பதார்த்தச்களால் மண் வளம் குன்றும்),போன்ற இயற்கைக்கு புறம்பான செயற்பாடுகளை செய்வதால் காட்டு வளம் பாதுகாக்கப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனும் இயன்றளவு குறைந்தது ஒரு மரத்தை யாவது நட வேண்டும். இவ்வாறு காட்டு வளத்தை பாதுகாப்பதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினர்க்கு இயற்கை வளம் மிக்க உலகினை உருவாக்கலாம்.

-பாத்திமா முனீரா முர்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php