கவிதைகள் ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!

ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!

2022 Nov 6

“இரவு”காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.
 கணவன் மனைவியை காதலிக்க வைக்கும்.
வேலை முடிய அசதியில் வந்தவரை
அன்னை மடியாய் தூங்க செய்யும்.
நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன்
நகர் ஊர்வலம் அனுப்பும்.
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தரும்.

அவ்வளவா!

கொஞ்சம் பொறு எல்லாத்துக்கும் இரண்டு முகம் இருக்கு.
பூமிக்கு சூரியன் சந்திரன் போல
நாணயத்துல பூ தலை போல
இந்த இரவுகளுக்கும் இன்னொரு முகம் இருக்கிறது

 

பலரை புலம்ப வைத்து கொண்டிருக்கும் நரகங்கள் அது!
பழைய நினைவுகளை மீட்டெடுத்து
மீண்டும் மனதை உடைத்து நொறுக்கும்.
தொலைதூர காதலர்களை வாட்டி எடுக்கும்.

உறவுகளை பிரிந்து வாழ்பவரை
காண வேண்டும் என்று நினைவுப்படுத்தி
கண்ணீரை தந்தே செல்லும்..
நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது
என்று ஏழைகளை புலம்ப வைக்கும்

ஓர் இரவால் நம்மை எப்படி வேணாலும்
ஆட்டிப் படைக்க முடியும்.
இந்த இரவில் சிலர் பூத்து குளுங்குறார்கள்
சிலர் வாடி வதை படுகிறார்கள்.

-மோகன் ஜெயரத்னம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php