அனைத்தையும் நாடி  ஆரா என்றால் என்ன?

ஆரா என்றால் என்ன?

2022 Nov 26

நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும் உங்கள் அருகில் இருந்த நபர் தான் நினைத்த விடயத்தை தாங்கள் பேசியதாக உங்களிடம் சொல்லி வியந்ததுண்டா? சில வேளைகளில் அது தங்கள் ஆரா மூலம் கடத்தப்பட்டு தங்களின் அருகில் இருந்த நபரை அடைந்திருக்கலாம் அல்லது அருகிலிருந்த நபரின் உள்ளுணர்வுகள் உங்களை தாக்கி இருக்கலாம்.

அதனால் உங்களிருவருக்கிடையே ஒரு இனம் புரியாத இடைத்தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். ஒன்றும் புரியவில்லையா? இக்கட்டுரை மூலம் தங்கள் குழப்பத்தை தெளிவு செய்ய முனைகின்றோம்.

ஆரா என்றால் என்ன?

ஆரா பற்றி சரியான விஞ்ஞான ரீதியிலான வரைவிலக்கணங்கள் இல்லாத போதிலும், ஆன்மீக ரீதியாகவும் பல தத்துவ வியலாளர்கலினாலும், ஆன்மீக வாதிகளாலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.ஒரு மனிதனின் அதீத உள்ளுணர்வுகளும், சிந்தனைகளும், உள்ளக கருத்துக்களும் உடலிலிருந்து ஒரு சக்தி மாற்றமாக உமிழப்படுகின்றது. இவ்வாறு உமிழப்படும் அச்சக்தியானது அந்த மனிதன் உடலை சுற்றி ஒரு ஒளிவளையமாக உருவாகி அவனோடு பயணிக்கின்றது. இந்த அன்மாவின் அதீத சக்தியானது ஆரா என்று கருதப்படுகின்றது.

மனிதர்கள் என்ற வகையில் நம் உடலினுல் குறிப்பிடத்தக்க அளவிலான சிறு தொகையில் மின்சாரத்தினை உருவாக்கிக் கடத்தச் செய்கின்றது. அந்த மின்னோட்டத்தின் காரணமாக நம் உடலை சுற்றி ஒரு காந்தப்புலன் உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் மின் காந்தப்புலனே ஆரா என்றழைக்கப்படுகின்றது.
புராதன ஹிந்து மத நூல்களான வேதங்களின் படி ஆரா என்பது உடலில் பல்வேறு நிலைகளில் காணப்படும் ஆன்மீக சிந்தனைகள், உணர்வுகள், எண்ணங்கள், போன்றவற்றின் ஏழு அடுக்குகள் என்று நம்பப்படுகின்றது. இந்த ஏழு அடுக்குகள் ஒன்றையொன்று மனிதனின் உடல் ஆரோக்கியத்தின் பொருட்டு ஆதிக்கம் செலுத்திக் கொள்ளும் என்றும் நம்பப்படுகின்றது.

ஆரா பற்றிய விஞ்ஞானப் பார்வை..

ஆராப் பற்றி பல்வேறு அறிவியல் ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆரா பற்றிய உண்மையுள்ள ஒரு முடிவுக்கு அறிவியல் இன்னும் வரவில்லை. இருந்த போதிலும் பல விஞ்ஞானிகள் ஆரா என்பது ஆன்மீகம் சார்ந்த பொருள் என்றும் அறிவியளுக்கு அப்பாற்பட்டதென்றும் கூறுகின்றனர். இருந்த போதிலும் பல விஞ்ஞானிகள் ஆரா பற்றிய கருத்துக்களை முற்றிலுமாக மறுக்கின்றனர்.

மேலும் ஆராய்கையில் எல்லா பொருட்களுக்கும் ஆற்றல் காணப்படுகின்றது அதனூடாகவே ஒவ்வொரு பொருளும் மற்றப்பொருளுடன் அதிர்வுகளை பரிமாற்றிக் கொள்கின்றது. இருந்த போதிலும் அந்த ஆற்றலால் ஆன்மாவினதோ பௌதீக உடலினதும் சிந்தனைகளை வெளிக்காட்ட முடியுமா என்பது தெளிவற்ற கேல்விகளையும் தெளிவற்ற பதில்களையுமே உருவாக்குகின்றது.

ஆராவை பார்க்க முடியுமா?

ஆராவை வெறுங்கண்ணாலும் பார்க்க முடியுமென்றபோதிலும் அது மிக மிக அரிதான ஒரு நிகழ்வாகும். இருந்த போதிலும் கதிர்வீச்சு போன்றவற்றை அவதானிக்கப் பயன்படுத்தப்படும் சில புகைப்படக் கருவிகளினாலும், ஆர போன்ற ஆன்மீக விடயங்களை அவதானிக்கப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக கமராக்கள் மூலமும் காணமுடியும்.

கிரிலியன் போட்டோகிரப்பி என்றழைக்கப்படும் விஷேட தொழிநுட்பத்தின் ஊடாக ஆரா மனித உடலை சுற்றி முட்டை வடிவில் இருப்பதை அவதானிக்க முடியும்.இந்த ஆராவின் நிலையானது மனிதனுக்கு மனிதன் வேறுப்படுவதுடன் மனதை ஒரு நிலை படுத்திய ஞானிகள் போன்றோரின் உடல்களில் அதிகமாக காணப்படுகின்றது.கடவுள்களாக வழிப்படும் கடவுள்களின் ஓவியங்களின் பின்னால் ஒளிவட்டம் போன்றவை வரையப்பட்டுள்ளது ஆராவாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

ஆரா எவ்வாறு இருக்கும்?

நம் உடலை சுற்றி இருக்கும் ஆரா ஆனது நம்மை சுற்றி ஏழு நிறங்களில் இருக்கின்றது. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொறு உணர்ச்சியின் பிரத்தியேக வெளிப்பாடாக காணப்படுகின்றது.

• சிவப்பு – நிலையான மனநிலை, உற்சாகம், ஆற்றல்
• செம்மஞ்சள் – துணிவு, மிகுந்த சிந்தனை, அவதானம்
• மஞ்சள் – ஆக்கப்பூர்வம், ஓய்வு, நட்பு
• பச்சை – சமூகமயம், தொடர்பாடல்
• நீலம் – ஆன்மீகம், நிலையான சிந்தனை, உள்ளுணர்வு
• கரு நீலம் – ஆர்வம், கனிவு, ஆன்மீகம்
• ஊதா – சுதந்திரம், புத்திக் கூர்மை, அறிவு

உங்களின் ஆராவை உங்களால் பார்க்க முடியுமா?

மேற்குறிப்பிட்டவாறு விஷேட தொழிநுட்பக் கருவிகளால் அவற்றின் உதவியோடு உங்கள் ஆராவை நீங்கள் பார்க்கலாம்.வெறுங்கண்களால் உங்கள் ஆராவை பார்க்க வேண்டுமெனில் ஒரு வெள்ளை நிற தளத்தில் அதாவது உங்கள் கையின் பின்னால் வெள்ளை நிற பின்னனி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னனிக்கு முன்னால் உங்கள் கைய்யை நீட்டி உள்ளங்கையை சிறிது நேரத்துக்கு கூர்ந்து அவதானிக்கவும். பின் சிறிது நேரத்தில் உங்கள் கையை சுற்றிய வெற்றிடத்தில் விரல் இடுக்குப்போன்றவற்றில் ஒரு மெல்லிய சாம்பல் நிறத்தை ஒத்த ஒளி தோன்றும்.

இது உங்கள் ஆராவாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் இதனை விஞ்ஞான ரீதியில் அனுகும் போது ஒளியியல் மாயை என்று கூறப்படுகின்றது.

ஆரா தாக்கம் செலுத்தும் விதம்!

ஆரா ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மனிதனின் சிந்தனைகள் போன்ற உள்ளுணர்வுகள் ஒரு ஆற்றலாக உமிழப்படும் போது அவனை சுற்றி அது இருக்கின்றது. இதானால் குறிப்பிட்ட நபரோடு நெருங்கிய தொடர்பு அல்லது அருகாமையில் இருக்கும் போது சில வேளைகளில் ஆராவை உணர்கின்றோம் என்பது தெரியாமலேயே ஆரா உணரப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக சொன்னால் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் மனனம் செய்து கொண்டிருக்கும் அல்லது உங்கள் ஆழ்ந்த சிந்தனையில் ஓடிக்கொண்டருக்கும் பாடலை அருகிலிருக்கும் ஒருவர் பாடவோ அதை பற்றி பேசவோ செய்வதை அவதானித்திருக்கலாம். நீங்கள் மனம் தளர்ந்து இருக்கும் வேளைகளில் ஒரு குறிப்பிட்ட நபரின் இருப்பை தேடுவீர்கள் அல்லது அவரை நாடும் போது உங்களுள் இருந்த அந்த மன சோர்வுக்கு காரணாகளே இன்றி தற்காலிக தீர்வு கிடைக்கலாம். அது அவரின் உள் உணர்வுகள் நேர் கணியமாக இருந்திருந்தனாலாக இருக்கலாம்.

குறித்த நபரின் உணர்வுகள் மேன்மையாக இருந்ததனால் அவரது ஆராவும் மேன்மையானதாக இருந்து உங்களுக்குள் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம்.சில சமயங்களில் உங்களை சார்ந்த நபர் மனஅமைதி இல்லாமல் இருக்க நீங்களும் கவலையான ஒரு மனப்பன்மைக்கு உள்வாங்கப்பட்டிருப்பீர்கள். இந்த சந்தர்ப்பங்களை இன்னொருவரின் ஆரா உங்களுக்குல் தாக்கம் செலுத்தும் நிகழ்வாக கொள்ளலாம்.

புத்தரின் ஆரா!

கௌதம புத்தர் தன் வாழ்நாளில் பல தியானங்களின் மூலம் தனது மனதை ஒருநிலைப்படுத்தி சாதாரண மனிதர்களால் அடைய முடியாத ஒரு நிலையை அடைந்தவர் ஆவார். அத்தகைய ஒரு நிலையை அடைந்திருந்த கௌத்தமரது ஆராவானது பல கிலோமீட்டர்கள் கடந்து வியாபித்திருந்ததாகவும், அதானால் அவரின் அருகாமையை உணர்ந்த மக்களின் மனதும் அமைதி நிலையை அடைந்திருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

மேலும் இத்தகவலின் நம்பகத்தன்மை தெளிவாக இல்லாத போதிலும் புத்தரை சூழ இருந்த விலங்குகள் கூட ஆராவின் ஆதிக்கத்திற்கு உற்பட்டிருந்ததாகவும் மாமிச பட்சிகள் கூட அஹிம்சையாக நடந்ததாக பல ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

ஆராவும் அது தொடர்பான மோசடிகள் மற்றும் மூட நம்பிக்கைகளும்!

ஆரா தங்களது எதிர்கால வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆரா எனப்படுவது தங்களது முன் பிறவியின் வினை என்பது போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் சமூகத்தினிடை நிழவுகின்றது.

ஆரா மற்றும் ஆன்மீகம் என்ற பெயரில் எதிர்காலத்தை காட்டுவதாவும் ஆராவினை பெரிதாக்குதல் போன்ற பொய்யான கருத்துக்களை பரப்புவதுடன் மூலம் பெருமளவிலான பணமோசடிகள் செய்யப்பட்டு வருகின்றது.

 

-அன்புநாதன் ஹஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php