கவிதைகள் யார் கடவுள்?

யார் கடவுள்?

2022 Nov 28

ஆதி அந்தமில்லை
அருவம் உருவமில்லை

உயிரும் உணர்வுமில்லை
பாச பந்தமில்லை.

ஏதும் சுயமாய் அமைவதில்லை
அனைத்திற்கும் முதல் உண்டு
எனில்
நீ இருக்கிறாய்
இருந்தும்..

எவ்வாறு நீ அமைந்தாய்?
ஏன் இவை அமைத்தாய்?

உடல் படைத்தாய்
உயிர் படைத்தாய்
ஊன் படைத்தாய்
உலகை படைத்தாய்

ஏன் படைத்தாய்?
உன் இச்சைக்கா?

உணர்ச்சிகள் கடந்த உனக்கு
மனிதன் ஆழ ஆசை ஏன்?

.

அது ஒரு புறம் ஒதுக்கி…
எங்களின் ஆராதனை
உன் செவிகளுக்கு எட்டுமா?

மதம் இனம் பெயர் கொண்டு
மனிதன் உனை ஆழ்வது தெரியுமா?

குண்டு வெடிக்கும் சப்தம்
அறிவாயா?
ஏழைகளின் கண்ணீர்
கண்டாயா?

மனிதன்…

தாவரம் கொன்று
விலங்கு கொன்று
மனிதம் கொன்று
சக மனிதன் கொன்று
ரசிப்பதை அறிவாயா?

உழைப்பவன்
உணர்ச்சிகள்
அறிவாயா?

விதைப்பவன்
மறிப்பதை
அறிவாயா?

மறித்தவர் எங்கு செல்வர்?
மரணத்தின் பின் வாழ்வு உண்டா?

என்னுள் இருக்கிறாயா?
அவனுள் இருக்கிறாயா?

நான் கடவுளா?
அவன் கடவுளா?

பிரபஞ்ச எல்லை காண
விஞ்ஞானம் தவிக்கிறது

உன்னை காண
மெய்யானம் தவிக்கிறது

ஏனிந்த தடுமாற்றம்
ஏனிந்த திருப்பம்

இறைவா…!

உனை எண்ணி எண்ணி
என்னுள் தவிக்கிறேன்
நான்

புதிருக்கு
பதில் தேடி
இருந்தும் நீ
புரியாத புதிர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php