அனைத்தையும் நாடி  திருச்சபை vs அறிஞர்கள்

திருச்சபை vs அறிஞர்கள்

2023 Jan 17

கத்தோலிக்க மதகுருவாக இருந்த “pope john paul II” கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு
கூறியிருந்த வார்த்தைகளே அவை. ஆம் கத்தோலிக்க திருச்சபைகளின் ஒப்பற்ற தலைவர்களாக விளங்குகின்ற போப்பாண்டவர்கள் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகளும் அதனால் அந்த மதத்துக்குள் எழுந்த மாற்றங்களும் அந்த மதத்தினை இன்றுவரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றதெனலாம். சிலுவைப்போரை தொடங்கிய “Pope urban ll “ தொடங்கி தற்போதைய pop francis வரை இந்த சர்ச்சைகள் நீடித்துக்கொண்டேதான் இருக்கின்றனவெனலாம்.

(ஏழு சிலுவைப்போர்களின் மூலம்) போர்களால் மதத்தை பரப்ப முடியாது என பாடம் கற்றது கலீலியோவை தண்டித்தபின்னர் பழமையைவிட்டு அறிவியலோடு பயணிக்கத்தொடங்கியமை புரட்சிக்குப்பின்னர் பைபிளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்தமை என கத்தோலிக்க கிறிஸ்தவம் ஒவ்வொரு நிகழ்விலும் அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டே வந்துள்ளது .

கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் ஏசு தனக்குப்பின் தனது சீடர்களை வழிநடத்தும் பொறுப்பினை முதன்மை சீடரான (பீட்டர்) பேதுருவிடம் ஒப்படைத்தார் . பேதுருவின் தலைமையில் கிறிஸ்தவம் கட்டமைக்கப்பட, கோபம் கொண்ட ரோம் பேரரசன் நீரோ , பேதுருவை தலைகீழாக சிலுவையில் அறைந்தும், மற்றுமொரு சீடரான paulஐ தலை துண்டித்தும் கொல்ல உத்தரவிட்டான் . பேதுரு கொல்லப்பட்ட இடத்தில்தான் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடம் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ளது .

எனினும் எந்த பழமைவாதத்திற்கு எதிராக ஏசு, கிறிஸ்தவத்தை கட்டியெழுப்பினாரோ அதே பழமைவாதத்தில் ஊறித்திளைத்தது கிறிஸ்தவம் . போப்பாண்டவர்கள் தங்களை கடவுளின் நேரடிப்பிரதிநிதியாகவே பிரகடனப்படுத்தினர்.சுமார் 1500 ஆண்டுகள்வரை தொடர்ந்த இந்த பழமைவாத நம்பிக்கைகளின்மீது முதல் கல்லை எறிந்தவர் “நிக்கோலஸ் கொப்பனிக்கஸ்” 1543ல் மரணப்படுக்கையில் இருந்த அவர் பிரபஞ்சத்தின் மையம் சூரியன்தான் எனவும் பூமி உள்ளிட்ட கோள்கள்தான் சூரியனை சுற்றிவருகின்றன எனக்கூறிய புதிய கொள்கை, பைபிளின் சூரியன் மற்றும் பூமி பற்றிய கோற்பாடுகளை கேள்விக்குடுற்படுத்தியதை ஏற்க மறுத்தது உலகின் மிகப்பெரிய மதமான கத்தோலிக்கம். இதனையடுத்து 1600களில் இதே கொள்கையினை தூக்கிப்பிடித்தார் வானியல் ஆய்வாளர் புரூனோ. இத்தாலியை சேர்ந்த புரூனோ கத்தோலிக்க விதியை மீறியதாக திருச்சபையால் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்குள்ளானபோது “தான் கூறியது அனைத்தும் தவறு என சிலுவையைப்பிடித்து மன்னிப்புக்கேட்டால் அவரை விடுவித்துவிடுவதாக திருச்சபைகூற அதனை ஒப்புக்கொள்ளாத புரூனோ எரித்துக்கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபஞ்சத்தின் மையம் சூரியன்தான் எனும் கருத்து மீண்டும் பூதாகாரமானது “கலிலியோ” மூலம் . கொப்பனிக்கஸின் கருத்துக்களை உண்மை என நிரூபித்த கலீலியோவை வாழ்நாள் சிறைத்தண்டனை கொடுத்து திருச்சபை தண்டித்தபோது, நீண்ட போராட்டத்தின்பின் அந்த சிறைத்தண்டனை “மதத்திற்கு எதிராக எந்த ஆய்வினையும் செய்யக்கூடாது “என்கிற நிபந்தனையின்பேரில் வீட்டுக்காவலாக மாற்றப்பட்டது. “தான் உறுதியாக நம்பிய ஒன்றை , தன்னால் நிரூபிக்க முடிந்தவொன்றை இல்லை என்று கூறியதோடல்லாமல் அதற்கான தண்டனையையும் பெற்ற கலிலியோ, கண் பார்வையும் பறிக்கப்பட்டு தன்னுடைய எழுபத்தேழாவது வயதில் 1642 இல் இறந்துபோனார் . அன்று எந்த மதம் அவருடைய ஆய்வுகளை அழிக்க முற்பட்டதோ அந்த மதமே பின்னாளில் அவருக்காக மன்னிப்புக்கோரியதுடன் அவரது கோற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டது .

கலீலியோவிற்குப்பின் கத்தோலிக்க கோற்ப்பாடுகளை, போப்பாண்டவர்களின் அதிகாரங்களை கேள்விக்குள்ளாக்கியவர்களில் முதன்மையானவர் மார்ட்டின் லூதர். இவர்தான் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் புரட்டஸ்தாந்து எனும் மதம் உருவாக காரணமாக இருந்தவர் . பைபிளை லத்தீன் மொழியில்தான் படிக்க வேண்டும் , தேவாலயத்தில் மட்டுமே பைபிள் இருக்கவேண்டும்  அதனை பாதிரியார்கள் மட்டுமே வாசிக்கலாம், மக்களின் மொழியில் மொழிபெயர்க்கக்கூடாது, தேவாலயங்கள் மன்னர்களைவிடவும் உயர்வானது என்கிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த பலரும் எரித்துக்கொல்லப்பட்டநிலையில் , இந்த சர்வாதிகாரங்களையெல்லாம் கடுமையாக எதிர்த்தவர் மார்ட்டின்.

திருச்சபை வழங்கிய மரண தண்டனையில் இருந்து நான்குமுறை அதிஷ்டவசமாக தப்பிய மார்ட்டின் லூதர், முதன்முறையாக ஜேர்மனிய மொழியில் பைபிளை மொழிபெயர்த்தமைக்கு கிட்டிய பெரும் வரவேற்பு கத்தோலிக்க போப்புகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது . மார்டினை கொல்ல எந்த கத்தோலிக்கம் உத்தரவிட்டதோ, அந்த கத்தோலிக்கமே மெல்ல மெல்ல மார்ட்டின் சொன்ன சீர்திருத்தங்களை செய்ய ஆரம்பித்தது . எந்த பைபிள் லத்தீன் தவிர வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதோ அந்த பைபிள்தான் இன்று உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.

அதுமட்டுமன்றி மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என டாவின்சி சொன்னபோது அவருக்கும் எதிராக செயற்பட்டது வத்திக்கான் . காரணம் மனிதனை கடவுள் படைத்தார் என்பதுதான் பைபிளின் அடிப்படை . மனிதர்களின் முன்னோர்கள் கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டவர்கள் என்றும் அதற்கு எதிராக பேசுபவர்கள் பரிசுத்த வேதாகமத்திற்கு எதிரானவர்கள் என அறிவித்த கத்தோலிக்க பாதிரியார்கள், டார்வினை நாயைவிட கேவலமானவர் என விமர்சித்தனர் . ஆனால் 1996ம் ஆண்டு “டார்வின் கூற்று “ கிட்டத்தட்ட சரி என்பதுபோல் ஒப்புக்கொண்டது கத்தோலிக்கம் . இப்படி சீர்திருத்தங்களை எதிர்த்து போப்கள் செய்த வரலாற்று பிழைகளை நாளடைவில் சரிசெய்துகொண்டே வந்திருக்கிறது கத்தோலிக்கம்.

“Pop pius xll” ஹிட்லருக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கினார் என்கிற ஓர் குற்றச்சாட்டும் “hitlar’s pope the secret history of pius xll” (நூலாசிரியர் john cornwell)என்கிற நூலினூடாக முன்வைக்கப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது . லட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்டபோது அதற்காக வாய் திறக்காமல் மௌனம் காத்த pius xll ஹிட்லர் ஆட்சியை பிடிக்கவும் மறைமுகமாக உதவினார் என குற்றம்சாட்டுகிறது இந்நூல் .

Pop pius xll ஆம் பயசுக்குப்பின்னர் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர் pop benedict XVI கத்தோலிக்க கிறிஸ்தவர்களாலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட போப்பாண்டவர் இவரே . ஏனெனில் கத்தோலிக்கத்தை பொறுத்தவரை ஓரினச்சேர்க்கை , கருக்கலைப்பு , விவாகரத்து போன்றவை மதத்திற்கு எதிரானதாக கூறப்படுகிறது . கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் மிகப்பெரிய குற்றச்சாட்டாக எப்போதும் எழுப்பப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றவேண்டும் என எண்ணியவர் . பாதிரியார்கள் செய்யும் பாலியல் அத்துமீறல்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் பாதிரியார்களால் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர் சிறுமிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியவர்.

திருச்சபையிலிருந்து தானாக ஓய்வு பெற்றுக்கொண்ட போப்பும் இவர்தான் . கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் பலவற்றையும் போப் பெனட்டிக் கேள்விக்குள்ளாக்கியமையும் அவர்மீது நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டு பதவிவிலக நிர்பந்திக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது . (ஆனால் Pop benedict ஓரினச்சேர்க்கையாளர் என்கிற குற்றசாட்டு தொடர்ந்துகொண்டேயிருந்தது ) டிசம்பர் 25ஆம் திகதியை ஏசுவின் பிறந்தநாளாக கொண்டாடினாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என தனது நூலில் (the sprit of the liturgy ) குறிப்பிட்டதுடன் ஏசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்பதையும் மறுத்தார் பெனட்டிக் . இப்படி தொடர்ந்தும் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருந்த நிலையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் . ஆனால் தனது ராஜினாமாவிற்கான காரணத்தை மட்டும் கடைசிவரையில் வெளியிடவேயில்லை அவர் .

லத்தீனில் இருந்த பைபிளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டமை, உலகம் உருண்டை என ஏற்றுக்கொண்டமை விதவைகள் மறுமணத்தை ஏற்றுக்கொண்டமை என கத்தோலிக்கம் ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் பல சர்ச்சைகள் மற்றும் புரட்சிகள் மூலமாகவே ஏற்பட்டுள்ளது .அண்மைக்காலங்களில் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற குரல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. எனினும் இந்த மாற்றம் நிகழுமா என கூற முடியாவிட்டாலும் மாற்றங்களுக்கான பாதையை நோக்கி கத்தோலிக்கம் பயணிக்கவேண்டியுள்ளது. காரணம் மாற்றங்களால் மட்டும்தான் கத்தோலிக்கம் உலகத்தில் இன்றுவரை மிகப்பெரிய மதமாக இருக்கிறது என்பதை வாத்திக்கானில் மன்னராக அமர்ந்துள்ள போப்பாண்டவர்களும் அதன் நிர்வாகிகளும் அறியாதவர்களல்லர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php