Uncategorized ஆர்கலி பாடல் காணொளி – NadiReview !

ஆர்கலி பாடல் காணொளி – NadiReview !

2023 Mar 1

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி i production தாயாரிப்பில் CTP youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘ஆர்கலி’. இந்தப் பாடல், ilamaran இனால் இசையமைக்கப்பட்டு Arul Pragasam, Praniti மற்றும் Dharu இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Jony இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Suvikaran MSK இன் DIRECTION இனால் படமாக்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் Msk, Dilki Dissanayake, Aadhi, Shaja மற்றும் Kumar ஆகியோரின் கச்சிதமான நடிப்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பாடலானது கடலில் இருந்து கரையை நோக்கி ஒரு படகு நகர்ந்துக் கொண்டிருக்கும் காட்சியோடு ஆரம்பமாகி அதை தொடர்ந்து கரைக்கு வந்தவர்கள் வலைகளில் உள்ள மீன்களை பிரித்து எடுப்பதோடு நகர்கிறது. வலைகளை பிரித்து மீன்களை தனிமைப்படுத்தும் கரங்களில் ஒன்றாக கதாநாயகனின் அறிமுகம், அவன் கவனத்தை சிதறடிக்கும் காட்சியோடு கதாநாயகியின் அறிமுகம். கதாநாயகியின் அறிமுகத்தோடு இசையின் பயணமும் தொடங்குகிறது. இந்த காட்சி அவள் நடை அழகோடு முற்றுப் பெற அடுத்த காட்சியானது பேரத்தில் நகர்கிறது.

பேரத்தின் போது மீன்களின் விலையை குறைக்கும் படியாக கூறிய வாடிக்கையாளரை “6000க்கு ஒத்த பைசா குறைக்க முடியாது! வேணும்னா எடு இல்லன்னா கெளம்பு! கெளம்பு! மாப்ள நீ கேளு! கேளு!” என தெனாவெட்டாக பதிலளித்து சட்டையை தூக்கி விட்டவன், கதாநாயகி வந்து கேட்டவுடன் பணமே வேண்டாம் என மறைமுகமாக, அவளுக்கு இல்லாதவையா என காதல் சொல்வதும், அதை அறிந்தும் அறியாதவள் போல் குறைவான பணத்துக்கு பேரத்தை முடித்து மீன்களை அள்ளி செல்வதும், பார்ப்போரை புன்னகைக்க செய்யும் அழகான காட்சி.

அவனது அந்நாளின் உழைப்பை அவள் தன் பிழைப்பாக மாற்றி கூறு போட்டு விற்றுக் கொண்டிருப்பதை கதாநாயகன் ரசிப்பதிலிருந்து “நெய்தல் நிலத்துக்காரி…! கயல் மீனு கண்ணுகாரி…!” என பாடலின் வரிகள் ஆரம்பமாகிறது. இந்தக் காட்சியில் கதாநாயகனின் நண்பனின் முகத்தை பார்த்த போது, என் நண்பர்களின் காதலில் நான் பட்ட அவஸ்தைகள் தான் நினைவுக்கு வந்தது. என்னை அறியாமலேயே “இந்த பசங்க லவ் பண்ணாலே இப்டி தான் ப்ரோ!” என கதாநாயகனின் நண்பனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன். பாடலானது வரிகளோடும் இசையோடும் பிறழ்வுகள் இன்றி பிண்ணிப்பிணைந்து நகர, கதாநாயகன் கதாநாயகியை துரத்தி துரத்தி ரசித்து ரசித்து காதல் செய்யும் காட்சிகளும் கூட்டு சேர்ந்து கொண்டன.

கடலலைகள் முத்தம்மிட்டு மீண்டும் முத்துக் குளித்து அலைகளை அள்ளி இருவரின் பாதங்களையும் தொட்டு காதலின் வெப்பம் தீண்டாத படி தணித்துக் கொண்டிருக்க, சற்று மணலில் பாதம் நகர்ந்ததும் அவளின் கையை பிடித்துக் கொண்டான். இந்த இடத்தில் கதாநாகியின் கூந்தல் அவிழ்ந்த நிலையிலிருந்து மாறி பிண்ணிக் கொண்டிருக்கும், செக்கன்களுக்குள் கூந்தலை வாரி எடுத்து பிண்ணிய விந்தையை எண்ணி, INSTAGRAM REELஇல் வரும் பையன் போல் “ஹேய் எப்புட்றா!?” என வியப்பிலிருந்த என்னை, கதாநாயகி அவன் கைகளை உதறாது மெல்ல பொறுமையாக பின்னால் திரும்பி பார்த்து, “கையப் பிடிச்சுட்ட! கடைசி வரைக்கும் பார்த்துப்பியா?” என கதாநாயகி கேட்ட கேள்விக்கு கதாநாயகன் கூறிய பதிலானது வேறு ஒரு மனநிலைக்கு தள்ளி விட்டது.

பாடலின் CINEMATOGRAPHY, கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் BACKGROUND காட்சிகள் ஆகியன பாடலின் காணொளியை உயிரோட்டம் உடையதாக மாற்றி உள்ளன. இந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்த போது இந்திய திரைப்படங்களாக மரியான் மற்றும் நீர் பறவை ஆகியன என் நினைவலைகளுக்குள் எட்டி பார்த்து நகர்ந்தன.

இந்த பாடலில்
“உன்ன மட்டும் இங்க சேர வேணும்
ஒன்னா போக கூட வாடி!
உசுரா உன்ன பார்த்துப்பேன்!
என்ன நீயும் நம்பி வாடி!” என்ற வரிகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. இந்தப் பாடலில் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வரிகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

நாடி Verdict – 9.9/10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php