அழகை நாடி சருமத்திற்கு பாதகம் விளைவிக்கும் பொருட்கள்

சருமத்திற்கு பாதகம் விளைவிக்கும் பொருட்கள்

2021 Apr 10

“ஒரே நாள் இரவில் பளிச்சிடும் முகம்…! ஒரே நாளில் பருக்கள் மாயமாக மறைந்திடும்…!” என பரிந்துரைக்கப்படும் அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் உண்மையில் நம் சருமத்திற்கு நன்மை தரக் கூடியதா? இதுவரை நாம் அன்றாடம் நம் முகத்திற்கு நன்மை தரும் என நாம் பயன்படுத்துபவை உண்மையில் நம் முகச் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இந்த பதிவின் மூலம் நம் முகத்தின் சருமத்திற்கு நாம் பயன்படுத்தக் கூடாத, பாதகம் விளைவிக்க கூடிய பொருட்கள் பற்றி அறிவோம்.

சாதாரண சோப்

சாதாரண சோப்களினை தயாரிக்கும் போது sodium lauryl sulphate பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு anionic detergent வகையாகும். இதனால் நம் முகத்தின் சருமம் வரட்சியானதாகவும் கடினமானதாகவும் மாறுவதோடு சருமப் பிரச்சனைகளுக்கும் ஆளாகிறது.

பொடி மொய்ஸ்ச்ட்ரைய்சர் (Body moisturizer)


நம் முகத்தின் சருமம் எண்ணெய் தன்மையினை சுரக்ககூடிய சபேஸியஸ் சுரப்பிகளை (sebaceous glands) கொண்டுள்ளது. பொடி மொய்ஸ்ச்ட்ரைய்சரை (body moisturizer) முகத்தில் பயன்படுவதால் அச்சுரப்பிகள் தாக்கமடைந்து தமது சமநிலையினை இழக்கின்றன.

பற்பசை (Tooth paste)
சில அழகு குறிப்பு பற்றிய காணொளிகளில் பற்பசையினை பருக்களின் கரும்புள்ளிகளை மறைக்கும் தன்மையுடைய பொருளாக காட்சிப்படுத்துகின்றனர். உண்மையில் பற்பசையினை முகத்தில் பயன்படுத்துவது ஓர் சரியான செயலா இல்லை. பற்பசையினை முகத்தில் பயன்படுத்துவதால் சருமம் வரட்சியானதாகவும், சருமப் பிரச்சனைகளுக்கும் ஆளாவதோடு, தனது நிறத்தினையும் இழக்கிறது. ஏனெனில் சருமத்தின் சராசரி ph 5.5 ஆகவும் பற்பசையின் சராசரி ph 8 ஆகவும் காணப்படுகிறது.

தேசிக்காய்


தேசிக்காய் போன்ற சிட்ரிக் அமிலமுடைய (citrus) பொருட்களை முகத்தில் பூசி விட்டு வெளியில் செல்வதால் phytophotodermatitis எனப்படும் இரசாயான தாக்கத்திற்கு (chemical burn) சருமம் ஆளாகிறது. இது சருமத்தில் பல பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அல்கஹோல் (alcohol)
பொதுவாக ஸ்கின் டோனர் (skin toner), ஷேவிங் போம் (shaving foam) மற்றும் after shave lotion போன்றவற்றினை தயாரிக்கும் போது அல்கஹோல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை முகத்தில் பூசும் போது குளிர்ச்சியான ஓர் உணர்வினை உணர முடிகிறது. இவற்றை முகத்தில் உபயோகிப்பதால் முகத்தில் காணப்படும் இயற்கையான எண்ணெய் தன்மை மற்றும் மிருதுவான தன்மை முற்றிலும் நீங்கி சருமம் வரட்சி தன்மையினை அடைகிறது.

வெந்நீர் (hot water)
என்றாவது ஓரிரு முறை ஸ்டீம் (steam facial) செய்வது சருமத்திற்கு நன்மை தரக் கூடியது ஆனால் அடிக்கடி வெந்நீர் கொண்டு சருமத்தினை சுத்தம் செய்வதால் சருமத்தின் மிருதுவான தன்மை இல்லாது போகிறது.

வெள்ளைப்பூண்டு
பச்சையாக பூண்டினை பருக்களின் மேல் வைக்கும் போது பருக்களின் அளவும், சிவப்பு நிறத் தன்மையும் குறைவதை காணமுடியும். பூண்டில் காணப்படும் அலிசின் (alicin) எனப்படும் பொருள் சருமத்திற்கு எவ்வளவு நன்மை தரக் கூடியதோ அதே சமயம் பாதக விளைவுகளையும் தரக் கூடியது. ஆகையால் பூண்டினை முகத்தில் பயன்படுத்தும் போது ஓர் குறிப்பிட்ட அளவினை மட்டும் பயன்படுத்துவது நன்மை தரும்.

இதுவரை மேற்கூறப்பட்ட பொருட்களை நீங்கள் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தி வந்திருந்தால் இன்று முதல் அந்த பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php