அழகை நாடி அதிகமான பாத வெடிப்புகளா?

அதிகமான பாத வெடிப்புகளா?

2020 Sep 21

நம்மில் பலரது பாதங்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் பாதங்கள் தெரியும் படியாக காலணிகள் அணிவதை நாம் தவிர்ப்பதுண்டு. இவ்வாறாக கால்களின் அழகினை சீர்குலைக்கும் பாத வெடிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய தகவல்கள்,
இதோ…! உங்களுக்காக,

பாத வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
கடினமான அல்லது அசௌகரியம் தரக் கூடிய காலணிகள் அணிதல்.

சவர்க்காரத்தில் காணப்படும் இரசாயன பதார்த்தங்களினால் ஏற்படும் ஒவ்வாமை.

சருமம் வறட்சி அடைதல்.

அழுக்கு சேர்தல்.

காலநிலை மாற்றங்கள். (குளிர் காலங்களில் காணப்படும் குளிர்ச்சியினால் சருமத்தில் ஏற்படும் வறட்சி)

பாத வெடிப்பிற்கான தீர்வுகள் என்ன?
துணிகளை சலவை செய்யும் போது அதிக நேரம் சவர்க்கார நீரில் கால்களை ஊறவிடாதிருத்தல்.

தினமும் கடுகு எண்ணெயை பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வர வேண்டும்.

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து பாதவெடிப்புகளின் மேல் பூச வேண்டும்.

ஓர் நாள் விட்டு ஓர் நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்து வந்தால் பாத வெடிப்புகளை இயற்கையாக நீக்கி கொள்ள முடியும்.

பாத வெடிப்பினை போக்குவதற்கான இயற்கை பெக் ஒன்றிற்கான படிமுறைகள்,

படிமுறை 1
நல்ல வெது வெதுப்பான ஒரு பக்கெட் நீரில் 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து ஊற விட வேண்டும். அதன் பின் ப்ரஷினால் தேய்க்க வேண்டும். (இரவு நேரங்களில் வெதுவெதுப்பான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை ஊற வைத்து, ப்ரஷினை கொண்டு தேய்த்தல்.)

படிமுறை 2
பழைய ப்ரஷினை ஒன்றினை எடுத்து கற்றாழை மற்றும் ஒரு கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து பாத வெடிப்புகளின் மேல் தேய்க்க வேண்டும். அதன் பின் அதே வெதுவெதுப்பான நீரினால் துடைக்க வேண்டும்.

இந்த படிமுறையினை செய்வதால் பாதவெடிப்புகளில் உள்ள அசுத்தங்கள் நீங்கி பாதங்கள் அழகாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php