அழகை நாடி தலையில் இவ்வளவு பொடுகா? தீர்வு தான் என்ன?

தலையில் இவ்வளவு பொடுகா? தீர்வு தான் என்ன?

2020 Sep 23

தலையில் காணப்படும் மேற்புள் தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகையில் செதில் செதிலாக உதிர தொடங்கும். இதனை பொடுகு என அழைக்கின்றனர். பொடுகு உதிர்ந்து ஆடைகளில் படிந்து விடுமோ என்ற அச்சத்தினால் நாம் கடும் நிற ஆடைகளை அணிவதையே நிறுத்தி விடுகிறோம். இந்த பொடுகு ஏன் வருகிறது? மற்றும் இதற்கான தீர்வுகள் என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்கள்,
இதோ! உங்களுக்காக,

 

பொடுகு வருவதற்கான காரணங்கள் என்ன?

அவசர அவசரமாக தலைக்கு குளித்தல்.

நன்றாக தலையை துவட்டாதிருத்தல்.

தண்ணீர் மற்றும் சோப் தண்ணீர் ஆகியன தலையில் தங்கி விடுதல்.

ஒழுங்காக குளிக்காமல் இருப்பதால் தலையில் உற்பத்தியாகும் வியர்வை தலையிலே தங்கி விடுவதல்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பினை இன்னொருவர் பயன்படுத்துவது.

பொடுகிலிருந்து வெளி வருவதற்கான வழிகள் என்ன?

தேசிக்காய்

இரு துண்டுகளாக வெட்டி தேசிக்காயின் சாற்றை தலையில் நன்றாக பூச வேண்டும். அரை மணிநேரம் சூரிய வெளிச்சம் தலையில் படும் வரை இருந்து விட்டு நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை குளிப்பதற்கு முன் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

வெந்தயம்

வெந்தயத்தை பொடியாக அரைத்து குளிக்கும் போது ஷம்புவாக பயன்படுத்தி தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அருகம்புல்

அருகம்புல் சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, தினசரி தேய்த்து வர வேண்டும்.

ஒலிவ் எண்ணெய்

தினமும் குளிப்பதற்கு முன் ஒலிவ் எண்ணெய் தடவி குளிக்க வேண்டும்.

ஒரு சிட்டிகை துளசிச் சாறு, ஒரு சிட்டிகை வேப்பிலை சாறு ஆகியவற்றை கற்றாழை ஒரு துண்டுடன் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து குளிக்கும் போது ஷம்புவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவற்றை கடைப்பிடித்து வருவதால் தலையில் உள்ள பொடுகு நீங்கி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php