அழகை நாடி பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி.

பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி.

2020 Oct 7

பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி. இது ஏற்கனவே பேன் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு மேற்கொள்வதன் மூலம் அதாவது அவர்கள் உடுத்திய உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வருவதற்கு வாய்ப்புண்டு. பேன் தலையில் அதிகமாக இருப்பதால் சுகாதாரமற்றோர் என பிறர் நம்மை அடையாளப்படுத்தக் கூடும். பேன் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கான இயற்கையான வழி முறைகள் சில,

இதோ…! உங்களுக்காக,

சீதாப்பழம்

சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து முதல் நாள் தடவி மறு நாள் காலை வெதுவெதுப்பான நீரில் குளித்து வர வேண்டும்.

வேப்பிலை மற்றும் துளசி 

வேப்பிலை மற்றும் துளசியினை நன்றாக அரைத்து, அதை தலையில் நன்றாக தேய்த்து காய்ந்ததும் குளிக்க வேண்டும். இதனை வாரம் இரு தடவைகள் செய்ய வேண்டும்.

பூண்டு 

பூண்டை நன்கு அரைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

வெந்தயம்

ஊற வைத்த இரண்டு தேக்கரண்டி வெந்தயத்துடன் அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மைப்போல அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.

இவற்றை செய்வதால் பேன் தொல்லையிலிருந்து விரைவில் வெளி வர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php