கவிதைகள் உலகை நாடி சமூக வலைத்தளங்களின் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட பார்வையில்

சமூக வலைத்தளங்களின் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட பார்வையில்

2021 Sep 30

எம் நாடானது மேலத்தேய நாடுகளை விட 30 வருடங்கள் பின் நோக்கி காணப்பட்டாலும் 2009 ஆண்டிற்குப் பிற்பாடான காலப்பகுதி தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப ரீதியில் பாரிய வளர்ச்சியை அடைந்ததுள்ளது. Net Cafe சகாப்தம் முடிவுக்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் இணைய இணைப்பு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளதை காணமுடிவதாக உள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலியமாக இருக்கும் Tinder போலவே அன்று Facebook ஒரு விம்பத்தை கொடுத்தாலும், தற்போது அது ஓர் முற்றிலும் வேறுபட்ட வடிவம் ஒன்றை எமக்குக் காட்டி வருகின்றது. வயது, இன பேதமின்றி அணைத்திட மக்களும் தங்களது அன்றாட சீவனோபாயங்களில் ஒன்றாக சமூக வலைத்தளங்களைக் கருதத் தொடங்கியுள்ளனர். அதேபோல் வளர்ந்து வரும் சந்ததியினரைத் தொழில் முனைவோராக மாற்றுவதிலும் ஊக்குவிப்பதிலும் பாறிய பங்களிப்பை அளித்து வருகின்றது என்பதை எவரினாலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை இருப்பது போல் சமூகவலைத்தள பாவனை மக்களிடையே எவ்வகையான எதிர் வினைகளையும் யதார்த்தத்தையும் கொண்டு அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

கருத்துச் சுதந்திரம் என்பது எமக்குக் கிடைக்கும் உரிமைகளுள் ஒன்றாகும். ஆம், நாம் நிச்சயமாக எமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமம் எமக்கு உண்டு. ஆனால் அதை மற்றொருவர் மீது எந்த அளவிற்குத் திணிக்கமுடியும் என்ற கேள்விக்கு சரியான வரைவிளக்கணம் எவரினாலும் கூற முடியாதுள்ளது. அதுபோலவே கருத்து உரிமம் என்ற பெயரில் ஒரு தனி நபர் மீது குற்றம் சுமத்துதல் அல்லது அவதூறு விளைவித்தல் என்பது இலங்கை சட்டத்திற்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாகும். Facebook மற்றும் Twitter போன்ற சமூக இணையதளங்கள் பொழுதுபோக்கு அம்சமாக அனைவரினது மனதில் நீங்கா இடம் பிடித்தாலும், காலப்போக்கில் அவை ‘தான் சொல்வது தான் சரி’ என்ற அடிப்படையில் அனைவரும் கருத்து தெரிவிக்கும் நூலாகவும் மெய் நிகர் செய்தி அறியும் கருவியாகவும் அமைந்துள்ளது.

தற்போதைய மக்கள் Negativity என்ற அம்சத்தில் சற்று கரிசனை காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனாவின் பிற்பாடான காலப்பகுதி இறப்பு, நோய், வறுமை போன்ற காரணிகளின் சித்தரிப்பு சமூக வலைத்தளங்களில் அதிகமாகக் காணப்படுவதால் இவற்றில் இருந்து விலகி இருப்பதில் விருப்பம் காட்டிவருகின்றனர். இதனால் வயது முதிர்ந்த பெற்றோர்கள் நாட்டம் கூட புகைப்படம், காணொளி என்பவற்றை மையமாக வைத்து முற்று முழுக்க பொழுது போக்கிற்காக இயங்கும் Instagram, TikTok என்பதன் பக்கம் திரும்பி உள்ளதை எம்மால் காண முடிகிறது.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாம் தோற்றுப்போன விடயங்களில் ஒன்று தான் இந்த வெறுப்பூட்டும் பேச்சு (Hate Speech) மற்றும் தூண்டும் சொற்பிரயோகங்கள் (Provoking) என்பனவாகும். இது தொடர்பிலான விழிப்புணர்வு மக்களிடையே போதுமானதாக இல்லை என்பது பலரின் கருத்தாக அமையப்பெற்றுள்ளது. இதனால் உலகில் அதிகளவான தடவை சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இலங்கை முன்வரிசையில் திகழ்கிறது என்பது வேதனை அளிக்கும் விடயமாகும். ஆகவே நாம் சமூக வலைத்தளங்களில் பிரயோகிக்கும் கருத்துக்களுக்கும் பதிவுகளுக்கும் நாம் பொறுப்பு மிக்க குடிமகன் என்ற அடிப்படையில் நடந்து கொள்வதோடு சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் முகமாக ஏதேனும் பதிவு காணப்பட்டால் அதனைப் பகிர்ந்து அதனை மேலும் விரிசலாக்கும் முகமாக மாற்றாமல் அவற்றை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும் செயல்முறைக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அது போலவே நாளுக்கு நாள் மக்களிடையே அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும் அநேகமான கருத்துக்கள் ஓர் குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிக்கும் முகமாக அமையப்பெற்றுள்ளது என்பதைக் காண முடியுமாக உள்ளது. உண்மையான காரணத்திற்கு விமர்சிப்பது தவறன்று எனினும் விமர்சிப்பதற்கோ அல்லது கருத்து தெரிவிப்பதற்கு முன்பு வேறொருவர் பகிர்ந்ததன் நிமித்தம் பகிராமல் அதன் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றைக் கருத்தில் கொண்டு பகிர்ந்தல் வரவேற்க்கத்தக்கது.

ஒருவர் மீது குற்றம் சுமத்துதல் இலகுவான காரணமாக அமையலாம். எனினும் அது போன்ற குற்றச்சாட்டு எமக்குச் சுமத்தப்பட்டால் அதன் அழுத்தத்தை எதிர் நோக்குதற்கு நாம் தயாராக உள்ளோமா என்பதோடு சுய விசாரணை செய்துகொள்வதோடு சமூக வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தைக் கருத்தில்கொண்டு அதன் நன் விடயங்களை மாத்திரம் பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் முயல்வதோடு தேவையற்ற இனவிரிசல் பற்றும் கருத்துக்களில் இருந்து விலகி நடக்க முயல்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php