மனிதர்களை நாடி Happy Birthday கிங்கோலி!

Happy Birthday கிங்கோலி!

2022 Nov 4

கிங் கோலினு சொன்னா? மைதானத்துல கைதட்டல் சத்தம் சும்மா பந்து மாதிரி நாலு பக்கமும் பட்டுத்தெரிக்கும். அப்படியொரு ரசிகர் கூட்டமிருக்குற ஒருத்தர் தான் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இப்போ இந்திய கிரிக்கட் அணியின் கேப்டனா இருக்குற நம்ம விராட் கோலி. ‘அடுத்த சச்சின் இவரு தான் பா’ அப்படினு எல்லாருமே விராட்கோலிய சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கு ஏத்தமாதிரியே பேட்டிங்ல சும்மா பொளந்து கட்டிருவாரு நம்ம கிங் கோலி. இந்தியா தன்னோட சொந்த மண்ணுல நடந்த டெஸ்ட் தொடரில அவுஸ்திரேலியாவ தோற்கடிச்சதா சரித்திரமே இல்ல. இந்த சரித்திரத்த மாத்தி எழுதினாரு நம்ம கிங் கோலி. 72 வருஷமா யாருமே செய்யாத இந்த சாதனையை விராட் கோலியின் கேப்டன்ஷிப்ல இந்திய அணி நிகழ்த்தியிருக்கு. அப்போ இந்திய அணி கேப்டன் கோலிய கிங் கோலினு கொண்டாட ஆரம்பிச்சாங்க. அவருக்கு தான் இன்னைக்கு பிறந்தநாள்.

இந்தியாவுல புதுடில்லில வாழ்ந்து வந்த ஒரு பஞ்சாபி குடும்பத்துல 1988 நவம்பர் 05 ஆம் திகதி விராட் கோலி பிறந்தாரு. அவரோட அப்பா பிரேம் கோலி அம்மா சரோஸ் கோலி. விராட் கோலிட அப்பா ஒரு வழக்கறிஞர். விராட் கோலிக்கு விகாஷ் கோலினு ஒரு அண்ணாவும் பாவ்னா கோலினு ஒரு அக்காவும் இருக்காங்க. அப்படி பாத்தா இந்த பஞ்சாபி குடும்பத்துல நம்ம விராட் கோலி தான் கடைக்குட்டி சிங்கம். குழந்தைகள் எல்லாருக்குமே விளையாட்டுனா ரொம்ப பிடிக்கும். நம்மவிராட் கோலிக்கும் அப்படித் தான். ஆனா விராட் கோலி தன்னோட 3 வயசுலயே ‘அப்பா பந்த போடுப்பா’ அப்படினு சொல்லி அப்பா கூட சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சாரு.

அடேங்கப்பா நம்ம இந்திய டீம்கு ஒரு கிரிக்கட் ப்ளேயர் கிடைச்சிட்டாரு அப்படினு செல்லமா கிண்டலடிச்சாங்க விராட் கோலியின் குடும்பம். அன்னைக்கு அவங்க சொன்மாதிரிதான் இன்னைக்கு நடந்துருக்கு. சும்மா 3 வயசுல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சு 30 வயசுல இந்தியாவோட மிக முக்கியமான பேட்ஸ் மேனாக உயர்ந்து இருக்காரு விராட் கோலி.பள்ளிக் கூடத்திற்கு படிக்கப் போனது அப்பறமும் கூட விராட்டோட கவனம் எல்லாம் கிரிக்கெட்ல தான் இருக்கும். பள்ளி முடிஞ்சு வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் கூட லேட் பண்ண கூடாதுனு தான் போட்டுருக்கும் சீருடைய கூட கழட்டாம அதே ஆடையோட பக்கத்துல இருக்க கிரிக்கெட் மைதானத்துக்கு ஓடிருவாரு.

வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்க நண்பர்களோட கிரிக்கட் விளையாடுறத பழக்கமா வச்சிப்பாரு. அப்போ விராட் பேட்டிங் பண்ணுற விதத்த பார்த்து எல்லாருமே வாயடைச்சு போவாங்களாம். இவனோட ஆடுறதே கஷ்டம்னு சொல்லி அவங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வாங்களாம். ஏனா அப்போ விராட்டோட விக்கெட்ட கழற்றதுங்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம். விராட்கு எதிரா விளையாண்டு ஜெயிக்க முடியாதனால கிரிக்கெட் விளையாட அணி பிரிக்கிறபோ எல்லாரு விராட் இருக்க பக்கமா போக அடம்பிடிப்பாங்களாம். சிலசமயம் விராட்டையே தன் அணிக்குள்ள சேர்த்துகொள்ள முந்துவாங்களாம்.

இப்படி சின்ன வயசுலயே கிரிக்கெட் விளையாடுறதயே விரும்பி செய்து அதுக்காக நிறையவே பயிற்சி எடுத்துருக்காரு விராட். கிரிக்கெட் விளையாடுறது மட்டுமல்லாம நல்ல படிக்கவும் செய்வாரு. இதனால ஆசிரியர்களோட ஒரு ஃபேவரிட் ஸ்டுடன்ட் ஆகவும் விராட் இருப்பாரு. விராட்டோட கிரிக்கெட் விளையாடும் திறமைய பார்த்து பாடசாலையிலயே நிறைய பேர் அவரோட அப்பாவ பார்த்து ‘இவனுக்கு நல்ல திறமை இருக்கு. இவன கிரிக்கெட் பயிற்சிக்கு சேர்த்து விடுங்க’ அப்படினு சொல்லி இருக்காங்க. இதெல்லாம் கேட்டு சந்தோஷப்பட்ட விராட்டோட அப்பா எப்படியாவது தன்னோட மகன கிரிக்கெட் அகெடமியில சேர்க்க முடிவு செய்தாரு.

அதுபடி 1998 ஆம் ஆண்டு 9 வயசுல விராட் கோலி மேற்கு டெல்லி கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தாரு. ராஜ்குமார் சர்மாவோட வழிகாட்டுதலின் கீழ் பயிற்சியும் எடுத்தாரு. அதுவரைக்கும் விஷால் பாரதி பொது பாடசாலையில் படிச்சிட்டு இருந்த கோலிய கிரிக்கெட் மைதானமும் கிரிக்கெட் பயிற்சியும் இருக்குற சேவியர் கான்வென்ட் பஸ்சிம் விஹார் எனும் தனியார் பாடசாலைக்கு மாத்திட்டாங்க.
அங்கேயும் கிரிக்கெட் விளையாடுறதுல விராட் தான் கிங். அங்க அவருக்குனே ரசிகர் பட்டாளமும் சேர ஆரம்பிச்சுட்டு. நீண்ட நாள் பயிற்சிக்கு அப்பறமா 2002 ஒக்டோபர்ல முதன்முறையாக 15 வயதுக்குட்பட்ட டெல்லி அணிக்காக விராட் விளையாடினாரு. அதே ஆண்டு விளையாடிய எல்லா கிரிக்கெட் போட்டியிலயுமே ரொம்ப குறுகிய காலத்திலையே அதிக ரன்கள் அடிச்சு கெத்து காட்டினாரு.

விராட்டுக்கு 18 வயசாகும் போது சரியா 2006 ஆம் ஆண்டு விராட் ரஞ்சி கோப்பைக்காக விளையாடிட்டு இருந்தாரு. எதிர்பாராத விதமா அவரோட அப்பா இறந்துட்டாரு. ரஞ்சிப் போட்டியில பேட்டிங் செய்தபோ 90 ரன்களை அடிச்சு அசத்தினாரு விராட். ஆட்டமெல்லாம் முடிஞ்சு அறைக்குள்ள வந்ததும் அப்பாவ நெனச்சி கதறி அழுது இருக்காரு விராட். அப்பா இறந்தானால குடும்பம் ரொம்பவே கஷ்டத்துல இருந்தாங்க. வாடகை வீட்டுல தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுச்சு. இருந்தாலுமே விராட் தன்னோட கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தையும், பயிற்சியையும் கைவிடல.

2006 ஆம் ஆண்டு விராட் 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றாரு. மூன்று நாள் ஒருநாள் போட்டியில சராசரியாக 105 ரன்கள் அடிச்சு வெற்றியோடு திரும்பினாரு. 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் டி20 சாம்பியன்ஷிப்பிற்கு அறிமுகமானாரு. அவருடைய அணிக்காக அதிக ரன் அடிச்சவரும் இவர் தான். அதே ஆர்வத்தோட 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி தானொரு சிறந்த பேட்ஸ்மேன் அப்படினு எல்லாருக்குமே நிரூபிச்சு காட்டினாரு விராட். இதுக்கு அப்பறமா அதே ஆண்டு மார்ச் இந்தியாவோட 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் நியமிக்கப்பட்டாரு. இந்த அணியோட மலேசியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டவங்களுக்கான உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியோடு நாடு திரும்பினாரு விராட். மைதானத்தில அந்த வெற்றிய கொண்டாடின விராட்ட இந்தியாவே கொண்டாட ஆரம்பிச்சது.

அதுக்கு அப்பறமா இலங்கையோட நடந்த 2011 ICC World Cup இல் விரேந்திர சேவாககும் சச்சின் டெண்டுல்கரும் ஆட்டமிழந்தபோ விராட்டுக்கு ஆரம்பத்திலையே பேட்டிங் பண்ண வாய்ப்பு கெடச்சது. 49 பந்துகளுக்கு 35 ரன்கள் அடிச்சு அந்த போட்டிய தட்டிக் கொடுத்தாரு விராட். அப்போ மீண்டுமொருமுறை விராட்டோட திறமை அந்த மைதானத்துல அங்கீகரிக்கப்பட்டது. அதுக்கு அப்பறமா விராட்டுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். தன்னோட பேட்டிங் திறமையையும், ஃபீல்டிங் திறமையையும் காட்டி கேப்டன்ஷிப்பையும் சிறப்பா பண்ணினாரு. எம்எஸ் தோனி அவரோட கேப்டன்ஷிப்பை முடிச்ச அப்பறமா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தெரிவு செய்யப்பட்டாரு விராட். ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்ஷிப் பரிந்துரைக்கப்பட்டாலுமே விராட் கோலி எந்தவொரு பரிந்துரையுமே இல்லாம தன்னோடைய திறமையினால கேப்டன்ஷிப்ப பெற்றுக்கொண்டாரு.நீண்ட காலமா இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கா விளையாடி இருக்காரு.’ஈசாலே கப் நாம்தே’ அப்படினு விராட் கோலி சொன்ன வார்த்தை ரொம்பவே பிரபலமானது. பல விமர்சகர்கள் இவரு சொன்னத விமர்சிச்சாலுமே அதுக்காக அவரு உண்மையிலேயே கடினமா உழைச்சிருக்காரு. 2013 ஆம் ஆண்டு அந்த அணிக்கான கேப்டனாகவும் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டாரு. அடுத்த சச்சின் அப்படினு விராட் கோலிய எல்லாருமே கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கார் அப்படிங்குற பெயர யாருமே முறியடிச்சது இல்ல.

ஆனா சச்சின் டெண்டுல்கார் நிகழ்த்திய சாதனைகள் ஒவ்வொன்றா முறியடிச்சிட்டு வராரு நம்ம விராட் கோலி. இதனால தான் இவர அடுத்த சச்சினு செல்லாமா அழைக்குறாங்க. அதுமட்டுமல்லாம கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி தானு ஒரு புகழும் இருக்கு. ‘கிங் கோலி’ அப்படிங்குற அடைமொழியோட அவரை ரசிகர்கள் கொண்டாடுறாங்க. 2013 மார்ச் ‘விராட் கோலி அறக்கட்டளை’ என்ற பெயரோட ஒரு அறக்கட்டளையை ஈபேயுடன் இணைந்து ஆரம்பிச்சாரு. இதனால பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவு செய்துட்டு வாராரு. 2017 ஆம் ஆண்டு விராட் கோலி போலிவூட் நடிகை அனுஷ்கா சர்மாவை கல்யாணம் பண்ணாரு. இவங்களுக்கு இப்போ ஒரு அழகான பெண் பிள்ளையும் இருக்கு.

லூயிஸ் ஹாமில்டனுக்கு அடுத்தபடியா ‘உலகிலேயே புகழ்பெற்ற இரண்டாவது விளையாட்டு வீரர்’ என்ற கௌரவமும் விராட் கோலிக்கு கிடைச்சிருக்கு. அதுமட்டுமில்லாம நிறைய நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸ்டராவும் இருக்காரு. அதுமட்டுமல்லாம அவருக்குனு தனியா ஒரு ரசிகர் பட்டாளமே இருக்குனு கூட சொல்லலாம்.விராட் கோலி ஒரு போட்டிய ஜெயிச்சா கூச்சலிட்டு கொண்டாடுறதும் அதுவே அந்த போட்டில தோற்றுபோய்ட்டா ஓவரா டென்ஷன் ஆகி கோவப்படுறது.சோகமா இருக்கது. அழுகுறது அப்படினு எப்பவுமே விராட்கோலி மேல ஒரு விமர்சனம் இருந்துட்டுதான் இருக்கு. இதுக்கு காரணம் அவருடைய சிறுவயது பழக்கம் தான்.

விராட் கோலி சின்ன வயசுலயே தன்னோட ஊருக்குல கிரிக்கெட் விளையாடி தோற்றுட்டாருனா ரொம்ப டென்ஷன் ஆகி அன்னைக்கு நாள் முழுக்க தான் தோற்று பொய்ட்டதா நினைச்சி ரொம்ப சோகமாவே இருப்பாராம். அந்த பழக்கம் தான் இன்று வரைக்கும் விராட் கோலிகிட்ட இருந்து வருது. அதுவும் குறிப்பா சொல்லனும்னா இந்தியா அணிக்காக விளையாடுறப்போ ரொம்பவே தன்னை முழுமையா ஈடுபடுத்திக் கொள்வாரு. உள்ளுர் கிர்கெட் அணியில விளையாடி வந்த யாரோ ஒரு சிறுவன் இன்னைக்கு உலகத்துக்கே தெரிஞ்ச ஒரு பிரபல விளையாட்டு வீரரா இந்திய அணியின் அசைக்க முடியாத வீரரா வலம் வந்து கொண்டுறக்க விராட் கோலி தன்னம்பிக்கை, கடின உழைப்பு,முயற்சி,வெறி, திறமையென ஒரு சாதனையாளரா பல பேருக்கு முன்னுதாரணமா வாழ்ந்துகொண்டு இருக்காரு.!

-மிஸ்டர் பொயட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php