உணவை  நாடி நவபிரசாதம் 02 | எள்ளோதரை

நவபிரசாதம் 02 | எள்ளோதரை

2020 Oct 19

நவபிரசாதம் 02

எள்ளோதரை

தேவையான பொருட்கள்
வடித்து வைத்த சாதம் – 1 கப்
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1தேக்கரண்டி
வேர்கடலை – 1/2 கப்
எள் – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையானளவு
உப்பு – தேவையானளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எள் மற்றும் 1/2 மேசைக்கரண்டிஉளுத்தம் பருப்பினை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி அது சூடானதும் காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின் மிக்ஸியில் தாளித்து வைத்த காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தோடு உப்பு தேவையானளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதன் பின் வறுத்து வைத்த எள்ளு மற்றும் உளுத்தம் பருப்பினையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, 1/2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஏற்கனவே வடித்து வைத்த சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பொடியாக்கி வைத்த பொடியினையும் தாளித்த பொருட்களையும் அத்தோடு சிறிதளவும் உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

இப்போது பூஜைக்கான எள்ளோதரை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php