அறிவியலை நாடி உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!

உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!

2022 Sep 18

உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும் பணம் கொழிக்கும் வணிகமாக மாறியிருக்கின்றது என்பதுதான் உண்மை. “தனியொருவன்” திரைப்படத்தில் உயிர்காக்கும் மருந்தை விலைகுறைவாக மக்களுக்கு கொடுக்க முடிவெடுக்கும்   மருந்துநிறுவன முதலாளியை வில்லனாக வரும் அரவிந்தசாமி கொன்றுவிடுவார்.

இதன்பின்னணியில் இருக்கும் “சர்வதேச  மெடிக்கல் மாஃபியா  நெட்ஒர்க் ” என்கிறவொன்றை அந்த படத்தில் வெளிச்சம்போட்டு காட்டியிருப்பார்கள். எயிட்ஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதன்மூலம் மருத்துவ வல்லரசாக அமேரிக்கா மாறியதுபோல  கொரோனாவை வைத்து சீனாவும் வல்லரசு திட்டம் தீட்டுகிறதா என்கிற கேள்வி நம் அனைவரிடமும் ஏற்பட்டு வருடங்கள் இரண்டு கடந்துவிட்டன!

ஜவுளித் தொழிலில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட சாயங்களுக்கு நோய்களைக்குணப்படுத்தும் தன்மை இருப்பதை ஜெர்மன் விஞ்ஞானி “Paul Ehrlich ” கண்டுபிடித்ததைத்தொடர்ந்து சாயப்பட்டறைகளெல்லாம் மருந்து நிறுவனங்களாக புதிய அவதாரம் ஏற்றன. 1920ஆம் ஆண்டுக்குப்பின்  ஏற்பட்ட தொழில்நுற்ப புரட்சி  “அலோபதி” மருத்துவத்தை அசைக்கமுடியாத சக்தியாக மாற்றியது. ” Big pharma” என்பது  உலகத்திலுள்ள மிகப்பெரிய மருத்துவ நிறுவனம்.  (மருத்துவ நிறுவனங்கள் , அரசியல்வாதிகள்  NGO நிறுவனங்கள் கைகோர்த்து செயற்படும் ஒரு ரகசிய குழு என்கிற கருத்தும்கூட உண்டு) .

இந்த குழுவினருக்கு தலைமை தாங்குவது  1930களில் தொடங்கி  மருந்து உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் நிறுவனம் அமெரிக்காவின் “Rockfellers foundation”. இந்த நிறுவனம் ஐநூற்றுக்கும்   மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு   உலக பொருளாதாரத்தை தனது கண் அசைவுகளில்  ஆட்டிப்படைத்துவருகின்றதென்றால் மிகையில்லை. Johnson & Jonson   Roche, Merck  போன்றவை அப்படிக்கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களுள் முக்கியமானவை. மருந்து வியாபாரத்தில் Rockfellers ஐ மீறி எந்தவொரு மருந்து நிறுவனமும் தலையெடுத்துவிடமுடியாது. அப்படி தலையெடுக்க நினைத்தால் தனக்குள்ள அரசியல் செல்வாக்கினைக்கொண்டு அவர்களை மூர்க்கமாக   அழித்துவிடுவார்கள்  என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு மருந்து வியாபாரத்தில் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களை பரவவிட்டிருக்கிறது Rockfellers foundation. “நம்மை எப்போதும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் மக்களை சாந்தப்படுத்துவதற்கு ஆயுதங்களைவிட மருந்தே சாதகமானது” என அறிவித்தவர் Rockfeller (நிறுவனத்தின் ஸ்தாபகர்)  . அமேரிக்கா உலகின் அசைக்கமுடியாத வல்லரசாக மாறியதற்கு இந்த மருந்து மாஃபியாக்களும்  ஒரு காரணம். இந்த பரகாசுர மருந்து வியாபாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட NGO க்கள் மூலமாக தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஆப்பிரிக்கா போன்ற  ஏழை நாடுகளில் உருவாக்குகின்றார்கள்.

இவர்களின் தகிடுதத்தங்களை  அம்பலப்படுத்தும்   எதிர்தரப்பொன்றும் செயற்படாமலில்லை. எய்ட்ஸ் முதற்கொண்டு கேன்சர்வரை எப்படி உயிர்கொல்லும் நோய்களை ஆதாரமாக வைத்து மருந்து   மாஃபியாக்கள் கொழிக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது அந்த அமைப்பு. “சர்வதேச சதிக்கோட்பாடு” என்ற பெயரில் பல்வேறு பிரபலங்களின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறது. கணனி உலகின் முடிசூடா மன்னனாகவும்  உலகின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கும் பில்கேட்ஸ்  மருந்து மாஃபியாக்களின் தூதுவராக செயற்படுகின்றார் என்று குற்றம்சாட்டுகிறது அவ்வமைப்பு.

உலகின் சக்திவாய்ந்த மருந்து நிறுவனங்களான novartis , pfizer ,  போன்ற நிறுவனங்களில் பில்கேட்ஸ் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றார். சோவியத் யூனியன் உச்சத்தில் இருந்த காலத்தில் தங்களுடைய லாபசதவீதம் குறைந்துபோனதை உணர்ந்த மருந்து மாஃபியாக்கள்  பில்கேட்ஸ் அறக்கட்டளையை ஒரு கேடயமாக பயன்படுத்த தொடங்கியதாக கூறப்படுகின்றது.

பில்கேட்ஸ் அன்ட் மெலிண்டா  கேட் அறக்கட்டளையின் (BILL & MELINDA GATES FOUNDATION ) வேலை என்னவென்றால்  ஏழை  நாடுகளில் அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துகின்றோம்  போலியோவை ஒழிக்கின்றோம் என்கிறபெயரில் ஏழை நாடுகளுக்குள் நுழையும் பில்கேட்ஸ் & மெலிண்டா  கேட்ஸ் அறக்கட்டளை அரசாங்கங்களை பின்னுக்குத்தள்ளி அந்த இடங்களில் அமெரிக்க மாஃபியாக்களுக்கு வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களை கொண்டுவருவது என கூறப்படுகிறது.

மருந்து மாஃபியாக்களுக்கு சாதகமாக செயற்படுவதில் அமெரிக்காவின் Forbes, Rockfellers போன்ற மற்ற அறக்கட்டளைகளை பின்னுக்குத்தள்ளிவிட்டுவிட்டு ஏகபோகமாக வளர்ந்துவருகிறது பில்கேட்ஸ் அறக்கட்டளை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய மருந்துகளை சோதித்துப்பார்க்கும் சோதனைச்சாலைகளாக  மூன்றாம் உலக  நாடுகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது. காரணம் மேற்கத்தைய நாடுகளில் மனிதர்களின் உடம்பில் மருந்தை செலுத்தி சோதனைகளை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் மிகமிக அதிகம். 2010ஆம் ஆண்டு முதன்முதலில் புதிய மருந்துகளின் சோதனைகளை ஆப்பிரிக்காவில் ஆரம்பித்தது பில்கேட்ஸ் அறக்கட்டளை.

 “GlaxoSmithKline” நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசி ஐய்யாயிரத்துக்கும்   அதிகமான ஆபிரிக்க குழந்தைகளின்மீது பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக சர்ச்சைகள் வெடித்திருந்தாலும் பரிசோதனை மாபெரும் வெற்றிபெற்றதாக பிரசாரம் செய்யப்பட்டது. உலகம் முழுவதிலும் அந்த மருந்தை விநியோகம் செய்யும் உரிமத்தை GlaxoSmithKline நிறுவனத்திற்கு வாங்கிக்கொடுத்து பில்கேட்ஸ் அறக்கட்டளை.

புதிய மருந்துகளை பரிசோதித்துப்பார்க்கும் சோதனை எலிகளாக மட்டுமல்லாமல்  விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் மருந்துகளை வியாபாரம் செய்யும் சந்தையாகவும் ஏழை நாடுகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை பயன்படுத்துகிறது என்கிற விமர்சனமும் உண்டு. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட “Norflam” ஐ ஆபிரிக்காவில் வியாபாரம் செய்த கதையை சொல்லலாம். கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் கிட்டத்தட்ட முப்பதாயிரம்பேருக்குமேல் வழக்குத்தொடுக்கப்பட்டதால் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட இந்த மருந்தை ஆபிரிக்க நாடுகளில் பிரச்சாரம்  செய்து விற்றுக்கொடுத்தவர் பில்கேட்ஸின் மனைவி மெலிண்டா.

சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்புக்களை சந்தித்த மருந்துகளை ஆப்பிரிக்காவுக்கு அடுத்து அவர்கள் தள்ளிவிடுவது இந்தியாவில்தான்.2010இல் பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் “PATH” எனப்படும் அரசுசாரா நிறுவனத்துடன் சேர்ந்து HPV (HUMAN PAPILLOMA VIRUS) என்கிற கர்ப்பப்பை தடுப்பூசிகளை இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய பழங்குடி சிறுமிகளுக்கு செலுத்தியதில் பல சிறுமிகள் உயிரிழந்ததுடன்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு வாழ்நாள் முழுவதிலுமான பக்க விளைவுகள் ஏற்பட்டன. எனினும் இதற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளைமீது எந்தவிதமான கிரிமினல் வழக்கும் தொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

தனக்குத் தேவையான 80% மருந்துகளை அமேரிக்கா இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்துகொள்கின்றது. ஆம்  அசைக்கமுடியாத வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமேரிக்கா தன்னுடைய தேவையில் வெறுமனே 20% மருந்தை மட்டுமே உற்பத்தி செய்கின்றது. உலக மருத்துவ சந்தையில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் அமேரிக்கா மருந்துகளை தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யாததன் பின்னணி என்ன? உலகிலேயே அதிகமான காப்புரிமைகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் ஏன் மருந்துகளை உற்பத்தி செய்வதில்லை? காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான்! எங்கே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள நிலம் நீர், காற்று முதலியன மிகவும் மாசடையும்.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மட்டுமல்லாது அந்தப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் குறைந்துவிடும் என்பது ஆய்வுகளின் முடிவு. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் மருந்து உற்பத்தி செய்யவேண்டும் என்றால் அதிக செலவும் பிடிக்கும் . மருந்து மாஃபியாக்களைக்கொண்டு உலகையே ஆட்டுவிக்கும் அமேரிக்கா சொந்த நாட்டில் மருந்து தயாரிக்காமல் இருப்பதன் பின்னணி இதுதான்.

அமெரிக்கர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு மருந்து தயாரித்துத் தரும்படியும் அதற்கு ஈடாக பல பில்லியன் டொலர்கள் கொட்டிக்கொடுக்கப்படும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் ஜேர்மனிய மருந்துக்கம்பனியுடன் பேரம்பேசியதை அந்த மருந்து நிறுவனம் அம்பலப்படுத்தியதுடன்  தாம் தயாரிக்கும் மருந்து உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்  அதில் எந்தவித லாபநோக்கமும் தமக்கு தேவையில்லை என்பதை அந்த நிறுவனமும் ஜெர்மன் அதிபரும் குறிப்பிட்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியவொன்று.

சரி  ஏன் இத்தனை வல்லமை பொருந்திய அமெரிக்க மருந்து  நிறுவனங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் அத்தனை சுணக்கம் காட்டியது?   அந்த நிறுவனங்கள் நினைத்திருந்தால் எப்போதோ கொரோனாவிற்கான தடுப்பு  மருந்தை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால்  வழக்கம்போலவே  லாபத்தைமட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயற்பட்டமைதான் உலகம் தற்போது அனுபவிக்கும் இக்கட்டுக்கு பெரும்காரணம் என அமெரிக்க தத்துவஞானியொருவர் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது. லாபநோக்கிலிருந்து மருத்துநிறுவனங்கள் மக்கள் நலனில் அக்கறை  காட்டாதவரை இந்தநிலை தொடரும். உலகத்தையே  சுடுகாடாக  மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு வைரஸ் பரவிக்கொண்டிருக்கின்றது என தெரிந்தும்  எப்படி மருந்து மாஃபியாக்கள் மெத்தனமாக இருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.

அங்குதான் மார்க்கெட் என்கிற சூத்திரம் ஒளிந்திருக்கின்றது. ஆம் மார்க்கெட் “டிமாண்ட்“ செய்யாத ஒன்றைய மருந்து மாஃபியாக்கள் தயாரிக்கமாட்டார்கள். ஒருகட்டத்துக்குமேல் உலகம் முழுவதிலுமே கொரோனா தடுப்பு மருந்திற்கான தேவை எகிறிக்கொண்டிருக்கின்றது என தெரிந்திருந்தும் அந்த மருந்தை கண்டுபிடிப்பதில் தாமதம்    ஒருவேளை முன்னமே கண்டுபிடித்திருந்தாலும் அதனை ரகசியமாக பதுக்கி வைத்திருந்தமைக்கும் காரணம் என்ன? இதற்குமுன்னால் ஒருபெரிய பொருளாதார கணக்கிருக்கிறது.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கவேண்டும் என்றால் ஆராச்சிக்கு  பல பில்லியன் டொலர்கள் கொடுக்கப்படவேண்டும் என அமெரிக்க அரசாங்கத்திற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் மருந்து நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன . இதனை உடனடியாக ஏற்க அமெரிக்க அரசாங்கம் முரண்டுபிடித்தமையும் தடுப்பு மருந்து தயாரிக்க அவ்வளவாய் ஆர்வம் காட்டாமல் இருந்தமைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. அலோபதி மருத்துவத்தின் தாயகம் என போற்றப்படும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் தங்களுடைய வியாபாரத்திற்காக உலகமக்கள் உயிருடன் விளையாடியிருக்கின்றார்களா என்ற  விமர்சனத்திற்கு என்ன பதில்?

என்னதான் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைய 90% மக்களின்  நம்பிக்கையை பெற்ற மருத்துவமுறை என்றால் அது அலோபதிதான். போலியோ மற்றும் சின்னம்மை இல்லாத உலகை உருவாக்கியதில் அலோபதி மருத்துவத்திற்கு இருக்கும் பங்கை யாரும் மறுத்துவிடவியலாது. ஆனால் அதனை மூலதனமாக கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடிகள்தான் விமர்சனத்திற்குள்ளாகின்றன. எனினும் முட்டாள்தனமாக அலோபதி மருத்துவமுறையை எதிர்த்து பிரச்சாரம் செய்து மக்களின் உயிருடன் விளையாடும் ஒரு கூட்டமும் இருந்துவருகின்றது. காலங்காலமாக  குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகளுக்குக்கூட எதிர்ப்பைக்காட்டுபவர்கள்  இவர்கள். மருத்துவ மாஃபியா என்கிறவொன்று  எவ்வளவுக்கெவ்வளவு  ஆபத்தானதோ அதைவிட  ஆபத்தானவர்கள் இப்படி அலோபதி மருத்துவத்திற்கான எதிர்பிரச்சாரம் செய்பவர்களும் என்பதையும் நாம் கருத்திற்கொள்வது நன்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php