Uncategorized சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளுக்கு தினமொரு Fresh Juice.

சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளுக்கு தினமொரு Fresh Juice.

2022 Sep 20

அடர்ந்த கூந்தல் மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கான வழிகளை தேடி தேடி ஆராயும் நீங்கள் இவை இரண்டிற்கும் தீர்வு காண தனித்தனியே முயற்சிகள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் ஒரே தீர்வின் மூலம் இவை இரண்டையுமே சரி செய்யமுடியுமா என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்திருப்பீர்களா? அப்படி சிந்தித்திருந்தால் இதற்கான எளிய வழியை நீங்கள் ஆராய்ந்திருப்பீர்களா?
உடலின் நல்லாரோக்கியம் தெளிவான குறைபாடற்ற தோல் மற்றும் அடர்த்தியான பளபளப்பான முடி ஆகிய அனைத்திற்குமான ஒரு பொதுத் தீர்வை பெற உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

அத்தகைய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு பெற்றுத்தரும் எளிதான வழிகளில் ஒன்று பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாறுகளாகும். அவை எண்ணற்ற விற்றமின்கள் தாதுக்கள், புரதக் கூறுகள் போன்றவற்றை கொண்டவை. பெரும்பாலான தோல் பிரச்சினைகள் மற்றும் முடி உதிர்தல் போன்றன ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது அதன் அமைப்பில் நச்சுகள் குவிவதாலேயே ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படும் சாறுகள் இரத்தம், உடல் உறுப்புகள் மற்றும் சுரப்பிகளுக்கு புத்துயிர் அளிக்கின்றன. அவை நரம்புகளிலிற்கும் உறுதியை வழங்குவதோடு மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும். சாறுகள் உடலில் விரைவாகவும் எளிதாகவும் உள்நுழைந்து இரத்த ஓட்டத்தில் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. ஆகவே இதன் பலன் மிக விரைவிலேயே நம் உடலுக்கு கிடைக்கின்றது.

பழச்சாறு

பழச்சாறுகள் நீண்ட காலமாக இயற்கை மருத்துவத்தின் நம்பிக்கையாக இருந்து வருகின்றன. ஏனெனில் அவற்றின் சக்திவாய்ந்த சுத்திகரிப்பு மற்றும் நோய்களை குணப்படுத்தும் தன்மை உடலிலுள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி உடலை சுத்தப்படுத்தவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. புதிய பழச்சாறுகளை (Fresh Juice) எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. ஆரம்பகால முதிர்வு மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கிறது. தோல், முடி, கண்கள் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை உட்புறமாகவும், வெளிப்புறமாக பராமரிக்க உதவுகிறது.

ஆகவே முடி மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய தீர்வாக பழச்சாறுகள் அமைகின்றது. தினமொரு பழச்சாறை பருகிப்பாருங்கள் நாளடைவிலேயே வித்தியாசம் தென்படும். விலையுயர்ந்த முக அலங்காரங்கள் சிகிச்சைகளை விட இயற்கையான பழச்சாற்றை பருகினால் முக அழகை இயற்கையாகவும் எளிதாகவும் பெற்றிடலாம். அப்பிள், திராட்சை, தோடம்பழம், திராட்சைப்பழம், அன்னாசி, மாதுளை, மாம்பழம், ஆணைகொய்யா போன்ற பழச்சாறுகளை பருகலாம்.

பச்சைசாறு

காய்கறிகளிலிருந்து தயாரித்து பருகும் சாறுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காய்கறிகளை உண்ண விரும்பாதவர்கள் அதனை சாறாக அரைத்து பருகுவதால் முழுமையாக அதன் ஊட்டச்சத்துக்களை பெறலாம். பீட்ரூட், கரட், வெள்ளரி, தக்காளி, கீரை, முட்டைக்கோஸ், பாகற்காய் போன்றவற்றை பருகுவதால் சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பல பிரச்சினைகளை போக்குகிறது. குறிப்பாக வெளிப்புறமாகவும், உட்புறமாகவும் சருமம் தொடர்பான குறைபாடுகளை நீக்குகிறது.

சிறிய அளவில் முதலில் பருகி பின்னர் படிப்படியாக பருகும் அளவை அதிகரிக்கலாம். புதிய சாறுகளுக்கு உங்கள் உடல் பழகியவுடன் தினமும் ஒரு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். கீரை மற்றும் சோற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சை சாறு என்சைம்கள் நிறைந்ததாக கூறப்படுகிறது.இதில் கீரை, புதினா, வோக்கோசு, செலரி, வெள்ளரி, எலுமிச்சை சாறு மற்றும் புதிய இஞ்சி போன்ற கீரைகள் அடங்கியிருக்கும். இதனை நம் நாட்டு வழக்கப்படி ‘kola Kenda’ என்று கூறுகின்றோம். இது உடலின் நச்சுத்தன்மையை அகற்றி ஊட்டச்சத்துக்களை பெற்றுத்தருகிறது. மேனியையும் பராமரிப்பதோடு கூந்தலுக்கும் உறுதியைத் தருகிறது. தோல் சம்பந்தமான நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

Cold-pressed juice

குளிர் அழுத்தப்பட்ட சாறு அதாவது Cold-pressed juice ஒரு நீரியல் அழுத்தத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.இவை பெரும்பாலும் சிறப்பு அங்காடிகள் மற்றும் உணவகங்களில் கிடைக்கப்பெறும். இவை புத்துணர்ச்சியான பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து அதிகபட்ச அளவு அனைத்து சாற்றையும் பிரித்தெடுக்க அதியுயர் அழுத்தத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. Cold-pressed juice களில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த குளிர்பானத்தில் சில வெண்ணிலா பீன்ஸ், கற்றாழை, நெல்லிக்காய் போன்றவையும் அல்லது கோடை காலத்திற்கேற்ற வெள்ளரி எலுமிச்சை சாறு போன்றவையும் இணைந்து காணப்படும்.
இவை அதிக விற்றமின்களையும் தாதுப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன.
நினைவிற் கொள்ளுங்கள்.

சாறுகளை தண்ணீரோடு கலந்து தயாரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். சாற்றை வேறுபிரித்தெடுத்த பிறகு அந்த உடனேயே அவற்றை பருகவேண்டும். இதனால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அப்படியே முழுமையாக கிடைக்கும். பழம் அல்லது காய்கறி சாற்றை பெரும்பாலும் அதிகாலையில் பருகுவது அதி சிறந்த பலனைத்தரும். அதிகாலையில் பருக இயலாதவர்கள் காலையில் பருகலாம். உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற்று அன்றைய நாள் உங்கள் சருமம் புதுப்பொலிவை பெறும். சாறு தயாரிக்கப் பயன்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் புத்துணர்ச்சியானதாக இருக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு அல்லது தோடம்பழச் சாற்றை மேலதிக சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் உப்பு மற்றும் சர்க்கரை சேர்ப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். சர்க்கரை இல்லாமல் பருகும் பழச்சாறுகள் கலோரிகளை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பழச்சாறுகள் மற்றும் காய்கறிசாறுகள் தயாரிக்கப்படும் பாத்திரங்கள் அலுமினியம் அல்லது அதற்கு ஒத்த தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களாக இருக்கக்கூடாது. உணவுக் கட்டுப்பாடுகளுடன் உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால் உங்களுக்காக அனுமதிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்து உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள். சிறந்த பலனை பெற்றிட தினமொரு Fresh Juice பருகுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php