கவிதைகள் பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

2022 Oct 8

ஒவ்வொரு நொடியும்
ஊசியால் குத்திக்கொல்லும்
இப்படியொரு வேதனையை
தந்தவர்களைதான் நேசித்தோம்
என்பது காலம் கடந்த ஞானம்!

எல்லோருமே இருக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
நலம் விசாரிக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள்,
இதெல்லாம் நான் தனிமையில்
இல்லை என்பதற்கான சாட்சிகள்!!

இருந்தும்,
ஏன் இப்படியொரு தனிமை
என்னை மூடிக்கொண்டதாய்
என்னை நானே ஏமாற்றுகிறேன்?
வெறுமையாக உள்ள
என் விரல்களின் இடுக்குகளை
ஏன் பார்த்துக் கொண்டே
காலம் கடத்துகின்றேன்?

குழப்பங்களில் மட்டுமே
என் வாழ்க்கை நகர்கிறது,
என்னை குழப்பங்களுக்குள்
திட்டமிட்டு தள்ளியவர்கள்
என்னவோ நிம்மதியாக வாழ்வை
நகர்த்திகின்றார்கள்!!

அஹ்ஸன் அப்தர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php