கவிதைகள் நேசம் என்ற போர்வையில்!

நேசம் என்ற போர்வையில்!

2022 Nov 13

நானும்
நேசம் என்ற போர்வையில்
ஏமாற்றிய அந்த துரோகியும்
பார்த்துக் கொள்வதே இல்லை!

குறுஞ்செய்திகளோ
குரல் அழைப்புகளோ கூட
எங்களுக்குள் இல்லை!

ஆனால் என் நினைவுகளுக்கு
மட்டும் எந்தவித தூரமும்
வந்ததே இல்லை!

இரவுகளில் கண் விழித்து
கண்ணீர் துடைக்கும் நோய்
தீரவே போவதில்லை
மறக்கவே முடியாத நேசம் என்று!

கொண்டாடுவதை காட்டிலும்
இப்படியும் ஒரு நேசமா
என்று நொந்துகொள்ளத்தான்
முடிகின்றது!

கெட்டுப்போன உணவின்
துர்நாற்ற வாடையைப் போல
இந்த நேசம் எனக்கு
அறுவருப்பாகவே இருக்கிறது!

இப்படி ஒன்றைத்தான் நேசித்தோம்
எனும்போது உடலெல்லாம்
ஏதோவொரு இழுக்கை உணர்கிறது!

கடலளவு நேசித்த உறவொன்றை
அதே கடலளவு வெறுக்கும் நிலையில்
முடிவுரை அமையும் என்று
தெரிந்திருந்தால் முகவுரை
எழுதாமலே இருந்திருக்கலாம்!

எல்லாமுமாக இருந்த ஒன்று
எதுவோ ஒன்றை நிறைவேற்றிய
திருப்தியில் பறந்து சென்றுவிட்டது
இனி பகலென்ன இரவென்ன?

எல்லா நேரத்திலும்
ஏமாற்றத்தின் வலியை
அனுபவிப்பதைத் தவிர
வேறு ஏதாவது வழி இருக்கிறதா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php