நாடி Review காதல் வலி பாடல்க்காணொளி – Nadi Review

காதல் வலி பாடல்க்காணொளி – Nadi Review

2023 Mar 15

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி Anpumyl Thangavadivelu தயாரிப்பில் Shameel J youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘காதல் வலி’. இந்தப் பாடல், Shameel J இனால் இசையமைக்கப்பட்டு Shameel J, Abimanya மற்றும் Sri Shanker இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Thanu Thanush இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Shameel J மற்றும் Sri Shanker இன் DIRECTION இனால் படமாக்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் Vada Kila Kadaloon மற்றும் Kujashini ஆகியோரின் கச்சிதமான நடிப்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பாடலின் ஆரம்பத்தில் ஒரு இளைஞன் தனது பைக்கை நிறுத்தி சில இளைஞர்களுடன் சண்டையிட்டுக் கொள்வது போன்ற காட்சியோடு தொடங்கி அதன் பின் ஓர் நடுத்தர வயதையுடைய பெரியவர் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்து அதே இளைஞனை அடிப்பதும் சிலர் தடுப்பதும் என நகர்ந்துக் கொண்டிருக்க “அப்பா” என்ற ஓர் பெண்ணின் குரலோடு அனைவரது பிடியிலிருந்தும் நகர்த்தப்படுகிறான் கதாநாயகன்.”காதல் வலி” என்ற பாடலின் தலைப்பின் அறிமுகத்தை தொடர்ந்து கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் கோவிலுக்கு வெளியில் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் “வீட்ல பிரச்சனைடா!” என தொடங்கி காரணத்தினை உரைக்க அதனை கதாநாயகன் கேட்டவுடன் கோபம் கொள்ள அதன் பின் வீட்டில் உள்ளவர்கள் எடுத்துள்ள முடிவு பற்றி கதாநாயகி கூற “ஓ நல்லபடியா போயிட்டு வா! உன்ட lifeல இப்டி ஒருத்தன் இருந்தான்றதையே மறந்துரு!” என கூறி அவளின் அடுத்த வார்த்தைகளை கேட்க விரும்பாதவனாக நகர்ந்தான். அவனை தடுக்கவும் முடியாமல் அடுத்த வார்த்தைகளை உரைக்கவும் முடியாமல் கதாநாயகியின் உலகம் உறைய கதாநாயகன் அவளை விட்டு விலகி முன் செல்ல “நெஞ்சம் எங்கும்…” என்ற வரிகளோடு ஆரம்பமாகிறது பாடல்.

பாடலின் ஆரம்பம் தொட்டு முடிவு வரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில், காதலில் இணைந்திருந்த போது இனித்த நினைவுகள் கூட இப்போது பிரிவில் கசந்திடும் நிலையினை இருவரும் ஏற்க்க முடியாது தவிப்பமை காட்டப்பட்டுள்ளது. இருவரும் அழுவதையும் துயருருவதையும் பார்க்கும் போது “முதல்ல படிங்க அப்றம் இதெல்லாம் பார்த்துக்கலாம். இப்ப என்னத்த அழுதாலும் சேர்த்து வைக்க மாட்டாங்க.” என மனம் ஆங்காங்கே சத்தமிட்டாலும், வெளியில் இருந்து பார்க்கும் நாம் ஆயிரம் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அள்ளி வீசி விட்டு போக முடியும். அந்த சூழ்நிலைக்குள் மாட்டி தவிப்போருக்கு தானே அதன் வலிகளும் ரணங்களும் எவ்வளவு ஆழமானவை என்பது தெரியும். பாடலின் வரிகள் மற்றும் காட்சிகள் மூலமாக அந்த உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல குழுவினர் பெரிதும் முயன்று உள்ளனர். அந்த முயற்ச்சிகள் எதுவும் வீண் போகவில்லை.

இந்த பாடலுக்கான காணொளி மொத்தமாக 7நிமிடம் 40வினாடிகள் நீளமுடையது ஆனால் எனக்கு என்னவோ சீக்கிரம் முடிந்து விட்டது போன்ற உணர்வே இருந்தது. அந்த அளவுக்கு நேர்த்தியாக காட்சிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பாடலில் குறை எனக் கூறும்படி ஏதும் பெரிதாக தென்படவில்லை. பாடலின் வரிகளை இன்னும் சற்று மெருகூட்டி எழுதியிருக்கலாம். கதாபாத்திரங்களின் நடிப்பில் சில இடங்களில் சற்று அதிகமான effort போட்டிருந்தால் காணொளி இன்னும் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும். காணொளிக்கான climax twist எனக்கு தனிப்பட்ட ரீதியில் இவர்களின் பிரச்சனைக்கு சரியான முடிவாக தோன்றவில்லை. climax க்கும் காணொளியின் ஆரம்பக் காட்சிக்கும் ஒரு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளமை உண்மையாகவே நான் சற்றும் எதிர்பார்க்காத இரண்டாவது twist. எது எவ்வாறிருந்தாலும் இந்த பாடல் சிறப்பான ஒரு படைப்பு.

இந்த பாடலில்
மலராமல் போகாது நம் பூக்கள் என்றும்
பிரிவொன்றில் நம் காதல் காலம் வெல்லும்” என்ற வரிகள் என் மனதினை தொட்ட வரிகளாகும். உங்கள் மனதை தொட்ட வரிகள் எது என்பதை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Rating 8.5/10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php